உக்ரைன் தூதரகத்திற்கு வந்த ரத்த பார்சல்கள்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சமீபகாலமாக நடந்த வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பட்டுள்ளது. இதனை கண்ட உக்ரைன் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சமீப காலமாக நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. போர் காரணமாக பல்வேறு … Read more

தொழில் முனைவோர் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது: அமெரிக்க தூதர் பாராட்டு!

புதுடெல்லி, தொழில் முனைவோர் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்ததற்காக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பாராட்டு தெரிவித்தார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் கூறியதாவது:- இந்தியா தற்போது தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும், 77,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் உலகளவில் ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது.இந்திய ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன என்றார். தினத்தந்தி Related … Read more

மக்கள் போராட்டதிற்கு அடிபணிந்தது சீன அரசு; மக்கள் கொண்டாட்டம்.!

சீனாவில் கடந்த சில தினங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் மேற்கு பகுதியான ஷின்ஜியாங் … Read more

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு – நியூயார்க் முதலிடம்!

நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200–க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. … Read more

கனடாவில் வேலை செய்ய பெரிய வாய்ப்பு; இந்தியர்கள் ஹேப்பி.!

கனடா நாடு பெரும்பாலானோரின் விருப்ப நாடாக உள்ளது. இந்தியர்கள் பெருமளவில் அங்கு வசிக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அந்நாட்டில் நிரந்தர குடியிரிமை பெற்று இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கனடா நீண்டகாலமாகவே தங்களது பொருளாதார வளர்ச்சியினை அதிகரிக்க, நிரந்தர குடியிருப்பாளார்களை ஊக்குவித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து 4 லட்ச பேருக்கும் மேலாக வெளி நாட்டவர்களை அனுமதித்தது. இந்தநிலையில் கனடா 2025ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பாக இலக்கு நிர்ணயித்துள்ளது. கனடாவில் ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கையானது … Read more

ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் நுழைந்து முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி!

காபுல், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஆக ஹெக்மத்யார் உள்ளார். ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளார். இந்நிலையில், ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று கூடியிருந்த மசூதிக்குள், சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் … Read more

ரஷ்யாவிற்கு செக் வைக்க நினைத்து மாட்டிக் கொண்ட அமெரிக்கா.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 9 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் … Read more

பல நகரங்களில் தளர்வுகள் அறிவிப்பு| Dinamalar

பீஜிங்: கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, பல நகரங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தொடர்ந்து கோவிட் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உரும்குயி நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.64 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,643,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

ஹிட்லர் சிறந்த மனிதர்; இஸ்ரேல் தூதருக்கு அனுப்பப்பட்ட பதிவால் சர்ச்சை.!

கோவாவில் நடந்த ந53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட், ‘“தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திரைப்படத்தை விமர்சித்த அவரது கருத்து, … Read more