சீனாவில் கூடுது கொரோனா| Dinamalar

பீஜிங் :சீனாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக இத்தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 2291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த … Read more

லெபனான் நகரங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கோலம்.. கண்ணைக் கவரும் ஒளியில் கிறிஸ்துமஸ் மரங்கள்..!

கிறிஸ்துமஸ் விழா நெருங்குவதையொட்டி லெபனான் நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக மக்கள் கூடும் இடங்களில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. குழந்தைகளுடன் பொருட்களை வாங்க செல்பவர்களை குதூகலப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. Source link

சிறையிலிருந்து போரிஸ் பெக்கர் விடுதலை| Dinamalar

லண்டன்: வரி ஏய்ப்பு புகார் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் நேற்று சிறையிலிருந்து விடுதலையானார். ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை வென்றவர் 2002-ல் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. தனது சொத்துக்களை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. … Read more

 தீயணைப்பு துறை இயக்குனர் மாற்றம்| Dinamalar

சென்னை, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள சீமா அகர்வாலுக்கு, தீயணைப்பு துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனராக டி.ஜி.பி.,யான பி.கே.ரவி பணியாற்றி வந்தார். இவர் நேற்று திடீரென மாற்றப்பட்டார். சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள டி.ஜி.பி., சீமா அகர்வாலுக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. சென்னை, சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள … Read more

ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் பயங்கரவாதம் குறித்து பிரசங்கம் செய்வதா? ஐ.நா., கூட்டத்தில் பாக்.,கை வெளுத்த ஜெய்சங்கர்| Dinamalar

நியூயார்க்,”பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்தவர்கள், இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதம் குறித்தும், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்தும் பிரசங்கம் செய்ய என்ன தகுதி உள்ளது,” என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் குறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையுடன் குறிப்பிட்டார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இரண்டு முக்கிய கூட்டங்கள் நியூயார்க் நகரில் நடக்கின்றன. பயங்கரவாத பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டங்களில் … Read more

ஜப்பானில் குழந்தை பெற்றால் ரூ.3 லட்சம் மானியம்!| Dinamalar

டோக்கியோ:ஜப்பானில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, அந்நாட்டு அரசு 3 லட்சம் ரூபாய் மானியமாக வழங்குகிறது. கிழக்காசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருகிறது. அதே நேரத்தில் இறப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், ஜப்பானில் மக்கள் தொகை படுவேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, எட்டு லட்சத்து 11 ஆயிரத்து 604 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் குழந்தை பிறப்பு … Read more

குழந்தை பெத்துக்கிட்டா ரூ. 3 லட்சம்… அடடே இந்த திட்டம் சூப்பரா இருக்கே!

இந்தி.யா, சீனா உள்ளிட்ட மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் குடும்ப கட்டுப்பாடு 1980 கள் முதலே தீவிரமா பின்பற்றுப்பட்டு வருகின்றன. நாம் இருவர் நமக்கு இருவர்; நாம் இருவர் -நமக்கு ஒருவர்; நாம் இருவர்; நமக்கு ஏன் மற்றொருவர் என்று சொல்லி கொள்ளும் அளவு குழந்தைப் பேறு விஷயத்தில் உலக அளவில் வெகுஜென மக்களின் மனநிலை மாறிவிட்டது. பொருளாதார தன்னிறைவு பெறுவதி்ல் உள்ள சிக்கல்கள், ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று கொள்வதில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உள்ள … Read more

நிரவ் மோடி மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது இங்கிலாந்து கோர்ட்டு – விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு

லண்டன், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில் நீரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய … Read more

கலவர பூமியாக மாறிய பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வந்தார். … Read more

எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் – மெட்டா நிறுவனம் மீது கென்யாவில் வழக்கு

நைரோபி, எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் (டி.பி.எல்.எஃப்.) இடையே சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரில், சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் எத்தியோப்பிய உள்நாட்டுப் போரின் போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக பேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ மீது கென்யா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் … Read more