கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா

சியோல்: வடகொரியா ‘அடையாளம் தெரியாத ஏவுகணையை’ ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஐந்துக்கும் அதிகமான ஏவுகணை பரிசோதனைகள் நடத்திய வடகொரியா, இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை  பரிசோதித்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.  வடகொரியா கிழக்கு கடலை நோக்கி “அடையாளம் தெரியாத ஏவுகணையை” ஏவியது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 17, வியாழக்கிழமை) ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 6 போலீஸ்காரர்கள் பலி| Dinamalar

பெஷாவர் : பாகிஸ்தானில், போலீஸ்காரர்கள் சென்ற வேன் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வாத் மாவட்டத்தில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து போலீஸ் கான்ஸ்டபிள்கள் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், வேனை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போலீசார் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து … Read more

விமான ஜன்னல் வழியாக செல்போன் வாங்கும் பைலட்… வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் மறந்து விட்டு சென்ற செல்போனை விமான பைலட் விமானத்தின் ஜன்னல் வழியாக வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Long Beach விமானநிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து புறப்படும் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அவசரத்தில் தனது செல்போனை மறந்து விட்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து பைலட் மூலம் உரிமையாளரிடம் … Read more

எந்த நிறுவனத்திற்கும் சி.இ.ஓ.,வாக இருக்க விரும்பவில்லை: எலான் மஸ்க்| Dinamalar

வாஷிங்டன்: டெஸ்லா, ஸ்பேஸ், எக்ஸ், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்களின் தலைவரான எலான் மஸ்க், தான் எந்த நிறுவனத்திற்கும் சி.இ.ஓவாக (தலைமை நிர்வாக அதிகாரி) இருக்க விரும்பவில்லை என்று நீதிமன்ற விசாரணையின் போது, அவர் கூறியிருப்பது பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா பங்குதாரர் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா என்பவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தார். 2018ல், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி(எலான் மஸ்க்) வழங்கிய இழப்பீடு தொகை அளவுக்கு அதிகமாக இருப்பதாக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். … Read more

பாலியல் குற்றச்சாட்டு : மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார், ஏ9 என்கிற ஆன்லைன் தொலைக்காட்சி சேனல் வழியாக மதப்பிரச்சாரம் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் … Read more

உக்ரைன் போரில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவது குறித்து ஐநா.விடம் இந்தியா முறையீடு..!

உக்ரைன் போரில், தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதும் அவர்கள் குடியிருப்புகள் மீதும் தாக்கப்படும் நிலைமை குறித்து ஐநா.விடம் இந்தியா முறையிட்டுள்ளது. நியுயார்க்கில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், ரஷ்யா- உக்ரைன் போரால் ஐரோப்பா மட்டுமின்றி உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடம் கொடுக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.கோவிட் தொற்றுக்குப் பிறகு, போரால் உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் … Read more

குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு..!

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். Izeh நகரின் பரபரப்பான சந்தையில் நுழைந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் ஏற்கனவே ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. Source … Read more

ரஷ்ய ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை போலந்தை தாக்கியதால் பதற்றம்

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் உக்ரைன் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் ஒரு கிராமத்தில் ஒரு ஏவுகணை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த ஏவுகணை ரஷ்யாவின் தயாரிப்பு என போலந்து வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தலைநகர் வார்சாவில் உள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியது. … Read more

இந்தோனேசியா: 271 பேருடன் சென்ற பயணிகள் படகில் தீ விபத்து

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்தனர். காரங்ககேசம் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் படகில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்புப் படையினரும், மீனவர்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து … Read more

ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றார் பிரதமர் மோடி: இந்தோனேசிய உச்சி மாநாட்டில் அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாலி: பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பு லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக, சிறப்பாக செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஜி-20 அமைப்பின் 17-வது உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலிதீவில் கடந்த 2 நாட்களாக நடந்தது. ஜி-20 அமைப்புக்கான தலைமையை அதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்கும். கடந்த ஓராண்டாக இந்த பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்தது. அதன் … Read more