ஆயுதப் புரட்சிக்கு திட்டமா? ஜெர்மனியில் 25 பேர் கைது!| Dinamalar
பெர்லின்,-ஜெர்மனியில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக எழுந்த சந்தேகத்தில், நாடு முழுதும் நேற்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வலதுசாரி கொள்கையுடைய அமைப்புடன் தொடர்புடைய, ௨௫ பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வலதுசாரி கொள்கையுடைய ‘ரீயிச் சிட்டிசன்ஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பு ஆயுதப் படையை உருவாக்கி, புரட்சியின் வாயிலாக தற்போதுள்ள அரசைக் கவிழ்க்க சதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் ௧௬ மாகாணங்களில், ௧௧ல் நேற்று, … Read more