உலகத்தையே கண்காணிக்கும் சீனா! ரகசிய காவல்நிலையங்கள் மூலம் உலகை ஆட்டிப்படைக்குமா?

ஒட்டாவா: உலகெங்கிலும் “காவல் சேவை மையங்கள்” என்ற பெயரில் சீனா ரகசிய காவல்துறையை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் குறைந்தது இரண்டு உட்பட, ஆவணப்படுத்தப்பட்ட “ரகசிய காவல் நிலையங்களின்” மொத்த எண்ணிக்கை இப்போது 102 ஆக இருப்பதாக, மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி CTV செய்தி தெரிவித்துள்ளது. உலகின் 53 நாடுகளில் 102 காவல் நிலையங்களை சீனா ரகசியமாக நடத்தி வருவதாக, திங்களன்று (2022 டிசம்பர் 5) வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `ரோந்து மற்றும் … Read more

இந்தியா 90 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது – பில் கேட்ஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் பாராட்டு

புதுடெல்லி: குறுகிய காலத்தில் இந்தியா 90% மக்களுக்கு கரோன தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது என ‘பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ்’ அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். … Read more

ஆசியாவின் சிறந்த கொடையாளிகளாக ஷிவ் நாடார், கவுதம் அதானி அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசியாவின் சிறந்த கொடை யாளிகள் பட்டியலில், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் ஷிவ் நாடார் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள், செல்வாக்குமிக்க மனிதர்கள் உட்பட பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், ஆசிய அளவிலான சிறந்த நன்கொடை யாளர்கள் பட்டியலை 15 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இதன் 16ம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் … Read more

கம்யூனிசம் பரப்பினால் சிறை: இந்தோனேஷியாவில் புதிய சட்டம்| Dinamalar

ஜகார்த்தா: கம்யூனிசத்தை பரப்பினால் சிறை தண்டனை விதிக்கும் வகையில், இந்தோனேஷியாவில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, அதிக மக்கள் தொகையில் உலகின் நான்காவது பெரிய நாடாக உள்ளது. அதுபோல் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒப்புதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்த நாட்டில், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ”அதிபர் ஜோகோ … Read more

ஆப்கனில் குண்டு வெடிப்பு 6 பேர் உடல் சிதறி பலி| Dinamalar

காபூல், ஆப்கானிஸ்தானில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வெடித்துச் சிதறி, ஆறு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மஸாரே ஷரிப் என்ற இடத்தில், அரசின் பெட்ரோலிய நிறுவன பஸ் ஒன்று ஊழியர்களுடன் சென்றது. அப்போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்தது. இதில், பஸ்சில் இருந்த ஆறு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் … Read more

தென் கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்: தென் கொரிய , நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் ‘வீடியோ, சிடி’க்களை விற்பனை செய்தது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

indonesia earthquake: மீண்டும் நடுங்கிய பூமி…. பீதியில் உறைந்த மக்கள்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று அங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த முறை நிலநடுக்கம் நிகழ்ந்த ஜாவா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெம்பர் பகுதிக்கு 280 கிலோ மீட்டருக்கு தென்மேற்கே உணரப்பட்ட … Read more

வடக்கு ஆப்கனில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி| Dinamalar

காபுல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கபட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அரசு அதிகாரிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காபுல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, அருகே சாலையோரம் ஒரு வாகனத்தில் வைக்கபட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில், அரசு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

ஹிஜாப் 'அறநெறி போலீஸ்' பிரிவை ஈரான் கலைத்ததை நம்ப மறுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…!

தெஹ்ரான், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். … Read more

இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து – தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!

பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் தலைவர் இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கட்சி பதவியில் இருந்து நீக்குவது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், … Read more