உலக செய்திகள்
என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான் அரசு அதிர்ச்சி உத்தரவு..!!
காபூல், ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்தனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த தடைக்கு எதிராக மாணவ, மாணவிகள் மற்றும் … Read more
ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றார் சிதிவேனி ரபுகா
ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் கடந்த 2006-ம் ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஃபிராங்க் பைனிமராமாவின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 ரபுகாவிற்கு ஆதரவாகவும், 27 பேர் முன்னாள் பிரதமர் ஃபுராங்க் பைனிமராமவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்சியின் தலைவரான ரபுகா, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link
பாக்.,கில் தற்கொலை படை தாக்குதல் பயங்கரவாதிகள் உட்பட மூவர் பலி | Three killed including terrorists in suicide squad attack in Pak
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள், ஒரு போலீஸ்காரர் பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள ராவல்பிண்டி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், நேற்று முன்தினம் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரில் வந்த பெண் உட்பட இரு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அவர்களும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் – … Read more
ரஷியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பலி
சட்டவிரோதமாக இயங்கியது ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று இயங்கி வந்தது. தனியாருக்கு சொந்தமான இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. 2 மாடி கட்டிடத்தில் செயல்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் ஏராளமான முதியவர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 தளங்களிலும் பரவிய தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. ஆழ்ந்த … Read more
அமெரிக்காவில் குளிர்கால சூறாவளி : மைனஸ் 48 டிகிரி! | Winter storm in America: minus 48 degrees!
வாஷிங்டன், :மைனஸ் 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை என்ற வார்த்தையை கேட்கும்போதே முதுகுத்தண்டை உறைய வைக்கும். இந்த வெப்பநிலை அமெரிக்காவில் நேற்று முன்தினம் பதிவானது. இங்கு, குளிர்கால சூறாவளி ஏற்பட்டு, நாடு முழுதும் பெரும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர், அதாவது, 20 கோடி பேருக்கு கடும் குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; 15 லட்சம் வீடுகள், அலுவலகங்களில் மின்சார வசதி இல்லை. பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியஸ் என்பது, உறைபனி துவங்கும் … Read more
ஆப்கானில் உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிப்பு
காபூல், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் … Read more
நியூ யார்க்கில் கடும் பனிப்புயல் : பஃபலோ நகரில் வீடுகளும் வாகனங்களும் பனி சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
அமெரிக்காவின் நியூ யார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக, பஃபலோ நகரில் வீடுகளும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பனியால் சூழப்பட்டன. பனிப்புயலால், மக்கள் வீடுகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக, பஃபலோ மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கனடா – அமெரிக்க எல்லைப்பகுதியான பஃபலோ பகுதியில் உள்ள 3 பாலங்களும் மூடப்பட்டுள்ளன. Source link
முதியோர் இல்லத்தில் தீ: 22 பேர் பலி| Fire at nursing home: 22 killed
மாஸ்கோ,ரஷ்யாவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த ஆறு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் சைபீரியா நகரில் உள்ள கெமரோவோ என்ற இடத்தில், முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. இந்த இல்லம் அரசிடம் பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுள்ளது. மரத்தாலான இரண்டு மாடிகள் கொண்ட இந்த இல்லத்தில், நேற்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே தங்கியிருந்த முதியோர்களில் 22 பேர் தப்பிக்க வழியின்றி … Read more
சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் – பகீர் தகவல்கள்
பீஜிங், சீனாவின் உகான் மாகாணம் ஹூபேய் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத்தொடங்கி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது. கடுமையான ஊரடங்கு … Read more