கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க விளையாட்டு வீராங்கனை பிரிட்னியை விடுவித்தது ரஷ்யா

நியூயார்க்: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ரஷ்யாவால் சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாடு திரும்புகிறார். அமெரிக்க கூடைபந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா சென்றபோது, அவரிடம் நடத்திய சோதனையில் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைபற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரிட்னி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் பிரிட்னிக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more

உலகின் இன்னொரு சக்திவாய்ந்த நாடாக திகழும் இந்தியா: வெள்ளை மாளிகை உயரதிகாரி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் நட்பு நாடு என்பதை தாண்டி, இந்தியா வல்லரசுகளுக்கு இணையான இன்னொரு சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக வெள்ளை மாளிகை உயரிதிகாரி தெரிவித்துள்ளார். ஆசியாவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரும் வெள்ளை மாளிகையின் உயரதிகாரியுமான கர்ட் கேம்பல் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து … Read more

ட்விட்டரில் உள்ள 1.5 பில்லியன் செயலற்ற கணக்குகள் நீக்கப்படும்: எலோன் மஸ்க்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 1.5 பில்லியன் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என எலோன் மஸ்க் வெள்ளிக்கிழமை அறிவித்தார். உங்களின் உண்மையான கணக்கு நிலையைக் காட்டும் மென்பொருள் புதுப்பிப்பில் ட்விட்டர் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். “ட்விட்டர் விரைவில் … Read more

'இந்தியா கூட்டாளி மட்டுமல்ல; அதுக்கும் மேல..!' – வெள்ளை மாளிகை உயரதிகாரி

அமெரிக்காவின் நட்பு நாடு என்பதை தாண்டி, இந்தியா வல்லரசுகளுக்கு இணையான இன்னொரு சக்தி வாய்ந்த நாடாக இருப்பதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரி கர்ட் கேம்பல் தெரிவித்து உள்ளார். ஆசியாவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரும், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியுமான கர்ட் கேம்பல் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து … Read more

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்க நிதி; சீனாவை சீண்டும் அமெரிக்கா.!

தெற்கு சீனா கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடு தைவானை, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவை பொறுத்தவரையில் தைவானை உள்ளடக்கிய ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது. ஆனால் தைவானும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதை ஏற்க மறுத்து வருகின்றன. இதன் காரணமாக தைவானை முன்வைத்து சர்வதேச அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது. தைவான் நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஒருவேளை தைவான் நாட்டை ஆக்கிரமிக்க சீனா முயற்சி … Read more

இங்கிலாந்தின் இனவெறியை காட்சிபடுத்திய ஆவணத்தொடர்; வலதுசாரிகள் கொதிப்பு.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

அடுத்த ஆண்டு பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் விசிட் அடிப்பார்கள்… அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் … Read more

பெண்களின் முகங்கள், பிறப்புறுப்புகளில் பாயும் பெல்லட் குண்டுகள்: ஹிஜாப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் கொடூரம்

தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள், “சமீபத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இப்பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறும்போது, “20 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவருக்கு நான் சிகிச்சை அளித்தேன். கிட்டதட்ட 20 பெல்லட் குண்டுகள் அவரது … Read more

சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்த இந்தியாவிற்கு முழு ஆதரவு: தலிபான் அறிவிப்பு!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான “வசதிகளை” வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. தாலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மும்பையை மாஸ்கோவுடன் இணைக்கும் வகையிலான ஈரான் மற்றும் அஜர்பைஜான் வழியாக செல்லும் வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து தாழ்வாரத்தில் சபாஹர் துறைமுகத்தை சேர்க்கும் “முன்மொழிவை” வரவேற்றுள்ளது. “இது தொடர்பாக தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க ஆப்கானிஸ்தான் தயாராக உள்ளது” என்று அந்த அறிக்கையில் … Read more

Same Sex Marriage: தன்பாலின திருமண மசோதாவில் அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திடுவார்?

வாஷிங்டன்: ஒரே பாலின மற்றும் கலப்புத் திருமணத்தைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. வியாழக்கிழமை (2022 டிசம்பர் 8) இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையொப்பம் இட்டால் இந்த மசோதா சட்டமாகிவிடும். இந்த செய்தியை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா இதுவாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்காவில் சட்டபூர்வமானது. அதற்கு … Read more