வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்!

அன்லிமிடெட் ஓவர் டிராஃப்ட் என்ற சொற்றொடரை நீங்கள் திரைப்படங்களில் அல்லது வேறு வகையில் பலமுறை கேட்டிருக்க கூடும். ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜமாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவரது கணக்கில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் வர வைக்கப்பட்டு சில நொடிகளில் கோடீஸ்வரரானார். அதன்பிறகு அந்த பெண் சுமார் ஒரு வருடத்திற்கு கண் மூடித்தனமாக பணம் செலவழித்துள்ளார். இந்த ஆச்சரியமான தற்செயல் நிகழ்வினால் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண் கன் இமைக்கும் நேரத்தில் … Read more

என்ன கொடுமை சார் இது? $72 மில்லியன் அபராதமா? அதிருப்தி அடையும் கூகுள் மற்றும் மெட்டா

சியோல்: கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு தென் கொரியா அபராதம் விதித்துள்ளது. தனியுரிமையை இந்த இரு நிறுவனங்களும் மீறியதாக கூறி விதிக்கப்பட்ட அபராதம் அதிர்ச்சி அளிப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.  தாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுடன் சட்டப்பூர்வமாக இணக்கமான முறையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்த கூகுளும், மெட்டாவும், தங்களுக்கு $72 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது நியாயமான செயல் இல்லை என்று அதிருதியை வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் தனியுரிமை சட்டத்தை மீறியதற்காக ஆல்பாபெட்டின் கூகுள் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்களுக்கு தென் … Read more

ராணி எலிசபெத் இறுதி சடங்கு: பீஸ்ட்டில் செல்லும் ஜோ பைடன்; புடினுக்கு நோ என்ட்ரி!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே … Read more

Blue Origin நிறுவன ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தோல்வி.. எஞ்சின் எரிந்து சேதமடைந்ததால் விழுந்து நொறுங்கிய ராக்கெட்..!

அமெரிக்காவில், ஜெப் பெசோசின் Blue Origin நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது. மேற்கு டெக்சாஸில் உள்ள Blue Origin நிறுவன ஏவு தளத்திலிருந்து விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஏவப்பட்ட நியூ ஷெப்பர்ட் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில், அதன் பூஸ்டர் எஞ்சின்கள் எதிர்பாராத விதமாக எரிந்ததால் தடை செய்யப்பட்ட பகுதியில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் சோதனைகளுக்கும், விண்வெளிக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் ராக்கெட் அனுப்பப்பட்ட நிலையில், அதன் … Read more

எலான் மஸ்கிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த டிவிட்டர் பங்குதாரர்கள்; அடுத்தது என்ன!

சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை கைப்பற்றுவதற்காக உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் பேச்சு வார்த்தைஇந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி … Read more

6 மாதங்களுக்குப் பிறகு உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த கார்கிவ் நகரம்

கார்கிவ்: கடந்த 6 மாதங்களாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் நகரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் உக்ரைன் கொண்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கார்க்கிவ் நகரின் முக்கிய இடங்களில் உக்ரைனின் கொடி உயர பறந்து வருகிறது. உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் … Read more

ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த 2 நாட்களாகக் காத்திருக்கும் பெண்

பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பால்மோரல் மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, அவரது உடல் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.   முதலில் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்ட உடல், செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.  இதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் … Read more

எலிசபெத் ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனை வந்தது

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்,கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தாலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் தலைநகரான எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டது. முதலில் எலிசபெத்தின் உடல், ஹோலிரூட் … Read more

பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் பூரி ஜெகன்னாதருக்கு சொந்தமானது.. வைரத்தை இந்தியா கொண்டுவர ஒடிஷா அமைப்பு கோரிக்கை..!

மறைந்த பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமூக கலாச்சார கூட்டமைப்பு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் வென்றதன் நினைவாக, பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரத்தை நன்கொடையாக அளித்தார் என்றும் மகாராஜா ரஞ்சித்சிங்கின் மறைவுக்கு பிறகு அவரது மகன் துலிப்சிங்கிடம் இருந்து கோகினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து சென்றதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக தாங்கள் … Read more

எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்: பங்குதாரர்கள் பச்சைக்கொடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கிடம் விற்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பங்குதாரர்களின் முடிவை எலான் மஸ்க் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 … Read more