தினசரி கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடுவதை நிறுத்திய சீனா..!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விவரத்தை வெளியிடுவதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நிறுத்தியுள்ளது. சீன அரசு வெளியிடும், தொற்று விவரங்களின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குள்ளான நிலையில், காரணம் குறிப்பிடாமல், தினசரி தொற்று பாதிப்பு விவரங்கள் வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் குறிப்புக்காக தொற்று பாதிப்பு விவரங்களை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தினசரி மில்லியன் கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாவார்கள் … Read more

மரியுபோல் நகரின் புகழ்பெற்ற திரையரங்கை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!

ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில், போரின்போது, நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கம் தற்போது தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. மரியுபோலில், போர் உக்கிரமடைந்தபோது, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் இந்த திரையரங்கில் தஞ்சமடைந்திருந்தனர். வான் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய படைகளுக்குத் தெரியும் விதமாக,  குழந்தைகள் என பெரிய எழுத்துகளால் காட்சிப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் திரையரங்கு மீது குண்டு வீசி ரஷ்ய படைகள் போர் குற்றம் புரிந்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. Source link

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி

Artic Blast Hit Christmas: குளிர்காலத்தில் உறைந்துபோன அமெரிக்காவில், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கினார்கள். சனிக்கிழமை மாலை, நாட்டின் சில பகுதிகள் பனிப்புயல் ஏற்பட்டு, அமெரிக்க மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டது. நாட்டில் எட்டு மாகாணங்களில் குளிர்கால புயல் தொடர்பான சுமார் 17 இறப்புகளை நாடு உறுதிப்படுத்தியுள்ளது, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆழ்ந்த உறைபனியில் உள்ளதாக, நியூயார்க்கின் கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார். அங்கு,  அவசர சேவைகள் செயல்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

அமெரிக்காவில், அகதிகளாகத் தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில், ‘மைனஸ்’ 6 டிகிரி குளிரில் நடுங்கியபடி காத்திருக்கும் மக்கள்..!

அமெரிக்காவில், அகதிகளாகத் தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில், கடும் குளிரில் நடுங்கியபடி ஆயிரக்கணக்கானோர் காத்துகிடக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், அகதிகள் நுழைய டிரம்ப் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இரவில், மைனஸ் 6 டிகிரி வரை குளிர் பதிவாவதால், அமெரிக்க எல்லை அருகே முகாம்கள் அமைத்து தங்கியுள்ளவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். Source link

அமெரிக்காவின் லோடி நகரத்தின் மேயராக சீக்கியர் தேர்வு| Mikey Hothi becomes first Sikh city mayor in California

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லோடி நகர மேயராக சீக்கிய வம்சாவளியை சேர்ந்த மைகிஹோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நகரத்தின் மேயராக பதவியேற்கும் முதல் சீக்கியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. மைகி ஹோதியின் பெற்றோர் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து, பிறகு அமெரிக்காவில் குடியேறியவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த நகரத்தின் மேயராக சாண்டிலர் இருந்த போது, மைகீ ஹோதி துணை மேயராக பதவி வகித்துள்ளார். தற்போது, மேயர் பதவிக்கான தேர்தலில் சாண்டிலர் போட்டியிடவில்லை. இதனையடுத்து … Read more

பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மனித இனம் அலைகிறது: போப் பிரான்சிஸ் வேதனை

வாடிகன்: பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மனித இனம் அலைகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் நாளான இன்று கிறிஸ்துமஸ் தினத்தை ( இயேசு பிறந்த தினம்) கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு, போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உலக மக்களிடம் உரை நிகழ்த்தினார். “நாம் இன்னமும் எத்தனை போர்களைப் பார்க்கப் போகிறோம். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் துயர நிலையில் இருக்கிறார்கள். … Read more

சின்சினாட்டியில் வீடுகள், சாலைகளை மூடிய பனிப்பொழிவை டைம் லாப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ..!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில், வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்கள், படிப்படியாக பனியால் மூடப்படும் காட்சிகள் டைம் லாப்ஸ் முறையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மற்ற பகுதிகளை போலவே ஓஹியோ மாகாணத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவுகுறது. சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சென்றதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பனிப்புயலால் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Source link

ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்குத் தடை: தலிபான்கள்

காபூல்: ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபன்கள் தடை விதித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவிப்பு வரும் வரை ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தலிபான்களின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. … Read more