ஆப்கனில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள்: இந்தியா கவலை

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து இயங்குவது கவலை அளிக்கும் விஷயம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அஜித் தோவல், “ஆப்கானிஸ்தானின் … Read more

மன உளைச்சலால் நீதிமன்றத்தில் வழக்கு| Dinamalar

டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் ‘சும்மா’ வந்து செல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெர்மோட் அலஸ்டைர் மில்ஸ் என்பவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் பைனான்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 9 ஆண்டுகளாக இவர் காலை 10:00 மணிக்கு வேலைக்கு வந்துவிடுவார். செய்தித்தாள்களை படித்துவிட்டு சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு வேலையே இல்லாததால் வீட்டிற்கு சென்றுவிடுவாராம். இதற்காக ஓராண்டுக்கு அவருக்கு ரூ.1.03 கோடி சம்பளம் … Read more

கரோனா வைரஸ் மனிதன் உருவாக்கியது – சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானி தகவல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட் வூஹான்)’’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதுதான். அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹப் கூறியதாவது: வெளிநாட்டு … Read more

கடலில் விமானம் விழுந்து 2 பேர் பலி| Dinamalar

வெனிஸ், அமெரிக்காவின் சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று முன்தினம் மெக்ஸிகோ வளைகுடா கடலில் விழுந்தது. இதில் பயணித்த சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். விமானத்தின் பைலட்டை தேடும் பணி நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்தில் இருந்து, அதே மாகாணத்தில் உள்ள வெனிஸ் நகருக்கு சென்ற சிறிய ரக விமானம், மெக்ஸிகோ வளைகுடாவை கடக்கும்போது பழுது ஏற்பட்டு கடலில் விழுந்து மூழ்கியது. இதில் பயணித்த சிறுமி மற்றும் ஒரு … Read more

மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா அமெரிக்க விஞ்ஞானி பகீர் தகவல்| Dinamalar

நியூயார்க் :’சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்’ என, அங்கு பணியாற்றிய அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசின் முதல் பாதிப்பு, சீனாவின் வூஹானில் தான் உறுதியானது. அரசு சாரா ஆய்வு அங்குள்ள வைராலஜி மையத்தில் இருந்து, இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் … Read more

குழந்தைகளுக்கு 'துப்பாக்கி, வெடிகுண்டு' என பெயர் வையுங்க! – பெற்றோருக்கு அரசு ஆர்டர்

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள், துப்பாக்கி உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, தனது நாட்டு மக்களுக்கு தேசப் பற்றை வளர்க்கும் என்ற அடிப்படையிலான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. இது பற்றி தி மிரர் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் மற்றும் விசுவாசம், துப்பாக்கி போன்ற பெயர்களை சூட்ட வேண்டும் என வட கொரிய … Read more

தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா – மீண்டும் பதற்றம்

சியோல், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய … Read more

இந்தோனேசியாவில் வெடித்துச்சிதறிய எரிமலை: 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. … Read more

வூஹான் ஆய்வக விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வூஹான்: கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததாகவும், அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அங்கிருந்து படிப்படியாக உலக நாடுகளுக்கு பரவியதுடன், கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை … Read more

பத்ம பூஷன் விருது பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது முதிர்வால் காலமானார்!

பாரிஸ், புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர்( 91) வயது முதிர்வால் நேற்று காலமானார். டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய ஆறு புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகியுள்ளன. அவர்கள் இயற்றிய “இஸ் பாரிஸ் பர்னிங்?” புத்தகம் உலகப்புகழ் பெற்றது. கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி, 1985இல் வெளியான ‘சிட்டி ஆப் ஜாய்’ … Read more