500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பா..!

ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தின் பாதிப் பரப்பளவுக்கு மோசமான வறட்சி பரவக்கூடும் என்று ஐரோப்பிய வறட்சி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பால பகுதிகளில் நிலவும் அதீத வெப்ப அலையால் பல பகுதிகள் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு நீர்மட்டம் குறைந்து, நீர்மின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணின் ஈரப்பதமும் வறண்டு கோடைகால பயிர்களான சோயாபீன், சூரியகாந்தி, … Read more

பாடப் புத்தகத்தில் சர்ச்சை வரைபடங்கள் – 27 கல்வி அதிகாரிகள் மீது சீன அரசு நடவடிக்கை

பெய்ஜிங்: சீன பள்ளி பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வரைபடங்கள் இடம்பெற்றதால் கல்வி அதிகாரிகள் 27 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆரம்ப கல்வி கணித புத்தகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டன. இது சீனா முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் தோற்றம் சீன குழந்தைகள் போல் இல்லை. படங்கள் அழகாக இல்லாமல் அசிங்கமாக இருந்துள்ளன. ஒரு வரைபடத்தில் சிறுவர்கள், சிறுமிகளின் உடையை இழுப்பது போன்றும், ஒரு … Read more

சீனாவின் போயாங் ஏரி| Dinamalar

நம் அண்டை நாடான சீனாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி விட்டன. செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியான்ஜி மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற போயாங் ஏரியில் வழக்கமான கொள்ளளவை விட, 25 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் இருந்து சுற்றுப்புறத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாயிகள் கால்வாய்களை தோண்டியுள்ளனர். ‘ட்ரோன்’ எனப்படும் ஆள் இல்லா உளவு விமானம் … Read more

அமெரிக்காவின் அதிநவீன ட்ரோன்கள் விரைவில் இந்திய முப்படைகளில் சேர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிநவீன பிரிடேட்டர் ரக ட்ரோன்கள் இந்திய முப்படைகளில் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. இந்த கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. சீன, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ட்ரோன்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இஸ்ரேல் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ஹெரோன் ரகத்தை சேர்ந்த … Read more

இந்தியா – பிரிட்டன் உறவில் மாற்றம்

லண்டன் : பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், ”இந்தியா – பிரிட்டன் இடையே, இரு வழி உறவு ஏற்படுத்தப்படும்,” என உறுதியளித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதையடுத்து, கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.இறுதிகட்ட தேர்தலில், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், வெளியுறவு அமைச்சர் லிஸ் … Read more

சீனாவின் பல பகுதிகளுக்கு அதிக வெப்பத்திற்கான ரெட் அலெர்ட்

சீனாவில் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், அந்நாட்டில் பல பகுதிகளுக்கு மீண்டும் அதிக வெப்பத்திற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷாங்காய்,  குவாங்டாங் உள்ளிட்ட மாகாணாங்களில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என்றும் ஹுனான், ஜியாங்சி, புஜியன் உள்ளிட்ட மாகணங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  Source link

இந்தியா – பிரிட்டன் உறவில் மாற்றம்: பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனாக் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், ”இந்தியா – பிரிட்டன் இடையே, இரு வழி உறவு ஏற்படுத்தப்படும்,” என உறுதியளித்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதையடுத்து, கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.இறுதி கட்டத் தேர்தலில், … Read more

மத்தியதரை கடலில் மூழ்கிய 130 அடி நீள சொகுசு படகு… பரபரப்பு காட்சி

இத்தாலி அருகே மத்தியதரை கடலில் மூழ்கத் தொடங்கிய சொகுசு படகில் சிக்கிக்கொண்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த அந்த 130 அடி நீள சொகுசு படகு மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கத்தொடங்கியது. அந்த படகில் இருந்து அனுப்பப்பட்ட அபாய சிக்னலை கவனித்து அங்கு விரைந்த கடலோர காவல் படையினர், படகில் இருந்த 4 பயணிகள் மற்றும் 5 மாலுமிகளை மீட்டனர். சொகுசு படகு வேகமாக மூழ்கியதால் அதனை … Read more

தவறான வானிலை முன்னறிவிப்பு; ஹங்கேரியில் வானிலை ஆய்வாளர்கள் பணி நீக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20-ந் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்டும். குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதாபெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாகும் இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி புனித ஸ்டீபன் தினம் … Read more

மாஜி பிரதமருக்கு சிறை; சுப்ரீம் கோர்ட் உறுதி| Dinamalar

புத்ரஜயா : அரசு நிதியைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில், மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு விதிக்கப்பட்ட, 12 ஆண்டு சிறை தண்டனையை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக, 2009 முதல் 2018ம் ஆண்டு வரை இருந்தவர் நஜிப் ரசாக், ௬௯. மிகவும் அதிகாரமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவர், நாட்டின் இளம் எம்.பி., இளம் அமைச்சர் என, பல பெருமைகளை பெற்றவர்.கடந்த 2009ல், இவர் பிரதமராக பதவியேற்றதும், ‘1 … Read more