போர் தொடுப்போம்; ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் மந்திரி எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் உயிரிழந்தனர். இதையடுத்து கத்தார் மற்றும் துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. தோகாவில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19-ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே 2-ஆம் சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புலில் தொடங்கியது. இதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா … Read more

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 4 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ், டினிபிரோபெட்ரோசோவ் … Read more

அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது: கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் நிச்சயம் இடம்பிடிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். அண்மையில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ் … Read more

தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப்: அமெரிக்க உளவு துறை முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்​னாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க உளவு அமைப்​பான சிஐஏ-​வின் முன்​னாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் அரசுடனான அமெரிக்​கா​வின் உறவு மிக​வும் சிறப்​பாக உள்ளது. குறிப்​பாக அந்த நாட்​டின் முன்​னாள் அதிபர் பர்​வேஸ் முஷாரப் ஆட்​சிக் காலத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவு மிக​வும் வலு​வாக இருந்​தது. … Read more

ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம்-புதினின் நெருங்கிய உதவியாளர் சொல்கிறார்

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகி யோருடன் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் டிரம்ப்-புதின் இடை யேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்கா வில் நடந்தது. ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையே டிரம்ப்-புதின் இடையேயான சந் திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு திடீரென்று நிறுத்தி … Read more

தாய்லாந்து ராணி காலமானார் – தலைவர்கள் இரங்கல்

பாங்காக், தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது. அந்நாட்டின் மன்னராக மஹ வஜிரலொங்கொர்ன் செயல்பட்டு வருகிறது. இவரது தாயார் சிரிகிட் கிடியாகரா (வயது 93). இவர் தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி சிரிகிட் கிடியாகரா நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி சிரிகிட் மறைவையடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு பிரதமர் … Read more

இங்கிலாந்து: சிறையில் கைதியுடன் உல்லாசம்; 2-வது பெண் அதிகாரி சிக்கினார்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ஸ்டாபோர்டுஷைர் பகுதியில் உட்டாக்டர் என்ற இடத்தில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சாரா பார்னெட் (வயது 31) என்ற பெண் அதிகாரி அந்த சிறையில் பணிபுரிந்தபோது, கைதி ஒருவரிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. 2023-ம் ஆண்டில் ஆகஸ்டு 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 24-ந்தேதி வரையிலான நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும், அவர் சிறை துறைக்கான பணியில் இருந்து … Read more

அமெரிக்கா: ஹோவர்டு பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்றிரவு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்றிரவு 8.23 மணியளவில் ஹோவார்டு பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் தாக்கப்பட்டனர். எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதுபற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், 4 … Read more

காசா ஒப்பந்தம்: அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு – ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி

நியூயார்க், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கின் நிலைமை குறித்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:- சமீபத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்க ஒரு மைல்கல் ஒப்பந்தம். இ்தனை இந்தியா வரவேற்கிறது. மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும். இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக அமெரிக்காவுக்கு, குறிப்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எங்கள் … Read more

வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு ஏன்? – ட்ரம்ப்பின் ஆசையும் பின்னணியும்

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபரி அதிகாரபூர்வ வசிப்பிடம்தான் வெள்ளை மாளிகை. இது வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது உலகையே ஆட்டிப்படைக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட / எடுக்கப்படும் ஓவல் அலுவலகத்தையும் உள்ளடக்கியது இந்த மாளிகை. இந்த வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, அதில் ஒரு பால் ரூம் (ballroom – விருந்தரங்கம்) கட்ட வேண்டும் என்பது அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆசை. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் கூட அதைக் … Read more