மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி| Dinamalar

சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, நேற்று அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியான ஆங்சோன் என்ற பகுதியில் இருந்து இரு ஏவுகணைகளை … Read more

சவுதி அரேபிய பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார். சவுதி அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த அவரை பிரதமராக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக முகமது பின் சல்மானின் சகோதரரான காலித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் காலித், துணை … Read more

உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 17 பேர் பலி.. உரிமையாளர் கைது!

சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வட கிழக்கு சீனாவில் உள்ள, ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற இடத்தில், உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து … Read more

கலவரத்தை தூண்டியதாக ஈரான் முன்னாள் அதிபரின் மகள் கைது

தெஹ்ரான்: ஈரானில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் அதிபரின் மகள் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் போராட்டத்தை தூண்டியதாக முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பர் ஹாஷிமி மகள் ஃபாசியா ஹாஷிமி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஃபாசியா மீது முன்னரே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. … Read more

மூன்றாவது மார்பகம் இருப்பது அழகா அசிங்கமா? இதற்காக அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்

லண்டன்: அழகுக்காக அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அழகாக தோற்றமளிக்கக்கூடாது என்பதற்காக அறுவைசிகிச்சை செய்து மூன்றாவது மார்பகத்தை பொருத்திக் கொண்ட பெண்ணைப் பற்றிக் கேட்டதுண்டா? அசிங்கமாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறும் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தால் அவர் அழகாகவே இருக்கிறார். இது அமெரிக்க பெண்மணியின் விபரீதமான ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி வித்தியாசமானவராக மாறியிருக்கிறார் 21 வயது இளம்பெண். 21 வயதான Jasmine Treadville, தனது மூன்றாவது மார்பகத்தை பொருத்துவதற்கு வினோதமான அறுவை … Read more

பாதுகாப்புக்கு வந்த போர் விமானங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர், தனது பையில் வெடிகுண்டு உள்ளதாக கூறியது, விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலியாக மிரட்டல் விடுத்த அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போர் விமானங்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் பாதுகாப்பாக சிங்கப்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் சான் … Read more

அமெரிக்க தேர்தலை குறிவைத்த ரஷ்யாவில் இருந்து இயங்கிய நெட்வர்க்குகளை நீக்கியது மெட்டா

அமெரிக்க இடைத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விவகாரத்தினால் அதிக எச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை மெட்டா செய்தித் தொடர்பாளர் CNN இடம் கூறினார். நெட்வொர்க் சிறியதாக இருந்தது என்றும், அது எந்த கவனத்தையும் பெறவில்லை என்றும் கூறப்பட்டாலும், அரசியல் ஸ்பெக்ட்ரமின் இருபுறமும் அமெரிக்கர்களுக்காக காட்டப்படும் சில கணக்குகள் இதில் அடங்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.  “அவர்கள் அமெரிக்கர்கள் போல் நடிக்கும் போலி கணக்குகளை நடத்தி, அமெரிக்கர்களைப் போல பேச … Read more

ஈரானில் தொடரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: தலைமுடியை வெட்டி ஆதரவளித்த துருக்கி பாடகி

அன்காரா: ஹிஜாப்புக்கு எதிராக போராடும் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி பாடகி மெலக் மோஸ்சோ மேடை நிகழ்ச்சியின் போது தனது முடியை வெட்டிக் கொண்டார். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்..!! – பொது வாக்கெடுப்பில் முடிவு

ஹவானா, கம்யூனிஸ்டு நாடான கியூபாவில் பல ஆண்டுகளாகவே ஓரின சேர்க்கையாளர்கள் வெளிப்பாடையான பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர். 1960களின் முற்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும், பெண்களும் துன்புறுத்தப்பட்டு அரசு எதிர்பார்ப்பாளர்களுடன் வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் 1979-ம் ஆண்டு கியூபாவில் ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. கியூபா அரசாங்கத்துக்கு வெளியேயும், உள்ளேயும் ஓரின சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர். கடந்த 2018-ம் … Read more

விண்கற்களை திசை திருப்பி நாசா விண்கலம் சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை திசைதிருப்பி விடும், ‘நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி அமைப்பின் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், நாசா அமைப்பு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பூமியை விண்கற்கள் தாக்குவதை தடுப்பது குறித்து நாசா ஆய்வு செய்தது. இதன்படி, ‘டார்ட்’ எனப்படும், விண்கற்களை திசை திருப்பிவிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்த முறையில், விண்கலத்தை வேகமாக மோதச் செய்து, விண்கல்லை … Read more