கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு … Read more

அமெரிக்காவில் அதிர்ச்சி: 2 மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்

நியூயார்க், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் ஹில்ஸ்பாரோ நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பிரியதர்ஷினி நடராஜன் (வயது 35). இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வேலை முடிந்து நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய கணவர் நடராஜனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய 2 மகன்களும் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் வந்து, விசாரித்து இருக்கின்றனர். மகன்களை, … Read more

போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு … Read more

ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை … Read more

மெலிஸ்சா புயலால் பாதித்த கியூபாவுக்கு நிவாரண உதவி: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி., கரீபியன் நாடுகளான ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கிது. இதில், கியூபாவும் சிக்கியது. இதனால், 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூறாவளி புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டன. வெள்ளம், நிலச்சரிவால் அந்நாடுகளின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா தரப்பில் இருந்து கியூபாவுக்கு … Read more

75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் … Read more

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கிரீன்லாந்து உலகின் எட்டாவது பெரிய அரிதான கனிமங்களைக் கொண்டுள்ளது; அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு, தங்கம், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்றவை அங்கு உள்ளன. சூப்பர் கண்டக்டர் சிப்புகள், மின்சார வாகனங்கள், பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்பங்கள் தயாரிப்பதற்கு இந்த அரிதான கனிமங்கள் மிக அவசியமானவை. வகைப்படுத்தப்பட்ட 34 அரிதான கனிமங்களில், சுமார் 23க்கும் மேற்பட்ட அரிய கனிம வளங்கள் கிரீன்லாந்தில் உள்ளன. தற்போது, இந்தத் தனிமங்களின் … Read more

எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானியரை மணந்த சீக்கிய பெண் கைது

இஸ்லாமாபாத், குருநானக்கின் பிறந்தநாள் விழா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக 2 ஆயிரம் சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். அதில் 48 வயதான சரப்ஜீத் கவுர் என்ற பெண்ணும் சென்றிருந்தார். திருவிழா முடிந்து சீக்கியர்கள் அனைவரும் இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜீத் கவுர் மட்டும் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தை சேர்ந்த நசீர் ஹுசைன் என்ற நபரை சரப்ஜீத் … Read more

இலங்கை எம்.பி. ஜீவன் தொண்டமான் பொங்கல் வாழ்த்து

கொழும்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் எம்.பி. வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில், தைப்பொங்கல் என்பது தமிழர்களால் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் உன்னதமான அறுவடை திருவிழாவாகும். இது “உழவர் திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கையை போற்றும் மனப்பான்மையின் அடையாளமாக விளங்குகிறது. உழவர்களை கவுரவித்து, இயற்கையை வணங்கும் இந்த நன்னாளில் நாம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய … Read more