நியூயார்க் பகுதியில் கடுமையாக வீசும் பனிப்புயலால், 2 அடி உயரம் வரை மூடப்பட்ட சாலைகள்

அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பகுதியில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. வாகனங்கள், வீடுகள் பனியால் மூடப்பட்டுள்ளதுடன், சாலைகளில் இரண்டு அடி உயரம் வரை பனி கொட்டிக்கிடக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பனிப்புயலால் பஃபலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் தரையில் நான்கரை அடி உயரம் வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. Source link

இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படலாம்.. உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் நீதிபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் தலைமையில் பாகிஸ்தான்-பிடிஐ நடத்திய பேரணியில் மர்ம நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று இம்ரான்கான் கட்சியினரின் போராட்டத்துக்கு எதிரான வழக்கு ஒன்றை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி … Read more

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமா? பாலியல் தொழிலுக்கு ஏலம் விடும் கொடுமை!

இலங்கை நாட்டைச் சேர்ந்த பல்வேறு பெண்களை, ஓமன் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. தற்போதைய பொருளாதார சீரற்ற நிலைமையால், இந்த சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அந்த வகையில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு, விசாரணைக்கு உத்தரவிட்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,”வேலை வாங்கித் தருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பலரையும் சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு … Read more

ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா? – எலான் மஸ்க் வாக்கெடுப்பு

சான் ஃப்ரான்சிஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்துகிறார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனம் கைமாறியது, அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள் என எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் எலான் மஸ்க் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு தான் என்றால் அது மிகையாகாது. ஆம் ஒரு கருத்துக் கணிப்பில் ட்விட்டரின் கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பி ட்விட்டரை நானே வாங்குவே … Read more

ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்.. 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழப்பு!

பெரு தலைநகரான லிமாவில் ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம் தீப்பிடித்தது. இதில் விமான நிலைய தீயணைப்பு துறை ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட LATAM Airlines விமானம் எதிரில் வந்த சரக்கு வாகனத்துடன் மோதி தீப்பிடித்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த 102 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.   Source link

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம்… அதிபர் கிம் ஜாங் உன் திடீர் எச்சரிக்கை!

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை  எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டார் Source link

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தீ; ஒரே குடும்பத்தில் 21 பேர் பலி| Dinamalar

காஸா: பாலஸ்தீனத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்தின் காஸா நகரில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் வசித்த ஒரு குடும்பத்தில், நேற்று முன்தினம் ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், எகிப்தில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்திருந்ததால், நிகழ்ச்சி தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீப்பற்றி மளமளவென … Read more

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு!

மேற்கு இந்தோனேசியாவின் கடற்கரையில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் பெங்குலு நகருக்கு தென்மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் ((Enggano)) எங்கானோ என்ற சிறிய தீவுக்கு அருகில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், இரவு 8 முதல் 9 மணிக்கு இடையே ரிக்டர் அளவில் 6.9 மற்றும் 5.4 ஆக இருமுறை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.  … Read more

இன்று உலக ஆண்கள் தினம்| Dinamalar

* குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தி நவ. 19ல் உலக ஆண்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. * குழந்தைகள் மீதான பாலியல், வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ. 19ல் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. * சுகாதாரத்தை பேணும் கழிப்பறை பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ. 19ல் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் … Read more

பாக்.,கில் வேன் கவிழ்ந்து விபத்து 12 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி| Dinamalar

கராச்சி, :பாகிஸ்தானில் சாலை ஓரம் வெட்டப்பட்ட பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௧௨ குழந்தைகள் உட்பட ௨௦ பேர் பரிதாபமாக பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிந்து மாகாணத்தில் உள்ள காயிர்பூரில் இருந்து, சேவானில் உள்ள மசூதிக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, நெடுஞ்சாலை ஓரமாக வெட்டப்பட்டுஇருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது. இந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௧௨ குழந்தைகள் உட்பட ௨௦ … Read more