சின்சினாட்டியில் வீடுகள், சாலைகளை மூடிய பனிப்பொழிவை டைம் லாப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்கள், படிப்படியாக பனியால் மூடப்படும் காட்சிகள் டைம் லாப்ஸ் முறையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மற்ற பகுதிகளை போலவே ஓஹியோ மாகாணத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவுகுறது. சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சென்றதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பனிப்புயலால் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Source link

ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்குத் தடை: தலிபான்கள்

காபூல்: ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபன்கள் தடை விதித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவிப்பு வரும் வரை ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தலிபான்களின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. … Read more

'இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்' – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

“இந்தியா மற்றும் சீனாவின் உறவுகள் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்,” என, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரு நாடுகள் எல்லையில் சீனா அத்துமீறுவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் பல ஆண்டுகளாக தொடர் கதையாக நடைபெற்று … Read more

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி| 2nd Test: India win

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மிர்புர்: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 227, இந்தியா 314 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வங்கேதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 145 ரன் … Read more

ஆணுறுப்பை இழந்த இளைஞர்… மனைவி செய்த செயல் – மிரண்டு போன மருத்துவர்கள்

2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் நான்டேஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல்வேறு தவறான சிகிச்சையால் நோயாளி ஒருவரின் ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது மருத்துவமனையில் சார்பில் இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட நபர் 30 வயதாக (தற்போது 42) இருந்தபோது ஆணுறுப்பின் புறபகுதியில் ஏற்படும் புற்றுநோயான கேர்சினோமா நோய்க்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.   பாதிக்கப்பட்ட நபர் கூறும்போது,”என் பேச்சைக் கேட்காத அந்த … Read more

நேபாள சிறையில் இருந்து விடுதலையான தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்தார்..!

நேபாள சிறையில் இருந்து விடுதலையான சார்லஸ் சோப்ராஜ், பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்தார். பிரெஞ்ச் குடிமகனான 78 வயது சார்லஸ் சோப்ராஜ், இந்திய -வியட்நாம் கலப்பு பெற்றோருக்குப் பிறந்தவராவார். ஆசியாவின் பல்வேறு நாடுகளில் 30க்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொலை செய்து தமது ஆயுளின் கணிசமான பகுதியை சிறைவாழ்க்கையில் கழித்துள்ள சார்லஸ் சோப்ராஜ் காட்மண்டுவில் இருந்து விமானம் மூலம் கத்தார் வழியாக பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் சென்றடைந்தார். (அவரை அவரது வழக்கறிஞர் இஸபெல் விமான நிலையத்தில் வரவேற்றார்.) சோப்ராஜ் … Read more

பாம் புயலால் அலறும் அமெரிக்கா – 18 பேர் பலி… 7 லட்சம் பேர் தவிப்பு!

Bomb Cyclone : அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாம் புயல் தற்போது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டிய இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.  எனவே, அங்கு மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் பனிக்காலத்திற்கு என்று தயாராகிக்கொள்வார்கள். ஆனால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்களால் நிம்மதியாக கொண்டாட இயலாதப்படி பாம் புயல் ஒன்று உருவெடுத்துள்ளது.  ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து கிளம்பியுள்ள புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

'இனி கொரோனா பாதிப்புகளை வெளியிட போவதில்லை' – சீனா அதிரடி!

இன்று முதல் கொரோனா தினசரி பாதிப்புகளை வெளியிடப் போவதில்லை என, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு … Read more

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான பனிப்புயலால் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன. நியூயார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக, பஃபலோ(Buffalo) நகரில் வீடுகளும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியால் சூழப்பட்டன. சாலைகளில் பல அடி உயரத்திற்கு குவிந்துள்ள பனியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தை எதிர்கொள்வதால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Source … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு உலக நாடுகள் பாராட்டு

ஐ.நா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக் காலத்தில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது தனது பதவிக்காலத்தை இந்த மாதத்துடன் நிறைவு செய்தது. இந்த 2 ஆண்டு காலத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா இரண்டு முறை மாதாந்திர தலைமை பொறுப்பையும் ஏற்றது. சுழற்சி முறையில் வரும் இந்த பொறுப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், … Read more