வடக்கு பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

ஒவ்கடங்கு, ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்கே உள்ள போலா பகுதியில் துப்பாக்கி … Read more

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பெண்களின் கண்கள், மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு – பகீர் தகவல்

தெஹ்ரான், ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது. இதனிடையே, கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஒடுக்க ஈரான் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.82 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 21 லட்சத்து 18 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை வழங்கியது அமெரிக்கா…!

வாஷிங்டன், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷியா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் ராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து … Read more

கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க விளையாட்டு வீராங்கனை பிரிட்னியை விடுவித்தது ரஷ்யா

நியூயார்க்: போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ரஷ்யாவால் சிறைத் தண்டனை பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாடு திரும்புகிறார். அமெரிக்க கூடைபந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் கடந்த பிப்ரவரி மாதம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா சென்றபோது, அவரிடம் நடத்திய சோதனையில் சட்டவிரோத போதைப் பொருட்கள் கைபற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரிட்னி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் பிரிட்னிக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more

உலகின் இன்னொரு சக்திவாய்ந்த நாடாக திகழும் இந்தியா: வெள்ளை மாளிகை உயரதிகாரி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் நட்பு நாடு என்பதை தாண்டி, இந்தியா வல்லரசுகளுக்கு இணையான இன்னொரு சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக வெள்ளை மாளிகை உயரிதிகாரி தெரிவித்துள்ளார். ஆசியாவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரும் வெள்ளை மாளிகையின் உயரதிகாரியுமான கர்ட் கேம்பல் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து … Read more

ட்விட்டரில் உள்ள 1.5 பில்லியன் செயலற்ற கணக்குகள் நீக்கப்படும்: எலோன் மஸ்க்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 1.5 பில்லியன் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என எலோன் மஸ்க் வெள்ளிக்கிழமை அறிவித்தார். உங்களின் உண்மையான கணக்கு நிலையைக் காட்டும் மென்பொருள் புதுப்பிப்பில் ட்விட்டர் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். “ட்விட்டர் விரைவில் … Read more

'இந்தியா கூட்டாளி மட்டுமல்ல; அதுக்கும் மேல..!' – வெள்ளை மாளிகை உயரதிகாரி

அமெரிக்காவின் நட்பு நாடு என்பதை தாண்டி, இந்தியா வல்லரசுகளுக்கு இணையான இன்னொரு சக்தி வாய்ந்த நாடாக இருப்பதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரி கர்ட் கேம்பல் தெரிவித்து உள்ளார். ஆசியாவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரும், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியுமான கர்ட் கேம்பல் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து … Read more

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்க நிதி; சீனாவை சீண்டும் அமெரிக்கா.!

தெற்கு சீனா கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடு தைவானை, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவை பொறுத்தவரையில் தைவானை உள்ளடக்கிய ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது. ஆனால் தைவானும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதை ஏற்க மறுத்து வருகின்றன. இதன் காரணமாக தைவானை முன்வைத்து சர்வதேச அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது. தைவான் நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஒருவேளை தைவான் நாட்டை ஆக்கிரமிக்க சீனா முயற்சி … Read more

இங்கிலாந்தின் இனவெறியை காட்சிபடுத்திய ஆவணத்தொடர்; வலதுசாரிகள் கொதிப்பு.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more