மனஉளைச்சலால் நீதிமன்றத்தை நாடிய நபர்| Dinamalar

டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் ‘சும்மா’ வந்துசெல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை புலம்புவதையே பலரும் வாடிக்கையாக வைத்திருப்பர். எவ்வளவு வேலை செய்தாலும், சம்பளம் விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை திருப்திப்படுத்துவதில்லை. இது இப்படியிருக்க அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு எந்த வேலையையும் செய்ய விடாமல் ‘சும்மாவே’ இருக்க வைத்து சம்பளம் கொடுத்திருக்கிறது அவர் பணியாற்றிய ரயில்வே … Read more

ஊபரில் சென்று வங்கியை கொள்ளை அடித்த திருடன் – சிங்கம் சூர்யாவாக மாறிய போலீஸ்!

அமெரிக்காவின் அயோவாவின் டெஸ் மொயின்ஸ் நகரில் உள்ள வங்கியைக் கொள்ளையடித்த புளோரிடாவைச் சேர்ந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார், பின்னர் அவரை தனது இல ஓட்டிச் சென்ற உபெர் டிரைவரை கார்ஜாக் செய்தார். புளோரிடாவைச் சேர்ந்த 22 வயதான ஜேவியர் ரஃபேல் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில், மினசோட்டாவின் லேக் கவுண்டியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்க-கனடா எல்லையில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் இருந்தபோது அவரை ​போலீசார் கைது … Read more

ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றம் அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றி வருவது அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றிய ஈரானைச் சேர்ந்த நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரான் நீதித் துறை இணையதள பக்கத்தில், “இஸ்ரேலின் உளவுத் துறையுடன் இணைந்து பணி செய்த நால்வர் மே மாதம் கைது செய்யப்பட்டனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த மூவருக்கு சிறைத் தண்டனை (5 … Read more

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த புதின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் (70), மாஸ்கோவில் உள்ள தனது வீட்டு படிக்கட்டில் கடந்த வாரம் இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்தார் என ‘தி டெலிகிராம்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 5 படிக்கட்டுகளை தாண்டி புதின் கீழே விழுந்ததில், அவரது முதுகுதண்டின் அடிப்பகுதி எலும்பு (டெயில் போன்) பாதிப்படைந்ததாகவும், இதன் காரணமாக ஏற்கெனவே குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதினுக்கு தானாக மலம் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உடல் நிலை மோசம் … Read more

அமைதி பேச்சுக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால் ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: மேற்கத்திய நாடுகளுக்கு பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

பாரீஸ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. அது இன்னும் தொடர்கிறது. இந்தப் போர் காரணமாக, உலகளாவிய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகள் இடையே … Read more

மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்… ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!

உலக அளவில் பொருளாதார நீதியாகவும் பிற வகைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதானம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை. மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. சில ஊடகங்களில், அவருக்கு கடுமையான புற்று நோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிலர் அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தீவிரமான நோய் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில், … Read more

ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம். ஆனால், செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை: அயர்லாந்து இளைஞர் வழக்கு

டப்ளின்: தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கு உரித்தான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியிருப்பதாகக் கூறியுள்ளார் டெட்மார் மில்ஸ். ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிகிறார் டெர்மாட் அலஸ்டெய்ர் … Read more

B 21 Raider: சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ரேடரில் சிக்காத போர் விமானம் அறிமுகமானது

பெண்டகன்: உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு B-21 ரைடர் போர் விமானத்தை அமெரிக்கா வெளியிட்டது. 30 ஆண்டுகளில் இந்த நவீன வசதி கொண்ட ரைடரின் அணியைஉருவாக்கவும், வாங்கவும் இயக்கவும் 203 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு செலவாகும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. இந்த வகை குண்டுவீச்சு ரைடர்களில் குறைந்தபட்சம் 100 விமானங்களை வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. போர் விமானத்தின் பெரும்பாலான அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. இது ஒரு ஆளில்லாத விமானமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக … Read more

ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டதா… உண்மை நிலை என்ன !

ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தை அடுத்து, கலாச்சார காவல்துறை கலைக்கபட்டதாக அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் கூறியுள்ளார். ஆனால், கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. மேலும் ஈரானிய அரசு ஊடகம், அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் மொண்டசெரி, கலாச்சார காவல் பிரிவுக்கு பொறுப்பானர் அல்ல என்று கூறியது. ஈரானில் கடுமையான இஸ்லாமிய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக … Read more

சீனாவுக்கு எதிராக போராட்டம்; இலங்கை எம்.பி., அறிவிப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கையை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவை வெளியேற்றும் போராட்டத்தை துவங்கப் போவதாக, அந்த நாட்டு எம்.பி., ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி நிலவுவதால், இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். … Read more