இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ, உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சீனா, உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷியாவில் புத்தாண்டுடன் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை … Read more

துருக்கியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி

அங்காரா, துருக்கியின் மேற்கு யலோவா மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. இதற்காக வணிக வளாகம், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே அங்குள்ள எல்மாலி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். … Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஆயுதக்குழு செய்தித்தொடர்பாளர் பலி – ஒப்புக்கொண்ட ஹமாஸ்

காசா முனை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்தித்தொடர்பாளராக அபு ஒபிடா என்பவர் … Read more

ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி?

மாஸ்கோ, ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏறபடவில்லை என்றும் இந்த சம்பவத்தால் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வீடு மீது டிரோன் தாக்குதல் … Read more

இந்தோனேசியா: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 16 பேர் பலி

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுலாவாசி மாகாணம் மனடொ பகுதியில் முதியோர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ … Read more

அசாமில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் மோரிகான் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.49 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.34 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி நிலநடுக்கங்கள் … Read more

ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான … Read more

இத்தாலி: தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டல் – ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ரூ. 74 கோடி அனுப்பிய கும்பல்

ரோம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. இதனிடையே, இந்தபோரின் போது காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக … Read more

இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்; துப்பாக்கி சூடு நடத்திய பெண்

மாஸ்கோ, ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளார். ஆனாலும்,அந்த நபர் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் பக்கத்து … Read more

ஸ்வீடனில் பனிப்புயல்: 3 பேர் பலி

ஸ்டாக்ஹோம், ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. பல நாடுகளில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிபாக, ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் அதிகமாக இருந்தது. பனிப்புயலால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 1 More update தினத்தந்தி Related Tags … Read more