ஈரான் பெண்கள் போராட்டம்… எம்பி செய்த செயலை பாருங்க!

இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் தாக்குதலில் சுயநினைவை இழந்த மாஷா என்ற இளம்பெண் கடந்த மாதம் உயிரிழந்தார்.

தெஹ்ரானில் நிகழ்ந்த இச்சம்பவம் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இக்கௌடூர சம்பவத்தை கண்டித்துஈரான் முழுவதும் பெண்கள் போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், அதனை தீயிட்டு எரித்தும் பெண்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்கலில் நடைபெற்றுவரும் பெண்களின் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுவீடன் நாட்டை சேர்ந்த பெண் எம்.பி ஒருவர் செய்துள்ள செயல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அபிர் ஐ சையானி என்ற பெயர் கொண்ட அந்த எம்பி தனது தலைமுடியை வெட்டி பெண்களின் இப்போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஈரானில் நடைபெற்றுவரும் பெண்களின் போராட்டத்துக்க ஆதரவு தெரிவிக்கும் விதத்திலும். ஈரான் மக்களுக்கு எதிரான அந்நாட்டு அரசின் அடுக்குமுறைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் தமது குரல் ஒலிக்கும் என்பதை உணர்த்தும் நோக்கிலும் தமது கூந்தலை வெட்டி கொண்டதாக கூறியுள்ளார் அபிர் ஐ சையானி .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.