பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

காபூல்: பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும் இடையே கடும் சண்டை நடை​பெற்று வரு​கிறது. கத்​தார் நாட்​டின் சமரசத்​தின்​பேரில் கடந்த 19-ம் தேதி சண்டை நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. எனினும் இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களில் தொடர்ந்து பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. பாகிஸ்​தான், … Read more

ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த திட்டம்

காபூல், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்க்கொண்டது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியாவின் திடீர் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் சிந்து நதி நீர், நிறுத்தப்பட்டதை போர் நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்று அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப். இந்த நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த … Read more

சாலையை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகள் – ஆஸ்திரேலியாவில் வினோதம்

சிட்னி, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தேசிய பூங்காவில் சிவப்பு நண்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நண்டுகள், தீவில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறிய அளவிலான குழிகளை ஏற்படுத்தி அதை தங்கள் வாழ்விடமாக ஆக்கிக்கொள்கின்றன. இனப்பெருக்க காலம் வரும்போது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில், இந்த சிவப்பு நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றன. கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை ஏற்படுகின்றன. அந்த குழிகளில் பெண் நண்டுகள் முட்டைகளை இட்டு, சுமார் 2 வாரம் … Read more

டொமினிகன் குடியரசு நாட்டை மிரட்டும் ‘மெலிசா’புயல் – 11 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்

சாண்டோ மொமிங்கோ, வட அமெரிக்காவின் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினியன் குடியரசு நாட்டை ‘மெலிசா’ புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் டொமினிகன் குடியரசில் உள்ள 11 மாகாணங்களுக்கு அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, மீதம் உள்ள 11 மாகாணங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘மெலிசா’ புயல் கரையை கடக்கும் சமயத்தில் … Read more

அமெரிக்கா பொருளாதார தடை; ரஷியா ஒரு போதும் அடிபணியாது – புதின் ஆவேசம்

மாஸ்கோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி – நட்பை வளர்த்தார்.மேலும் உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார். ரஷியாவுக்கு எதிராக … Read more

தென் கொரியாவில் 30-ந்தேதி சீன அதிபர் ஜின் பிங்- டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன், தென் கொரியாவில் ஆசிய- பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். மறுநாள் (30-ந்தேதி) அவர் சீன அதிபா ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார். டிரம்ப் இன்று இரவு ( வெள்ளிக்கிழமை) மலேசியா செல்வார் என்றும் அதன்பிறகு ஜப்பான் … Read more

ஐஸ்லாந்தில் கொசு..இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாகிறது? காரணம் இதுதான்..

Why Mosquitoes In Iceland Are Big Deal : ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் தென்பட்டுள்ளன. இது குறித்து உலகே பேசி வருகிறது. இப்படி, சிறிய கொசுக்கள் ஒரே இடத்தில் தாேன்றுவது குறித்து ஏன் இத்தனை பேர் பேசி வருகின்றனர்? காரணம் இதோ!  

அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது

கலிபோர்னியா: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர். இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் தெற்கு எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​னார். இவரை கலி​போர்​னியா எல்​லை​யில் ரோந்து போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போதைய அதிபர் பைடன் நிர்​வாகம் சட்ட விரோத குடியேறிகளை விடு​வித்​து, அவர்​கள் மீதான வழக்​கு​களை நிலு​வை​யில் … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு

பெய்ஜிங்: சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013-ம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 2023-ம் ஆண்​டில் அவர் 3-வது முறை அதிப​ராக தேர்வு செய்​யப்​பட்டு பதவி​யில் நீடிக்​கிறார். அவரது தலை​மைக்கு எதி​ராக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், மூத்த ராணுவ தளப​தி​கள் போர்க்​கொடி உயர்த்தி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக ஏராள​மான தலை​வர்​கள் மாய​மாகி இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. … Read more

உக்ரைன் போரில் ஈடுபடுத்த மிரட்டல்; ரஷியாவில் தவிக்கும் ஐதராபாத் வாலிபர் – கண்ணீர் வீடியோ

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது அகமது. இவருடைய மனைவி அப்சா பேகம். இந்த தம்பதிக்கு சோயா பேகம் (10) முகமது தைமூர்(4) என்ற பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் மூலம் முகமது அகமது ரஷியா அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமை அனுபவித்து வருவதாக தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இது தொடர்பாக அப்ஷா பேகம் வெளியுறவுத்துறை மந்திரி … Read more