புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவருக்கு அருகில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம்

Queen Elizabeth II’s state funeral: இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். பிரிட்டனில் 7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் பிலிப்புடன் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார். அவரது பெற்றோரும் விண்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள சிறிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக இன்று லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். இறுதிச் சடங்குகள் இந்திய நேரப்படி பிற்பகல் … Read more

மகாராணி எலிசபெத் இறுதிசடங்கு : சாதாரண உடையில் இளவரசர் ஹாரி – ஏன் தெரியுமா?

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலம் , வெஸ்மின்ஸ்டர் அபேயில் ராணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரிட்டன் மக்கள், அரச குடும்பத்தினர், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். மகாராணியின் இறுதி ஊர்வலம் உலகம் முழுவதும் நேரலையில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பட்டு வருகிறது. சென்ட்ரல் லண்டன் பகுதியில் ட்ரோன் பறப்பதற்கு தடை தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம், விமானங்களின் சத்தம் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு … Read more

ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம்: நேரலையில் நிகழ்வுகளை ஒளிபரப்பும் அரச குடும்பம்

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்திய சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார். இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தையும் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதனை உலக மக்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களின் வழியே பார்த்து வருகின்றனர். அதோடு … Read more

ஹிந்து கோவில் சூறையாடல்: காவி கொடியை அகற்றிய மர்ம கும்பல்!

பிரிட்டன் நாட்டில் ஹிந்து கோவில் ஒன்றில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரிட்டன் நாட்டின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு … Read more

எங்கள் வைரத்தை திருப்பிக் கொடுங்கள்: ராணி எலிசபெத் மறைவுக்குப் பின் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கும் குரல்

டர்பன்: இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கை ஒட்டி லண்டன் நகரில் உலகத் தலைகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். உலகின் கவனத்தை பிரம்மாண்ட இறுதி அஞ்சலி ஈர்த்துக் கொண்டிருக்கும் சூழலில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து நோக்கி பல குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச கவனத்தையும் அவை ஈர்த்துள்ளன. அரச குடும்பத்தின் பாரம்பரிய நகைகளில் ஒன்றான செங்கோலில் உள்ள வைரத்தை திருப்பி அளிக்குமாறு அந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா என்றழைக்கப்படும் இந்த … Read more

ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லீசெஸ்டர்ஷையர்: இங்கிலாந்தில் வகுப்புவாத பதற்றம் வன்முறையாக மாறியது. இதில், அங்குள்ள ஹிந்து கோவிலில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி … Read more

திபெத்தில் அத்துமீறும் சீனா… DNA தரவுகள் மூலம் கணக்காணிப்பு நடவடிக்கை!

திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பான சம்பவம் தற்போது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திபெத் மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி என்று சீனா தொடர்ந்து தொடர்ந்து பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், தற்போது உயிரியல் தரவுகள் மூலம் திபெத் மக்களை கண்காணிக்க சீனா பெரிய அளவிலான டிஎன்ஏ சோதனையை நடத்துகிறது. திபெத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்களில், பயோ – செக்யூரிட்டி கொள்கை அடிப்படையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த … Read more

‛தைவான் மீது கை வைத்தால்…: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் … Read more

ஹிஜாபை எரித்து, தலைமுடியை வெட்டி எதிர்ப்பு – ஈரான் இளம்பெண் மரணத்திற்கு கடும் போராட்டம்

ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண்ணை அந்நாட்டு போலீசார் விசாரணையின்போது அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஈரானிய பெண்கள் தங்களின் ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியை வெட்டியும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  22 வயதான மாஷா அமினி, ஈரானின் காவலர்களால், ஹிஜாபை முறையாக அணியவில்லை என்பதால் கைதாகியுள்ளார். போலீசார் விசாரணையை அடுத்து நீண்ட நாள்களாக கோமாவில் இருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை (செப். 16) உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, … Read more

உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் அறிமுகம்| Dinamalar

வாஷிங்டன் : உலகில் முதன் முறையாக, பறக்கும் பைக்கை தயாரித்துள்ள ஜப்பான், அதை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகமயமாக்கலுக்குப் பின் சந்தைகளில் நவீன வாகனங்களின் அணிவகுப்பு தொடர்கிறது. தற்போது சந்தையில் தொடர்ச்சியாக அதிவேக பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.கார் கடலில் செல்வதும், பைக் பறப்பதும் என ஹாலிவுட் சினிமாக்களில் கற்பனையான காட்சிகளைக் பார்த்து மகிழ்ந்திருப்போம்.‘பேட் மேன்’ என்ற படத்தில், பறக்கும் … Read more