கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விண்ணை முட்டும் கரும்புகை..!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. பாரன்குவிலாவில் உள்ள அந்த பிரம்மாண்ட எரிபொருள் சேமிப்பு தொட்டி புதன்கிழமை தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில், படுகாயமடைந்த தீயணைப்புவீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எண்ணெய் கிடங்கில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. இதற்கிடையில், தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர். தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை அந்நகர துறைமுக செயல்பாடுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழப்பர் கொரோனா குறித்த புதிய ஆய்வு தகவல்| Dinamalar

லண்டன், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் ௧௫ லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், ௨௦௧௯ இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இங்கு, மக்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, சீன அரசு பல கட்டுப்பாடுகளை விலக்கியது. இதையடுத்தே கொரோனா வைரஸ் பரவல் … Read more

300 நாட்களுக்கு பின் முதல் வெளிநாட்டு பயணம் – ஜோ பைடனை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 300 நாட்கள் ஆகிவிட்டது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து ஜெலென்ஸ்கிக்கு … Read more

போலி என்கிறார் பி.டி.ஐ., தலைவர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : ‘பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்நாட்டின் பத்திரிகையாளர் செய்யது … Read more

இம்ரானின் ஆபாச ஆடியோ போலி என்கிறது அவரது கட்சி| Dinamalar

இஸ்லாமாபாத்,’பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துஉள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்த நாட்டின் பத்திரிகையாளர் செய்யது அலி ஹைதர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த … Read more

 சிரித்தால், அழுதால் உயிருக்கு ஆபத்து வடகொரியாவில் அர்த்தமில்லா கட்டுப்பாடு

சியோல்,: வடகொரியாவில் மக்கள் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று அர்த்தமற்ற கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.வடகொரியா கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. வினோதமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-வுன். அவரது அனுமதியின்றி அங்கு எதுவும் அசையாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமலில் உள்ளன.இந்தநிலையில், வடகொரிய மக்கள் யாரும் … Read more

தொடர் கொலையாளி சோப்ராஜை விடுவிக்க நேபாள நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

காத்மாண்டு, அண்டை நாடான நேபாள சிறையில், 19 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்ய, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர் சார்லஸ் சோப்ராஜ், 78. பல சிறிய குற்றங்களுக்காக பிரான்சில் பல்வேறு முறை சிறை சென்ற அவர், 1970களில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில் குடியேறினார். அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருடன் நட்புடன் பழகி அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து போதை … Read more

நேபாள பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் துாபா தேர்வு| Dinamalar

காத்மாண்டு :நேபாளத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக, பிரதமர் ஷேர் பகதுார் துாபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, ஆறாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு … Read more

கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை…! கைது செய்யப்படுவார் என தகவல்

கத்தார், கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் … Read more

பல்கலையில் பெண்கள் படிக்க இடைக்கால தடை: தலிபான்கள் உத்தரவால் சர்ச்சை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பெண்களுக்கு, எதிராக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறது. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில், பெண்கள் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. … Read more