வங்கதேச படகு விபத்துபலி 49 ஆக அதிகரிப்பு| Dinamalar

டாக்கா, :வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்தது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் நேற்று முன் தினம் மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 பேர் பயணம் செய்துள்ளனர். படகு, நடு ஆற்றில் சென்ற போது அதிக பாரம் காரணமாக திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த பயணியர் நீரில் … Read more

கடலுக்கடியில் வெடித்த எரிமலை – பசிபிக் பெருங்கடலில் உருவான தீவு!

பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா தீவுகளில் அமைந்துள்ள இந்த எரிமலை, நீராவி மற்றும் சாம்பல் ஆகியவற்றைக் கக்கத் தொடங்கியது. அவை கடலில் கலந்து நீரின் நிறத்தை மாற்றி விட்டன. இந்த எரிமலை வெடித்த 11 மணி நேரத்திற்குப் பிறகு, … Read more

உலகில் 20,000 லட்சம் கோடி எறும்புகள்; ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன் : உலகெங்கும், 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை 1,200 கோடி கிலோ என்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த உலகத்தில் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை. இதில், ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சிறிய எறும்பாக இருந்தாலும், மிகப் பெரிய யானை, திமிங்கலமாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில முக்கியத்துவம் உள்ளது.நம் மண்ணை வளமுள்ளதாக்குவதில் … Read more

பூமி அருகே வந்த விண்கல் மீது விண்கலத்தால் மோத வைத்த நாசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புளோரிடா: பூமி அருகே வந்த விண்கல்லை விண்கலத்தால் நாசா மோத வைத்து சோதனை செய்தது. விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. சோதனை: இந்த … Read more

ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. தற்போது வரை நீடிக்கும் இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகள்  ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன. அதே நேரத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியு உக்ரைனுக்கு உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் இழந்த சில பகுதிகளை மீட்டு வருகின்றது. இந்நிலையில், ரஷ்ய பிடியில் இருந்து தப்பிய உக்ரைன் ராணுவ வீரரின் … Read more

மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாக்.,கிற்கு 2,800 கோடி டாலர் இழப்பு| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையினால் காரணமாக 1,009 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கணிப்பில் 2,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் ஜூன் மாத மத்திக்கு பிறகு, பருவநிலை மாற்றம் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளம் காரணமாக 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்நாட்டில் வறுமை 5 … Read more

எட்வர்டு ஸ்னோடனுக்கு குடியுரிமை வழங்கிய புதின்

மாஸ்கோ: அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமையை, அந்நாட்டு அதிபர் புதின் வழங்கி இருக்கிறார். வேறு நாடுகளை பூர்விகமாகக் கொண்ட 75 பேருக்கு குடியுரிமை ஆணையை ரஷ்யா வழங்கியுள்ளது. இதில் ஸ்னோடனும் இடம்பெற்றிருக்கிறார். இதுகுறித்து இதுவரை ஸ்னோடன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ரகசயங்களை வெளியிட்டத்தைத் தொடர்ந்து, ஸ்னோடன் ரஷ்யாவுக்கு அகதியாக தஞ்சம் புகுந்தார். ஸ்னோடனை அமெரிக்கா அரசு தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால், ரஷ்யா இதற்கு … Read more

ரஷ்யாவால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் வீரர்: புகைப்படம் வெளியானதால் அதிர்ச்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் ராணுவ வீரரை சிறைப்பிடித்துள்ள ரஷ்யா, அவரை துன்புறுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய பிடியில் இருந்து தப்பிய அவ்வீரரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் வீரர்கள் … Read more

அணு ஆயுதம் பயன்டுத்தினால்…: ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : உக்ரைனுடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், ‘உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்க நேரிடும். ரஷ்யாவிற்கு சரியான பதிலடியை அமெரிக்கா, அதன் நேச நாடுகள் கொடுக்கும். உக்ரைன் தனது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும்’ … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே உடலுக்கு பிரமதர் மோடி மலரஞ்சலி

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் மறைவை அடுத்து, இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்று, அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினார். சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஷோ அபே: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்து, சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவரான அவரது திடீர் மறைவு, பெரும் அதிர்ச்சியை … Read more