ஆங்கில சொற்களுக்கு தடை விதித்த வடகொரிய அரசு! இனிமே இப்படித்தான்..

North Korea Bans Hamburger Ice Cream : வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், சில ஆங்கில சொற்களுக்கு தடை விதித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. விசாரணை ஆணையம் திட்டவட்டம்

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் … Read more

பாகிஸ்தானில் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப்படையினர் அதிரடி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை அழிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மற்றும் பனு மாவட்டங்களில் தெஹ்ரி இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரு மாவட்டங்களில் பாதுகாப்புப்படையினர் … Read more

World Ozone Day: 2050-க்குள் ஓசோன் அடுக்கு சரியாகுமா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

World Ozone Day 2025: பூமியின் குடை என்று அழைக்கப்படும் ஓசோன் அடுக்கு மீண்டும் வலிமை பெறும் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்… ஆனால், இது உண்மையா?

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் கொலை; குடியேற்றக் கொள்கையை சாடிய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாகமல்லையா(வயது 50). இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரான இவருக்கு மனைவி மற்றும் 18 வயது மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10-ந்தேதி யோர்டானிஸ் கோபோஸ் மார்டினெஸ்(வயது 37) என்ற நபரால் நாகமல்லையா தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் கண்ணெதிரிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்திற்கு அமெரிக்க வாழ் … Read more

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

பியாங்காங், வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் … Read more

1 பில்லியன் டாலர் மதிப்பில் டெஸ்லா பங்குகள் வாங்கிய மஸ்க்…பங்கு சந்தையில் என்ன நடந்தது தெரியுமா?

Elon Musk Buys 1 Billion Stock: பங்கு சந்தையில் திடீரென அதிர்ச்சி மாற்றம்.. காரணம் என்ன தெரியுமா? எலான் மஸ்க் எடுத்த அந்த பெரிய முடிவு என்ன?

ரஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் பலர் இந்த போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது. போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகி வருகிறார்கள். இந்தநிலையில் ரஷியாவின் லெனின்கிராட் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. ஆண்டுக்கு 1.7 கோடி டன் அளவில் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடும் இந்த ஆலையை குறிவைத்து டிரோன்களை ஏவியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் இந்த … Read more

லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தை மீண்டும் அமைக்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு நடத்தியது.இதற்கு பதிலடியாக, “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் இந்திய போர் விமானம் ஊடுருவி, முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்பட 3 முக்கிய கட்டமைப்புகள் … Read more

பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. இதன் மூலம் கிடைக்​கும் பணத்​தில் ரஷ்யா, உக்​ரைன் … Read more