அமெரிகாவில் குறையும் குரங்கம்மை தொற்று..! – மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

அமெரிகாவில் குரங்கம்மை தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்று கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்து மருத்துவர்கள் “ குரங்கம்மை தொற்று எண்ணிகையில் குறைந்தாலும் இன்னும் முழுமையான அளவில் தடுக்கப்படவில்லை. குரங்கம்மை நோயை முழுமையாக கட்டுப்படுத்த நாம் தவிர முயற்சியில் இறங்க வேண்டும். குரங்கம்மை தோற்று குறித்து பல்வேறு தரப்பினருக்கு சந்தேகங்கள் உள்ளன. குரங்கம்மை நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் .” என்று மருத்துவர்கள் … Read more

விபத்தில் சிக்கிய உக்ரேன் அதிபர் வாகனம்..! – உயிர் தப்பியது எப்படி..?

உக்ரேனிய அதிபர் வாகனம் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ளராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் … Read more

அமெரிக்க டாலருக்கு குட் பை சொல்லும் சர்வதேச வர்த்தகம்! இந்திய நாணயத்தின் முன்னேற்றம்

புதுடெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிரது. இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு செங்குத்தான அதிகரிப்பு உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பத்து மடங்கு இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இப்போது இந்தியாவின் இறக்குமதி எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை பூர்த்தி செய்கிறது என்பது இரு நாடுகளின் வர்த்தக ரீதியிலான உறவுக்கு குறிப்பிடத்தக்க உதாரணம் ஆகும். இந்த நிலையில், ரஷ்யாவுடனான வர்த்தக தீர்வை இந்தியா … Read more

எலிசபெத் ராணி உடல் அருகே பாதுகாப்பில் இருந்த காவலர் திடீர் மயக்கம்: லண்டனில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், … Read more

ராணிக்கு அஞ்சலி செலுத்த 4 கி.மீ தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து, எடின்பரோ நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் அரச குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நேற்று லண்டன் கொண்டு வரப்பட்டது.  அங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகளும், அரண்மனை பணியாளர்களும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் … Read more

கனடா சுவாமிநாராயண் கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களால் பெரும் பரபரப்பு!

கனடா சுவாமிநாராயண் கோயில்: கனடாவின் டொராண்டோவில் உள்ள  சுவாமிநாராயண் கோயிலில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் நாசவேலைகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அந்த ட்வீட்டில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சுவாமிநாராயண் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்திய உயர் தூதரகத்தின் ட்வீட்டிற்கு முன்னதாகவே, பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்துக்கள் சுவாமிநாராயண் … Read more

தெற்காசியாவின் உயரமான இலங்கை லோட்டஸ் கோபுரம் மக்களுக்காக இன்று திறக்கப்பட்டது!

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது. தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் கொழும்பு மத்திய பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை நேரில் சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி மக்கள் கோபுரத்தின் தரை … Read more

மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சாமிவேலு காலமானார்: நாளை இறுதி ஊர்வலம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு தனது 86வது வயதில் இன்று (செப்.,15) அதிகாலை காலமானார். மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான சாமி வேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936ம் ஆண்டு பிறந்த இவர், 1959ம் ஆண்டு மலேசிய அரசியிலில் கால்பதித்தார். பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று … Read more

சர்வதேச ஜனநாயக தினம் | எங்கேயும், எப்போதும், எல்லோராலும்…!

ஜனநாயகம் என்பது ஒரு வழிமுறை. அது ஒரு இலக்கும் கூட. சர்வதேச சமூகத்தின் முழு பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் எட்டப்பட வேண்டிய இலக்கு. தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எல்லோராலும் அனுபவிக்ககூடியதே ஜனநாயம் – இப்படித்தான் ஜனநாயகம் குறித்து ஐ.நா. தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. யோசித்துப் பாருங்களேன்.. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், … Read more

ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர்… வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த அதிபர்களைவிட, ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேயர்கள் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 4 பேர் உள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டவர்கள் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Source link