நேற்று கர்ப்பம்… இன்று குழந்தை – அதிர்ச்சியடைந்த தாய்!

பெண்கள் கர்ப்பமடைந்தால் அவர்கள் உடல் எடை கூடுவது, வயிறு பெரிதாவது என உடலில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். இருப்பினும், அவர் எப்போது கர்பமடைந்தால் என்பது ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ 2, 3 மாதங்களுள் தெரிந்துவிடும். ஆனால், இங்கிலாந்தில் ஒரு பெண்ணுக்கு தான் கர்ப்பமடைந்திருக்கிறோம் என்பது பிரவசத்திற்கு முந்தைய நாள்தான்  தெரிந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?  ஆம், இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரைச் சேர்ந்த மாலி கில்பர்ட் (25) பெண்ணுக்கு தான் அது நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, … Read more

ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவில்லை: வடகொரியா விளக்கம்

மாஸ்கோ: “ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை” என்று வடகொரியா விளக்கமளித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். புதினின் இப்பேச்சு சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ஏவுகணைகளையும், அணு … Read more

ஊழல் வழக்கில் சீன முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான பு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் பு ஸெங்குவா. இவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது குடும்பத்தினர் மூலமாகவோ … Read more

‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

நியூயார்க்: உலக அளவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) தலைவரும், அதன் இணை நிறுவனருமான ஜோயல் ஃபிங்கள்ஸ்டீன் இது குறித்து கூறுகையில், “இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள், மீம்ஸ் போன்றவை 1000% அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். வெள்ளை இனத்தவரும், இஸ்லாமியர்களும் இன்னும் பிறரும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த சில … Read more

தொற்றா நோய்களால் 2 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழக்கிறார்: உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா: உலகில் தொற்றா நோய்கள் காரணமாக இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பல்வேறு புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தொற்றா நோய்களான இதய பாதிப்பு, புற்றுநோய், நுரையீறல் பாதிப்பு ஆகியவை காரணமாக உலகில் 2 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நிகழும் … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நெப்டியூன் கோளின் துல்லிய படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இந்த படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் … Read more

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு தண்டனை: ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுகிறது. அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம். எங்கள் பிராந்தியத்தை களவாடும் முயற்சிக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்க வேண்டும். ஆயிரகணக்கான மக்களை கொன்றதற்காக தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் உள்ளிட்ட அனைத்து … Read more

சொத்து சேர்க்காத மோடி: பாராட்டிய இம்ரான்கான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‛உலகில் எந்த அரசியல் தலைவருக்கும் வெளிநாடுகளில் இவ்வளவு சொத்துக்கள் இல்லை, ஏன், இந்திய பிரதமர் மோடிக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள்’ என பிரதமர் மோடி வெளிநாடுகளில் சொத்து சேர்க்காதது குறித்து பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், சில மாதங்களுக்கு … Read more

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தை கட்டுப்படுத்த சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் … Read more

தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்

ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள சாகேஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ம் தேதி, தனது பெற்றோருடன் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சிறப்புப் பிரிவு போலீஸாரின் பணி பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிப்பதே. மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் குற்றம் சாட்டி இந்த சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.  போலீஸ் காவலில் … Read more