ஸ்பெயின் பிரதமருக்கு கொரோனா| Dinamalar

மாட்ரிட் : ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்ஷே, கடந்த வாரம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், அவர் இம்மாதம் 23ம் தேதி நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று சோசலிஸ்ட் கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ரத்து செய்தார். “தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, எனது பணியை தொடருவேன்,” என, அவர் சமூக வலைதளத்தில் நேற்று … Read more

6.4 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ..! – இந்தோனேசியாவில் மக்கள் பீதி..!

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது . இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக … Read more

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து..! – 23 பேர் பலியான சோகம்..!

வங்கதேசம் அருகே ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் வடக்கு மாவட்டமான பஞ்சகர் எனும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த படகு கவிழ்ந்ததில் சுமார் 23 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும் பல பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் சூழ்ந்தனர். பிறகு நீச்சல் குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக சுமை மற்றும் படகில் … Read more

ஜப்பான் பிரதமர் அபேவின் நினைவு நிகழ்ச்சி ..! – பிரதமர் மோடி பங்கேற்பு ..!

ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கடந்த ஜூலை 8ம் தேதி அன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் . இச்சம்பாவம் ஜப்பான் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே என்பது குறிப்பிடத்தக்கது. ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந் தேதி டோக்கியோவில் நடந்தது. … Read more

கணவனை கவனித்துக் கொள்ள பெண்கள் தேவை… அதிசய மனைவியின் அசத்தல் விளம்பரம்!

இரண்டு மனைவி கான்செப்ட்… மனைவியே தமது கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது… இதுவெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்…. நிஜவாழ்வில் நிகழ சாத்தியமில்லை என்ற உலகளாவிய கூற்றை தகர்த்தெறிந்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்ற பெண்மணி. 44 வயதாகும் இந்த பெண் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். உலக அளவில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ள அந்த விளம்பரத்தில், ‘என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்து கொள்ள மூன்று பெண்கள் தேவை. … Read more

குப்பையாய் செவ்வாய்| Dinamalar

செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் இருந்து துவங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா, யு.ஏ.இ., சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளன. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ரோவர், ஆர்பிட்டர்களின் எடை, தற்போது அங்கு செயல்படும் ரோவர், ஆர்பிட்டர்களின் எடையுடன் ஒப்பிடப்பட்டது. இதில் இதுவரை 7118 கிலோ விண்வெளி குப்பை செவ்வாயில் விடப்பட்டுள்ளன என … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா வென்றார்!| Dinamalar

லண்டன்: ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் ராணி 2ஆம் எலிசபெத் விருதை வென்றார். மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல், “ராணி எலிசபெத் II விருது” வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இதில், “ஆண்டின் சிறந்த பெண்ணாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். அவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை பெற்றுக் கொண்டனர். சுயெல்லா … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா ஆதரவு!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 77வது பொதுச் சபையில் உரையாற்றிய லாவ்ரோவ், “ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயகமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட வேண்டும்” என்று  கூறினார். ஐநா … Read more

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது: ஜெய்சங்கர்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: இந்தியாவின் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த அணுகுமுறை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக்கறையை … Read more

அணு ஆயுதங்களை கைவிட மாட்டேன்: சூளுரைக்கும் கிம் ஜாங் உன்னின் அதிரடி ஏவுகணை

தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வட கொரியா அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. கொரிய தீபகற்பத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த வாரத்தில் வரவிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, சவால்விடும் நடவடிக்கை என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர். தென் கொரியாவின் இராணுவத்தின் கூற்றுப்படி, வடக்கு பியோங்யாங்கின் டேச்சோன் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து காலை 7 … Read more