குடியிருப்பு கட்டிடத்தின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த பேராசிரியை கைது..!

நொய்டாவில் குடியிருப்பு கட்டிடத்தின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த பெண் கைது செய்யப்பட்டார். கோட்வாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த பேராசிரியை சுதபா தாஸ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஒருவரிடம் வாக்குவாதம் செய்ததோடு திடீரென அந்த காவலரின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி வெளியான நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட பேராசிரியை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். Source link

சீனாவில் கொரோனா பரவலை தடுக்க 500 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

பீஜிங், சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் உகான் நகரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா தொற்று இன்னும் தொடர்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டன. ஆனால் சீனா, ‘ஜீரோ கோவிட் கொள்கை’யை (கொரோனா தொற்று இல்லாத நாடு கொள்கை) பின்பற்றுவதால் இன்னும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் போன்றவற்றை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்பியல் பல்கலைக்கழகத்தில் தொற்று வெடித்த நிலையில், அங்கு 488 மாணவர்கள், 19 … Read more

பாகிஸ்தானில் ஹிந்து கோவிலில் பொதுமக்களுக்கு அடைக்கலம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கராச்சி : பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள ஹிந்து கோவிலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உணவு அளித்து, அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘தி டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். முகாம்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் கச்சி மாவட்டத்தில் … Read more

வடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடு சட்ட அறிவிப்பு – பிரான்ஸ் கண்டனம்

பாரிஸ், போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை “தானாகவே” பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. வடகொரியா தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் “பேரழிவு நெருக்கடியை” தடுக்க அணுகுண்டுகளைப் தானாக பயன்படுத்தலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என தெரிவித்தார். மேலும் நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என … Read more

பாலைவனத்தின் நடுவே 14 மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப் பாறைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தின் நடுவே 14 மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப் பாறைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுல்லார்போர் பாலைவனத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள பவளப்பாறைகள் 3,950 முதல் 4,250 அடி வரை உயரம் கொண்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலைவனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும், அங்கிருந்த பவளப்பாறைகள் மண்ணில் புதைந்து அதன் மேல் 76,000 சதுர மைல் பரப்பளவில் சுண்ணாம்புக்கற்கள் கொண்டு மூடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   … Read more

ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்| Dinamalar

கீவ் : ரஷ்யாவின் பிடியில் இருந்த முக்கியமான தங்கள் நகரத்தை, கடும் சண்டைக்குப் பின் உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் வட கிழக்கு பகுதிகளில் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையில், 1,400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. இதுதவிர, இரு நாடுகளையும் சேர்ந்த … Read more

பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் நாளை லண்டன் பயணம்| Dinamalar

லண்டன் : மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டனை நோக்கிய பயணத்தை நேற்று துவக்கியது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது.இதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணியின் இறுதி சடங்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் வரும் 19ல்நடக்கிறது.அதன்பின், லண்டனுக்கு … Read more

அரியணை ஏற்கும் நிகழ்வில் சேவகர்களிடம் கடிந்துகொண்ட சார்லஸ்.. மேஜையில் ஏராளமான பொருட்கள் இடையூறாக இருந்ததால் ஆத்திரம்

பிரிட்டன் அரசராக சார்லஸை பிரகடனப்படுத்தும் நிகழ்வின்போது மேஜையை ஒழுங்கு படுத்தும்படி ஊழியர்களிடம் அவர் கடிந்துகொண்ட காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அரியணை ஏற்கும் பிரகடனத்தில் கையெழுத்திட அவர் தயாரானபோது, அந்த சிறிய மேஜையில் பேனா டப்பா, இங்க் பாட்டில் என ஏராளமான பொருட்கள் இடையூறாக இருந்ததால் கடுப்பான சார்லஸ் அவற்றை அப்புறப்படுத்துமாறு அரண்மனை சேவகர்களிடம் கடிந்துகொண்டார்.   Source link

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar

வெல்லிங்டன்: பப்புவா நியூ கினியாவில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் பலியாகினர். பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே தீவு நாடான பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. நேற்று காலை இந்த தீவில் இருந்து ௬௬ கி.மீ., துாரத்தில் பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இது, ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி … Read more

இரண்டாம் எலிசபெத்தின் உடல் எடின்பர்க் நகருக்கு கொண்டுசெல்லப்பட்டது..!

பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் நகருக்கு முழு அரசு மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டது. பால்மோரல் கோட்டையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட ராணியின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர். எடின்பர்க் நகருக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணியின் உடல் பின்னர் லண்டன் கொண்டுசெல்லப்பட்டு 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது. Source link