பார்த்த முதல் நாளே டும் டும் டும்… அடுத்த 18 நாளில் ரூ.30 லட்சம் காலி – கவலையில் கணவன்!

World Bizarre News: ஒரு பெண்ணை பார்த்தே அன்றே திருமணம் செய்துகொண்ட 40 வயது நபர், வெறும் 18 நாள்களில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணத்தை பறிகொடுத்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து – டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது. இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என … Read more

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 303 ஆக உயர்வு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. … Read more

62வது வயதில் காதலியை திருமணம் செய்த ஆஸி. பிரதமர்

கென்பரா, ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனிஸ் (வயது 62). இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு அந்தோணி அல்பனிஸ் – கார்மல் தம்பதி விவாகரத்து பெற்றனர். அதேவேளை, 2020ம் ஆண்டு பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஜோடி ஹைய்டன் (வயது 47) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது இந்நிலையில், காதலி ஜோடி ஹைய்டனை பிரதமர் … Read more

வெனிசுலா வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம்; விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி … Read more

டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிப்பு; 3 நாட்களாக இலங்கையில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்

கொழும்பு, ‘டிட்வா’ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயலின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், மணிக்கு 10 கி.மீ வேக்த்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிட்வா புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் … Read more

சவப்பெட்டியில் இருந்து வந்த சத்தம்! இறந்த பெண் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்..

Thai Woman Found Alive In Coffin : ஒரு பெண், இறந்ததாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டதை அடுத்து, கதவை தட்டி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

தாய்லாந்தில் கனமழை: 36 லட்சம் பேர் பாதிப்பு; 145 பேர் பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டில் பெய்து வரும் கனமழையால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களை சேர்ந்த 36 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 12 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அவை ஒன்றன் மீது ஒன்றாக கிடப்பதுடன், நீரோட்டத்தில் அடித்தும் செல்லப்பட்டு … Read more

ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு

கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் கைலீஸ் நகரம் நீண்ட, அழகிய கடற்கரையை கொண்டு உள்ளது. எனவே உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அங்கு சென்றிருந்தார். பின்னர் இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சுறா அவர்களை தாக்கியது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வாலிபர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர … Read more

80 பேரை காவு வாங்கிய டித்வா புயல்.. இலங்கையில் சோகம்.. தமிழ்நாடு திக் திக்

Cyclone Ditwah kills 80 In Sri Lanka: டித்வா புயலால் இதுவரை இலங்கையில் 80 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.