இந்தியாவை ஐ.நா., நிரந்தர உறுப்பினராக்குங்க: சொல்லுது பிரான்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொது சபையில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என பிரான்ஸ் கூறியுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களை அதிகரிப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் ஐ.நா.,விற்கான பிரான்சின் நிரந்தர துணை பிரதிநிதி நாதலி பிராட்ஹர்ஸ்ட் பேசியதாவது: பிரான்சின் நிலை தெளிவாக உள்ளது. அனைவருக்கும் தெரியும். இன்றைய உலகில், ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும். இதன் … Read more

Video : பறக்க இருந்த விமானம்… குறுக்கே வந்த வாகனம் – கோர விபத்து!

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில், தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அந்த வாகனத்தில் இருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, லாட்டம் விமான நிறுவனம்,”அந்த விமானத்தில் மொத்தம் 102 பயணிகள் இருந்தனர். விபத்தால் பயணிகள் உள்பட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. https://zeenews.india.com/tamil/topics/Peru விமானம், தீயணைப்பு வாகனத்துடன் மோதும் வீடியோ வெளியாகியுள்ளது. விமானம் முழு வேகத்தில் ஓடுபாதையில் வந்துகொண்டிருந்ததால், … Read more

ஈரானில் இஸ்லாமிய புரட்சியாளர் கொமேனி இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

தெஹ்ரான்: ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா அலி கொமேனி இல்லத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. 1979 தொடங்கி ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெடித்தது. அங்கு இஸ்லாமிய அரசு அமைய முக்கியக் காரணமாக இருந்தவர் ருஹல்லா அலி கொமேனி. இந்த நிலையில் மாஷா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஈரான் முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா … Read more

பாகிஸ்தானில் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் ஷெரீப்-பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கைர்பூர் அருகே நெடுஞ்சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ளநீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். Source link

முதன்முறையாக மகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை வெளியுலகிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வட கொரியா ஹ்வாஸாங் 17 என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அதற்கு முன்னதாக ஏவுகணை தளத்தில் நடந்த சோதனையின்போது அதிபர் கிம் உடன் மகளும் இருந்துள்ளார் என்று வட கொரிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்காவின் ஸ்டிம்சன் சென்டரின் வட கொரிய தலைமை … Read more

எலன் மஸ்க்கின் எச்சரிக்கையை அடுத்து ராஜினாமா கடிதங்கள் அளித்த ஊழியர்கள்.. ட்விட்டர் நிர்வாகத்தில் பெரும் குழப்பம்!

ஊழியர்கள் பணி நீக்கம், தாமாகவே ராஜினாமா செய்யும் ஊழியர்கள் என்று எலன் மஸ்க் கைப்பற்றிய ட்விட்டரின் புதிய நிர்வாகத்தில் பெரும் குழப்பமான சூழல் காணப்படுகிறது. பல அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை என்றால் மூன்று மாத ஊதியத்துடன் பணியை விட்டு விலகுமாறு ஊழியர்களுக்கு எலன்மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து நிறைய ஊழியர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்து வருகின்றனர். ட்விட்டர் தலைமை அலுவலகத்திலும் பெரும் குழப்பமான சூழ்நிலை … Read more

நியூயார்க் பகுதியில் கடுமையாக வீசும் பனிப்புயலால், 2 அடி உயரம் வரை மூடப்பட்ட சாலைகள்

அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பகுதியில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. வாகனங்கள், வீடுகள் பனியால் மூடப்பட்டுள்ளதுடன், சாலைகளில் இரண்டு அடி உயரம் வரை பனி கொட்டிக்கிடக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். பனிப்புயலால் பஃபலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் தரையில் நான்கரை அடி உயரம் வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. Source link

இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படலாம்.. உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் நீதிபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் தலைமையில் பாகிஸ்தான்-பிடிஐ நடத்திய பேரணியில் மர்ம நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று இம்ரான்கான் கட்சியினரின் போராட்டத்துக்கு எதிரான வழக்கு ஒன்றை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி … Read more

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமா? பாலியல் தொழிலுக்கு ஏலம் விடும் கொடுமை!

இலங்கை நாட்டைச் சேர்ந்த பல்வேறு பெண்களை, ஓமன் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. தற்போதைய பொருளாதார சீரற்ற நிலைமையால், இந்த சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அந்த வகையில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு, விசாரணைக்கு உத்தரவிட்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,”வேலை வாங்கித் தருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பலரையும் சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு … Read more

ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா? – எலான் மஸ்க் வாக்கெடுப்பு

சான் ஃப்ரான்சிஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்துகிறார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனம் கைமாறியது, அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள் என எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் எலான் மஸ்க் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு தான் என்றால் அது மிகையாகாது. ஆம் ஒரு கருத்துக் கணிப்பில் ட்விட்டரின் கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பி ட்விட்டரை நானே வாங்குவே … Read more