டி-20 உலக கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து| Dinamalar

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு 2வது அணியாக இங்கிலாந்து முன்னேறியது. குருப் 1 பிரிவில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இலங்கைக்கு அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரன் ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியது. இதனால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறியது.நாளை நடக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய … Read more

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் 'Artemis 1' ராக்கெட் ஏவும் தேதியை அறிவித்தது NASA!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ் 1’ திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த ஆக்ஸ்ட் மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு … Read more

மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு; இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்

லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருவதுடன், அடுத்தடுத்து பெரும் பேரணிகளையும் நடத்தி வருகிறார். இதேபோன்றதொரு நீண்ட பேரணி சமீபத்தில் நடந்தது. இதன்படி, பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனை தொடர்ந்து, லாகூரில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். … Read more

கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை பாதிப்பு; 1,444 பேருக்கு தொற்று உறுதி

ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை தொற்று ஏற்பட்டவர்களில் ஒன்டாரியோ மாகாணத்தில் 688 … Read more

'ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்' என கூறிய எம்.பி. 15 நாட்கள் சஸ்பெண்ட்

பாரிஸ், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது வழக்கம். மத்திய தரைக்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும்போது படகு விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. அப்போது, தரைக்கடல் பகுதியில் இருந்த தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்த … Read more

பொய்களைப் பரப்பவே ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்: பைடன் விமர்சனம்

வாஷிங்டன்: பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, “இப்போது நாம் அனைவரும் எதைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருப்பதை பற்றிதான். ட்விட்டர் மூலம் பொய்களைப் பரப்பவே அவர் அதனை வாங்கியுள்ளார். ட்விட்டருக்கான எடிட்டர்கள் இனி அமெரிக்காவில் இருக்கப்போவது இல்லை. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்” என்றார். … Read more

ரஷிய ஒற்றுமை தினத்தில் அதிபர் புதின் இந்தியாவுக்கு புகழாரம்

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா கடந்த 8 மாதங்களுக்கும் கூடுதலாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் ஒற்றுமை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 4-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவை பாருங்கள். உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டுள்ளது. வளர்ச்சி என்று வரும்போது, இந்தியா நிச்சயம் சிறந்த சாதனைகளை படைக்கும். அதில் … Read more

பசுபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பூஸ்டர்!

சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்கை கட்டமைப்பதற்கு உதவியாக ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் பாகமான பூஸ்டர் அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியது. இந்த பாகம் பூமியில் எந்நேரமும் விழலாம் என அஞ்சப்பட்டது. மேலும், மிகப்பெரிய பாகமான பூஸ்டர் பூமியின் எந்த பகுதியில் விழப் போகிறது என்பதும் தெரியாமல் இருந்தது. இதனால், மிகப்பெரிய சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more

சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்தன

பீஜிங், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதியை கொண்டு செல்வதற்காக 108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட ராக்கெட்டானது கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அது புவி வட்டபாதைக்குள் நுழைந்தது. அந்த உபகரணங்களை அனுப்பி விட்டு, பின்னர், ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. எனினும், இந்த ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற … Read more

வேறு வழியே இல்லை… நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்.  … Read more