ரிபுடாமன் சிங் கொலையில் தொடர்புடைய இருவர் கைது| Dinamalar

ஒட்டாவா:கனடாவில், விமான குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான ரிபுடாமன் சிங் மாலிக்கை சுட்டுக் கொன்ற இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 1985ல் கனடாவில் இருந்து மும்பை சென்ற, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் குண்டு வெடித்தது. இதில், கனடாவைச் சேர்ந்த 268 பேர், 24 இந்தியர்கள் உட்பட, 329 பேர் பலியாகினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிபுடாமன் சிங் மாலிக், அஜய் சிங் பக்ரி ஆகியோரின் குற்றம் நிரூபணமாகாததால், 2005ல் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் இரு … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் வட கொரிய அதிபர் மீண்டும் மிரட்டல்| Dinamalar

சியோல்:’போர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அமெரிக்கா, தென் கொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்’ என, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல்கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன், தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். சர்வதேச நாடுகள் எதிர்ப்பை மீறி, அணு ஆயுதச் சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் தன் வழக்கமான மிரட்டலில் … Read more

எல்லை பிரச்னையில்4 முக்கிய முடிவுகள்| Dinamalar

பீஜிங்:கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடந்துள்ளது. சமீபத்தில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான, 16வது சுற்று பேச்சு நடந்தது. இதில் அடுத்தகட்ட பேச்சின் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ குயான் கூறியுள்ளதாவது: நான்கு முக்கிய விஷயங்களில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. … Read more

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… நானும் காட்டை ஆளுறேன்…! இன்று உலக புலிகள் தினம்!| Dinamalar

காட்டுக்கு ராஜா சிங்கம் என்றாலும், ‘எனக்கு ராஜாவாக வாழுறேன்; நானும் காட்டை ஆளுறேன்’ என சொல்லாமல் சொல்வது போல தான் புலிகளின் உறுமலும், முறைப்பும் இருக்கும்.நமக்கே தெரியாமல் இயற்கைக்கு பல நன்மைகளை செய்யும் தேசிய விலங்கான புலிகள் குறித்து, புலிகள் தினமான இன்று அறிந்து கொள்வது நம் கடமை. மதுரை இயற்கை ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 200 முதல் 300 கோடி ரூபாய் செலவில், 52 புலிகள் சரணாலயங்கள் பராமரிக்கப்படுகின்றன.தமிழகத்தில் ஐந்து … Read more

பாக்.,கில் ஹிந்து பெண்டி.எஸ்.பி.,யாக தேர்வு| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்த பெண் போலீஸ் டி.எஸ்.பி.,யாக தேர்வாகி உள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில உள்ள ஜகோபாபாத் என்ற இடத்தை சேர்ந்தவர் மணிஷா ரூபேட்டா 26. சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இவரையும் இவரது சகோதர சகோதரிகளையும் கராச்சி அழைத்து வந்து அவரது தாயார் வளர்த்து ஆளாக்கினார்.மணிஷாவின் மூன்று சகோதரிகள் டாக்டர்களாக உள்ளனர். ஒரு சகோதரர் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு எழுதிய மணிஷா ஒரு மதிப்பெண்ணில் அதை தவறவிட்டார். இதையடுத்து அரசுப் பணியாளர் … Read more

சர்வதேச விண்வெளி நிலையம்ரஷ்யா வெளியேற முடிவு| Dinamalar

வாஷிங்டன்:சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துஉள்ளது.கடந்த 1998ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 11 நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தை துவக்கின.பூமியில் இருந்து, 400 கி.மீ., துாரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், உறுப்பு நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்காஸ்மோசின் டைரக்டர் ஜெனரல் யூரி போரிசோவ், 2024க்குப் பின் சர்வதேச விண்வெளி திட்டத்தில் இருந்து ரஷ்யா … Read more

கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல்| Dinamalar

சியோல் :’போர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அமெரிக்கா, தென் கொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்’ என, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். கிழக்காசிய நாடான வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன், தொடர்ந்து அமெரிக்கா, தென் கொரியா நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். சர்வதேச நாடுகள் எதிர்ப்பை மீறி அணு ஆயுதச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் தன் வழக்கமான மிரட்டலில் அவர் ஈடுபட்டு வந்தார். … Read more

ஈரானில் நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு| Dinamalar

டெஹ்ரான்:ஈரானில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், நான்கு பேர் உயிரிழந்தனர்.மேற்கு ஆசிய நாடான ஈரானின் தலைநகர் டெஹ்ரானில், இமாம்சாதே தாவூத் மத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது; வீடுகள், மரங்கள் பெருமளவு சேதமடைந்தன.இந்நிலையில் கன மழை காரணமாக, இங்குள்ள அல்போர்ஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒன்பது … Read more

துப்பு கொடுத்தால் ரூ.57 கோடி சன்மானமாம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து ரூ.247 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடியதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட நகைகள் குறித்த துப்பு கொடுப்போருக்கு ரூ.57 கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன் என்பவரது மகள் தமரா. இவர் கடந்த 2019ல் தனது கணவர், மகளுடன் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு … Read more

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார்; கிம் ஜாங் அன் பேச்சு

பியாங்யாங், ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இந்நிலையில், அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், … Read more