ஆன்லைனில் விற்பனைக்கு வந்த ராணி எலிசபெத்தின் டீ பேக்… விலை எவ்வளவு தெரியுமா?

உலக அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் தங்களது வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் வாழும் காலத்திலோ, அவர்களின் காலத்துக்கு பின்போ ஏலம் விடப்படுவது வழக்கம். இல்லையெனில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு அப்பொருட்கள் பாதுகாக்கப்படும் நடைமுறையும் உண்டு. மகாத்மா காந்தி பயன்படுத்திய கண் கண்ணாடி, கை கடிகாரம், ராட்டை, அவர் எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் ஏலம் விடப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு … Read more

ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் அலங்கரிக்கும் கோஹினூர் வைரம்: திரும்பபெற வலுத்து வருகிறது கோரிக்கை

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் கிரீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் 1849 ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தான் இருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை கைப்பற்றிய உடன் அவை இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 1850 ம் ஆண்டு விக்டோரியா மகாராணியிடம் வழங்கப்பட்டது. 105 காரட் மதிப்புள்ள … Read more

ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்: 6 மாத கால போரில் திருப்புமுனை

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் முக்கியப் பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது போரின் திருப்புமுனையாகவே கருதப்படுகிறது. உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக் கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இந்நிலையில் ரஷ்ய … Read more

புறப்பட்டது ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்..! – ஏராளமான மக்கள் அஞ்சலி..!

மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வழிநெடுகிலும் பொதுமக்கள் நின்று மரியாதை செலுத்தி வருகின்றனர். ராணி எலிசபெத்தின் உடல் நாளை செயின்ட் கிலேஸ் கதீட்ரல் தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. ஊர்வலத்தில் பங்கேற்கும் அரச குடும்பத்தினர், ராணியின் உடலை பெற்றுக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராணியின் உடல் எடின்பர்க்கில் இருந்து தனி விமானத்தில், இங்கிலாந்தின் நார்த்ஹோல்ட் நகருக்கு கொண்டு வரப்படுகிறது.பின்னர் சாலை மார்க்கமாக … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த இந்துக்கள்..!

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்துக்கள் கோயில் கதவைத் திறந்து மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பலுசிஸ்தானில் கச்சி மாவட்டத்தில் உள்ள ஜலால் கான் என்ற கிராமம் மழை வெள்ளம் காரணமாக மாகாணத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள இந்துக்கள் மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்க அடிப்படையில் இந்து கோயிலின் கதவுகளை திறந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.   Source link

தொடரும் கரோனா உயிரிழப்புகள் – உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

ஜெனீவா: கரோனாவால் உலகில் 44 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று உலக அளவில் குறைந்து வருவதாகக் கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், “கரோனா தொற்றும் உயிரிழப்புகளும் உலக அளவில் குறைந்து வருவது உண்மைதான். இது ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் எனற போதிலும், … Read more

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – சுனாமி எச்சரிக்கை விடுப்பால் பரபரப்பு..!

7.7 ரிக்டர் அளவில் பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஏற்ப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவானது. பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. அப்பகுதிகளில், செயலில் உள்ள எரிமலைகள் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் வழக்கம். இந்நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் … Read more

துபாயில் தரையிறங்கும் ’நிலா’… அங்க தான் சர்ப்ரைஸே- வியக்கப் போகும் உலகம்!

தொழில்நுட்பம் அதிரி புதிரியாய் வளர்ந்து நிற்கும் நிலையில், ஆச்சரியம் நிறைந்த மிகவும் பிரம்மாண்டமான கட்டிடங்களை உருவாக்குவது எல்லாம் சாதாரணமாகி விட்டது. அந்த வரிசையில் துபாயில் நிலவை போன்ற மிகவும் பெரிய சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு மட்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டை சேர்ந்த மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் (Moon World Resort Inc.,) என்ற நிறுவனம் களமிறங்குகிறது. 735 அடி உயரத்திற்கு உலகமே வியக்கும் அளவிற்கு பார்ப்பதற்கு நிலவை … Read more

75 ஆண்டுக்குப் பின் சகோதரியை சந்தித்த முதியவர்| Dinamalar

இஸ்லாமாபாத்:இந்தியா – பாக்., பிரிவினையால் குடும்பத்தினரை பிரிந்த சீக்கியர், 75 ஆண்டுக்குப் பின், தன் சகோதரியை சந்தித்த உருக்கமான சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்ஜித் சிங், 80. கடந்த 1947ல் இந்தியா – பாக்., பிரிவினையின்போது, இவர், தன் குடும்பத்தினரை பிரிந்தார். சந்திக்க விருப்பம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர், பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். அமர்ஜித் சிங்கையும், அவரது மூத்த சகோதரியையும் ஜலந்தரில் விட்டுச் சென்றனர். … Read more

அமெரிக்காவில் போலியோ வைரஸ்! உஷார்.

நியூயார்க்: கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாங் ஐலாண்ட் எனுமிடத்திற்கு உட்பட்ட நசாவு கவுன்ட்டியில் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது, அதில் போலியோ வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசரநிலையை பிரகடனம் செய்தார். இந்நிலையில் அங்கு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்க அனுமதியளிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார … Read more