ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் … Read more

பாகிஸ்தான் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,545 ஆக உயா்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பானது இதுவரை இல்லாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 16 சிறுவர்கள், 7 பெண்கள் உள்பட 37 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அங்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை கனமழை, வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை … Read more

‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது’ – அதிபர் புதினிடம் கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு

வாஷிங்டன்: ‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ’ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தனது கருத்தை நாசுக்காக தெரிவித்த பிரதமர் மோடியை அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று காலத்துக்குப்பின், உலகம் … Read more

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!!

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், அந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே … Read more

சீனாவில் புதிதாக 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 986 பேருக்கு … Read more

ஜோர்டனில் கட்டிட விபத்தில் சிக்கிய 10 மாத குழந்தை – சிறிய காயமும் இன்றி உயிர்தப்பிய அதிசயம்

அம்மான், ஜோர்டன் நாட்டின் தலைநகர் அம்மானில், 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றிம் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. விபத்து நடந்து சுமார் 24 மணி நேரங்களுக்குப் பிறகு, மீட்புப் படையினர் … Read more

1.6 கோடி குழந்தைகள் பாக்.,கில் பாதிப்புயுனிசெப் பிரதிநிதி தகவல்| Dinamalar

இஸ்லாமாபாத்:’பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 லட்சம் குழந்தைகள் உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்’ என, ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதம் முதல் கன மழை பெய்து வருகிறது. நாடு முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதுவரை 3.5 கோடி பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், யுனிசெப் எனப்படும் ஐ.நா., சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் பிரதிநிதி அப்துல்லா … Read more

பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானம் சீனா மீண்டும் முட்டுக்கட்டை| Dinamalar

நியூயார்க்:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சஜித் மிர்ரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மற்றொரு அண்டை நாடான சீனா ஆதரவாக இருந்து வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலரை, சர்வதேச பயங்கரவாதி களாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள பல தீர்மானங்களுக்கு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.கடந்த நான்கு மாதங்களில், … Read more

லண்டன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: நாளை செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக கடந்த செப்.,14ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று(செப்.,17) லண்டன் புறப்பட்டார். 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை செலுத்துவார். லண்டன்: நாளை … Read more

1.6 கோடி குழந்தைகள் பாக்.,கில் பாதிப்பு: யுனிசெப் பிரதிநிதி தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-‘பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 லட்சம் குழந்தைகள் உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்’ என, ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது .நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதம் முதல் கன மழை பெய்து வருகிறது. நாடு முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதுவரை 3.5 கோடி பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், யுனிசெப் எனப்படும் ஐ.நா., சபையின் … Read more