புயலால் மின்உற்பத்தி பாதிப்பு: இருளில் மூழ்கிய கியூபா..!!

ஹவானா, கரீபியன் நாடான கியூபாவின் மேற்கு பகுதிகளை நேற்று முன்தினம் இவான் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் அந்த நாட்டின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்கள் கடும் சேதம் அடைந்தன. இதனால் மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது. இதனால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 1.10 கோடி மக்கள் இருளில் தவிக்கின்றனர். … Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் புதிய நிதி மந்திரி பதவியேற்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பண நெருக்கடியில் தவித்து வருகிறது. இதற்கிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை அந்த நாட்டை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் நேற்று பதவியேற்றார். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவரான இஷாக் தார் இதற்குமுன் 4 முறை நிதி மந்திரியாக … Read more

Mars OR Venus: செவ்வாயை விட சுக்கிரன் மேல் விஞ்ஞானிகளுக்கு காதல் அதிகம்? ஏன்?

‘ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிரனில் இருந்து வந்தவர்கள்’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். இந்த பழமொழி தொடர்பான ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும், மனிதர்கள் வேறு கிரகத்திற்கு செல்வது என்றால், முதலில் செல்ல வேண்டும்? அல்லது எந்த கிரகத்திற்கு முதலில் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நூற்றுக்கணக்கான எக்ஸோப்ளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, சுக்கிரன் கிரகம் தொடர்பான அறிவியல் ரீதியிலான ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமானது. இந்த கண்டுபிடிப்பு இந்த கிரகங்களில் மக்கள் வாழக்கூடியவை எவை … Read more

Monkeypox Vaccine: குரங்கம்மை நோய்க்கு ஜின்னியோஸ் தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது

நியூயார்க்: இந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குரங்கம்மை நோயின் தாக்கம், அமெரிக்காவில் 25,000 க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் போல பரவலாக பாதிப்பை இந்த நோய்த்தொற்றும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உலகமே கவனமாக இருக்கிறது. நோயைத் தடுக்க ஆராய்ச்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாக எடுக்கப்பட்டுள்ளன. குரங்கு அம்மை தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், முதல் டோஸ் செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் இது பாதுகாப்பு அளிக்கத் தொடங்கி விடுவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று (புதன்கிழமை, … Read more

காங். மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்| Dinamalar

புவனேஸ்வரம்: மூத்த காங். தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக், இவரது மனைவி ஜெயந்தி பட்நாயக்,90 இவர் நான்குமுறை லோக்சபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி்ல நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். … Read more

புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய கியூபா| Dinamalar

ஹவானா, புயல் தாக்கி சின்னாபின்னமாகியுள்ள கியூபா இருளில் சிக்கித் தவிக்கிறது.வட அமெரிக்காவில் கரீபியன் கடல் பகுதியில் இருக்கும் கியூபாவில், ‘இயன்’ புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. தீவு நாடான கியூபாவில் புயல் மற்றும் கன மழை காரணமாக, ஒரு கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக கன மழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மின் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்து கிடக்கின்றன. இதனால், நாடே வெள்ளத்தில் மட்டுமின்றி, இருளிலும் மூழ்கிக் கிடக்கிறது. பேரிடர் மீட்புப் படையினர் … Read more

உலகெங்கும் சட்டவிரோதமாகபோலீஸ் ஸ்டேஷன் துவங்கிய சீனா| Dinamalar

பீஜிங் :தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.உலகின் அதிகாரமிக்க நாடாக மாறுவதற்கான முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டு பிடிப்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களைஅந்த நாடு துவக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன .கனடா, அயர்லாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த சட்டவிரோத போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. சீனாவின் … Read more

மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி| Dinamalar

சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, நேற்று அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியான ஆங்சோன் என்ற பகுதியில் இருந்து இரு ஏவுகணைகளை … Read more

சவுதி அரேபிய பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார். சவுதி அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த அவரை பிரதமராக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக முகமது பின் சல்மானின் சகோதரரான காலித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் காலித், துணை … Read more

உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 17 பேர் பலி.. உரிமையாளர் கைது!

சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வட கிழக்கு சீனாவில் உள்ள, ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற இடத்தில், உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து … Read more