சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,166 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,094 பேருக்கு … Read more

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் கடந்த 12 மாதங்களில் ஹாங் காங்கை விட்டு ஒரு லட்சத்து 13,200 பேர் வெளியேற்றம்

கடந்த 12 மாதங்களில் ஹாங் காங்கை விட்டு ஒரு லட்சத்து 13,200 பேர் வெளியேறியதால் அதன் மக்கள் தொகை 1 புள்ளி 6 சதவீதம் குறைந்துள்ளது. ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா இயற்றியது. இது ஹாங்காங் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஹாங் காங் மக்கள் தங்கள் நாடுகளில் குடியேற பல தளர்வுகளை அறிவித்ததால் இதுவரை இல்லாதவகையில் கடந்த … Read more

பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளனர்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் அங்கு அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அதே போல் … Read more

தாய்லாந்து செல்கிறார் கோத்தபய| Dinamalar

சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து கிளம்பினார். அவர் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் விசாவை சிங்கப்பூர் அரசு நீடிக்காத நிலையில் அவர், தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.கோத்தபயவின் வருகை குறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கூறுகையில், தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருக்கும் போது அவர் எந்தவிதமான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனக்கூறினார். சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் … Read more

கடும் காய்ச்சலால் கிம் ஜோங் உன் அவதி : கோவிட் பாதிப்பா ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியோங்யாங்: கோவிட்டிற்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டுவிட்டோம் என வடகொரியா அறிவித்துள்ளது. அதே நேரம் அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் கடுமையாக காய்ச்சலால் அவதியுற்றுவருவதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார். முதல் உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றினை எதிர்கொள்வதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக கையாண்ட நிலையில், வடகொரியா தனது தன் பாணியில் … Read more

கோத்தபய ராஜ்பக்சேவுக்கு தற்காலிகமாக அடைக்கலம் தந்தது தாய்லாந்து அரசு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அவர் கடந்த மாதம் 13-ந் தேதி விமானம் மூலம் மாலத்தீவு சென்றார். பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவரது சிங்கப்பூர் விசா இன்றுடன் நிறைவடைவதால் தாய்லாந்து அரசிடம் அடைக்கலம் கோரினார். அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ள தாய்லாந்து அரசு, அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் … Read more

நேபாளத்தில் ஒரே நேரத்தில் பரவும் கொரோனா & பன்றி காய்ச்சால்..! –மக்கள் பீதி..!

உலகம்முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில்நேபாளத்தில் கொரோனாவும் பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பரவி மக்களை பீதி அடையச்செய்துள்ளது. நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில்கொரோனா,பன்றிகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாககொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளானடெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், எச்என்1 போன்றவைமக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்றன. நேபாளத்தில்கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 1090 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள … Read more

முடிவுக்கு வந்தது போர் பதற்றம் | தைவான் எல்லையில் ராணுவ பயிற்சி நிறைவு பெற்றதாக சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது. முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் தைவான் ராணுவமும் பதிலடி அளித்திருந்தது. இந்த நிலையில், … Read more

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.!

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக ஸ்பெயின் வளர்ந்து வருகிறது. 2 புள்ளி 5 பில்லியன் யூரோ செலவில் 56 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஸ்பெயினுடன் கையெழுத்திட்டது. இந்தியா அதன் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ஸ்பெயினுடன் நெருக்கமாக செயல்படுகிறது. அதற்கு ஏற்ப ஸ்பெயினிடம் இருந்து ஐந்து கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தியா பரிசீலித்து வருகிறது.ஸ்பெயின் உட்பட பல நாடுகள் இதற்கான டெண்டரில் பங்கேற்கின்றன. Source link

குறைந்தபட்ச ஊதியமே ரூ.64 லட்சம் : ஊழியர்கள் கொண்டாடும் நிறுவனம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர். Dan Price தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.  இந்நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் … Read more