சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் – பிரதமர் மோடி கொடுத்த கடிதத்தை ஒப்படைத்தார்

ஜெட்டா: மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக கடந்த 10-ம் தேதி சவுதி அரேபியா சென்றார். வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு ஜெய்சங்கர் சவுதி சென்றது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில், ஜெட்டா நகரில் அந்நாட்டு பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸை ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை பட்டத்து இளவரசரிடம் ஒப்படைத்தார். இந்த சந்திப்பின்போது, இரு … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கோவிலில் அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்

குவெட்டா, பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜலால்கான் என்கிற கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு இந்துக்கள் கோவிலில் அடைக்கலம் கொடுத்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக கோவிலுக்கு வரும்படி ஒலிபெருக்கியின் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதோடு … Read more

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் பலி

துனிஸ், உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸ் பிராந்தியத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் இத்தாலி நோக்கி புறப்பட்டனர். இந்த படகு துனிசியாவின் மஹ்தியா … Read more

உஸ்பெகிஸ்தான் செல்கிறார் ஜிங்பிங்; பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஷீ ஜிங்பிங், இரண்டாண்டுகளுக்குப் பிறகு தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார். கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு அவர் செல்கிறார். இந்த பயணத்தின் போது, நம் பிரதமர் மோடியை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் வரும் 15 – 16ல் நடக்கிறது. இந்த அமைப்பில் சீனா, … Read more

இலங்கையில் அரிசி வாங்குவதற்கு பணம் இல்லை அரசு மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொழும்பு, இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதேநேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதைப்போல பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் ெதாலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்சி … Read more

“இலங்கை தமிழர்கள் விஷயத்தில் முன்னேற்றம் இல்லை” – ஐநாவில் அதிருப்தி தெரிவித்த இந்தியா

ஜெனீவா: ஐநா சபையில் இலங்கை தமிழர்கள் இனப்பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பேசினார். அதில், “இலங்கையின் தற்போதைய நெருக்கடியானது அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை நிரூபித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாடு கடந்த காலத்தை விட … Read more

பிரிட்டன் பார்லி.,யில் மன்னர் சார்லஸ் உருக்கம்| Dinamalar

லண்டன்:தன் தாய் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த தன்னலமற்ற கடமையைத் தொடரப் போவதாக, பிரிட்டன் பார்லிமென்டில் பேசுகையில், புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மூத்த மகன் சார்லஸ், 73, மன்னராக பொறுப்பேற்று உள்ளார்.ராணியின் இறுதிச் சடங்கு, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பார்லிமென்டில் நேற்று உரையாற்றினார் … Read more

107 வாரிசுகள், 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பு.. கென்யாவில் ஒரு கல்யாண மன்னன்..!

கென்யாவில் 61 வயது முதியவர் ஒருவர் 15 மனைவிகள், 107 வாரிசுகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். டேவிட் சாகாயோ கலுஹானா என்ற அந்த நபர், 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்கள் மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 வாரிசுகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று காட்சியளிக்கிறது. இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. யூடியூபில் அவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது. … Read more

செல்ஃபோனை ரொம்ப யூஸ் பண்ணாதீங்க… அப்புறம் அவ்வளவுதான்!

சில, பல ஆண்டுகளுக்கு முன்புவரை அலுவல்ரீதியான தகவல் தொடர்புக்கும், உறவுகளுக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்ஃபோன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்த பெயருக்கேற்ப ஒருவர் பேசுவற்கு மட்டுமின்றி யூடியூப், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோக்களை கண்டுக்களிப்பதில் தொடங்கி G pay,PhonePeஇல் பணபரிவர்த்தனை செய்வது வரை சகலமும் இன்று ஸ்மார்ட்ஃபோனை வைத்துதான். இதேபோன்று கார், ஆட்டோ ஸ்டாண்ட்களை பொதுமக்கள் தேடி சென்று தங்களது … Read more

இங்கிலாந்து ராணி எலிசபெத் ரகசிய கடிதம்: 2085ஆம் ஆண்டுதான் பிரிக்க முடியும்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் வரும் 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more