ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான … Read more

இத்தாலி: தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டல் – ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ரூ. 74 கோடி அனுப்பிய கும்பல்

ரோம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. இதனிடையே, இந்தபோரின் போது காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக … Read more

இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்; துப்பாக்கி சூடு நடத்திய பெண்

மாஸ்கோ, ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளார். ஆனாலும்,அந்த நபர் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் பக்கத்து … Read more

ஸ்வீடனில் பனிப்புயல்: 3 பேர் பலி

ஸ்டாக்ஹோம், ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. பல நாடுகளில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிபாக, ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் அதிகமாக இருந்தது. பனிப்புயலால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 1 More update தினத்தந்தி Related Tags … Read more

வங்காளதேச முன்னாள் பிரதமரின் உடல்நிலை தொடர்ந்து மோசம்; டாக்டர் தகவல்

டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவர் 1991ம் ஆண்டு முதல் 1996 வரையும், பின்னர் 2001 முதல் 2006 வரையும் வங்காளதேசத்தின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கலிதா ஜியா கடந்த மாதம் 23ம் தேதி முதல் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11ம் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலியா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து … Read more

இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைது

கொழும்பு, இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது. பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது … Read more

இங்கிலாந்து: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லேண்ட்ஸ் மாகாணம் வார்விக்‌ஷெரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மே மாதம் அப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த அந்த சிறுமியை 2 சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் (வயது 17), நைசல் (வயது 17) ஆகிய 2 சிறுவர்களை … Read more

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

தைபே, தைவான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை … Read more

பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லமபாத், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த இரு தினங்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளும், கோலுவில் 5 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் இருநாள்களில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஜப்பான்: 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து – 2 பேர் பலி

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் கன்மா மாகாணத்தில் கன், எட்சு நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மினஹமி பகுதியில் நேற்று இரவு தொடர் விபத்து ஏற்பட்டது. கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழ்நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் 2 லாரிகள் ஒன்றன்மீது ஒன்று மோதின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவு, இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. மொத்தம் 67 … Read more