ஆப்கனில் குண்டு வெடிப்பு 6 பேர் உடல் சிதறி பலி| Dinamalar
காபூல், ஆப்கானிஸ்தானில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வெடித்துச் சிதறி, ஆறு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மஸாரே ஷரிப் என்ற இடத்தில், அரசின் பெட்ரோலிய நிறுவன பஸ் ஒன்று ஊழியர்களுடன் சென்றது. அப்போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இதில், பஸ்சில் இருந்த ஆறு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் … Read more