தைவான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனாவின் அணு ஆயுத விமானங்கள்..!

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் விமானங்களை சீனா அனுப்பியதாக தைவான் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன், தைவானிலிருந்து உணவு பொருட்கள், மீன் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்ய, சீனா புதிதாக தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் 18 H-6 விமானங்கள் உள்பட 21 விமானங்கள், தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

தாய்லாந்தில் பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய யானைகள்..!

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுவரும் நிலையில், தாய்லாந்தில் யானைகள், பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அர்ஜெண்டினா, பிரான்ஸ், மொராக்கோ, குரேஷியா நாடுகளின் கொடிகள் உட்பட, ஃபிபா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற நாடுகளின் கொடிகளை, உடலில் வர்ணம் தீட்டிய 13 யானைகள், மைதானத்தில் கால்பந்து விளையாடியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி … Read more

நிலவில் விரைவில் மனிதர்கள் குடியேறலாம்… விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள நம்பிக்கை!

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை தேடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் குடியேறுவதற்காக ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள உயிர்கள் குறித்து புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஆய்வில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகளின் உதவியுடன் புதிய வழிகளில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை அமைப்பது குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இர்வின் இந்த புதிய … Read more

அமெரிக்காவில் தஞ்சமடைய வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு..!

அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டுள்ளனர். இரு நாட்டு எல்லை அருகே அமைந்துள்ள ரியோ கிராண்ட் ஆற்றை, இரவோடு இரவாக கடந்துவந்த ஆயிரத்து 500 பேர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி அருகே காத்திருக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், எல்லையில் பிடிபடும் அகதிகளை நாடு கடத்த, அமெரிக்க அரசு பிறப்பித்துள்ள ஆணை, வரும் 21-ந் தேதியுடன் காலாவதி ஆவதால், அகதிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. Source link

போர்ச்சுகலின் 'கோல்டன் விசா'வைப் பெற முண்டியடிக்கும் பணக்கார இந்தியர்கள்

லிஸ்பன்: 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பன் மற்றும் பிற நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 350,000 முதல் 600,000 யூரோக்கள் வரை முதலீடு செய்திருக்கின்றனர். கோல்டன் விசாவைப் பெறுவதற்காக இந்த முதலீடுகளை பணக்கார இந்தியர்கள் செய்துள்ளனர். மடோனா போன்ற பல பணக்கார வெளிநாட்டினரைக் கவர்ந்த போர்ச்சுகலின் விசா அல்லது “கோல்டன் விசா” விரைவில் முடிவடையும். இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதைப் பற்றிய சமீபத்திய அறிவிப்பு ஆர்வத்தை ஈர்த்துள்ளது. போர்த்துகீசிய குடிவரவு மற்றும் எல்லை நிறுவனமான … Read more

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டக்காரர்களை பொதுவெளியில் தூக்கிலிடும் ஈரான்: ஒரே வாரத்தில் இருவருக்கு தண்டனை; குவியும் கண்டனம்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபரை ஈரான் பொது வெளியில் தூக்கிலிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 15,000 பேர்வரை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போராட்டத்தை பரப்பிய குற்றத்திற்காகவும், பாதுகாப்பு படையினரை கொன்ற குற்றத்திற்காகவும் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. அந்த வகையில் 23 வயதான … Read more

பயங்கரவாதிகள் தாக்குதல் ஆப்கனில் 24 பேர் பலி| Dinamalar

காபூல் : ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தங்கும் நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆண்டு அதிரடியாக கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். இங்கு, தலைநகர் காபூலில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்குள், நேற்று நான்கு பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் … Read more

கனடாவில் தொடரும் என்.ஆர்.ஐ கொலைகள்! 24 வயது சீக்கிய இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஆல்பர்ட்டா: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் 24 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு  உயிரிழந்தார். இது கனடா வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி கனடாவில் இரவு 8:40 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக அங்கு சென்றனர். தென்கிழக்கு எட்மண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட்ட சன்ராஜ் சிங்கை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். கனடாவில் சீக்கியர்களின் படுகொலைகள் தொடர்கதையாகிவிட்டது.   தெருவில் காயங்களுடன் … Read more

கச்சா எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு இந்தியாவின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ,-ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு, ‘ஜி – 7’ நாடுகள் விதித்த விலை உச்ச வரம்புக்கு ஆதரவில்லை என்ற இந்தியாவின் அறிவிப்பை ரஷ்யா வரவேற்றுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் போரைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவின் பொருளாதாரத்தில், அதன் கச்சா எண்ணெய் விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ரஷ்யாவின் பொருளாதாரத்தை … Read more

மாசில்லா அணு மின்சக்தி உற்பத்தி: அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம்| Dinamalar

வாஷிங்டன்-அணுசக்தி தொடர்பான புதிய முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில், ‘மிகப் பெரும் விஞ்ஞான சாதனை’ விரைவில் படைக்கப்பட உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு மின்சக்தி வாயிலாகத்தான் மிகப்பெரிய அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ‘பிஷன்’ எனப்படும் அணுக்கருக்களை பிளப்பதால் ஏற்படும் சக்தி மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த முறையை பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அணுக்கருக்களை இணைக்கும், ‘பியூஷன்’ முறையில் அணு மின்உற்பத்தி செய்வது தொடர்பான ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி … Read more