இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதி அருகே பசிர் லங்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், 97 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏற்கனவே 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், … Read more

அமெரிக்காவை முடக்கிய பனிப்புயல்; 13 ஆயிரம் விமானங்கள் ரத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூ மெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும் மத்திய அட் லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்க தொடங்கி உள்ளது. அங்கு பெரிய அளவில் பனிப்புயல் … Read more

ஐ.நா. சபையில் கண்டன தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி

ஜெனிவா, ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு அமர்வில் தீர்மானம் வரப்பட்டது. கொண்டு இத்தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்பட 25 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனே சியா, ஈராக் உள்பட 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெ டுப்பில் பங்கேற்காமல் விலகின. ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் … Read more

வங்காளதேசம்: இந்து வாலிபர் உயிருடன் எரிந்து பலியான கொடூரம்; கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

டாக்கா, வங்காளதேசத்தின் நர்சிங்டி நகரில் சஞ்சால் பவுமிக் (வயது 25) என்ற இந்து வாலிபர் ஒருவர் வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் இரவில் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியதில் சிக்கி உயிருடன் எரிந்து பலியானார். இதுபற்றி நர்சிங்டி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அப்துல்லா அல் பரூக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடையில் தீப்பிடித்து எரிந்தபோது நபர் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி, சுற்றி வந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைத்துள்ளன. மின் கசிவா? அல்லது அந்நியர்கள் யாரேனும் … Read more

மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்

நேபிடா, மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை … Read more

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர மறுக்கும் ரஷியா

அபுதாபி, உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் … Read more

கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் ; டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் மாற்று வழியை யோசித்து வருகின்றன. குறிப்பாக, வெவ்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கனடா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் … Read more

அமெரிக்காவில் பனிப்புயல்: 13 ஆயிரம் விமானங்கள் ரத்து

வாஷிங்டன், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும், சில மாகாணங்களில் பனிப்புயலும் வீசி வருகிறது. இந்த வார இறுதியில் பனிப்புயல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பனிப்புயல் மேலும் தீவிரமடையும் என்பதால் விமான … Read more

அமெரிக்கா: விமான நிலையத்திற்குள் புகுந்த சொகுசு கார் – 6 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இன்று பயணிகள் விமானத்திற்கு காத்திருந்தனர். அப்போது விமான நிலையத்திற்கு வேகமாக வந்த சொகுசு கார் திடீரென விமான நிலைய டிக்கெட் கவுண்ட்டருக்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் விமான நிலையத்தில் இருந்த 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது … Read more

பென்குயின் உடன் கிரீன்லாந்து நோக்கி நடந்து சென்ற டிரம்ப்; வைரலான புகைப்படம்

வாஷிங்டன் டி.சி., டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்ட கிரீன்லாந்து எங்களுக்கு தேவை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார். ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. … Read more