ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: யு-டர்ன் அடித்த ட்ரம்ப்

வாஷிங்டன்: “ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், … Read more

உக்ரைனுக்கு ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்கும் நெதர்லாந்து

தி ஹேக், உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன. இதனால் உக்ரைன் இன்னும் இந்த போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்தவகையில் உக்ரைனுக்கு சுமார் ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதில் 100 டிரோன் கண்டறியும் ரேடார்கள், வான்பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை அடங்கும். முன்னதாக 6 லட்சம் டிரோன்களை … Read more

“ஈரான் அணுசக்தி திட்டம் நாசமானது” – ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ குறித்து அமெரிக்க அமைச்சர் பெருமிதம்

வாஷிங்டன்: ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார். ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஷெக்சேத் பென்டகனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் அணு சக்தி திட்டம் நாசமானது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என பெயரிடப்பட்டது. இது … Read more

ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன: ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவ் தகவல்

ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். இதுகுறி்தது அவர் மேலும் கூறியதாவது: ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார். அமைதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்தவொரு … Read more

ஈரான்- இஸ்ரேல் எக்காரணத்தை கொண்டும் இனி தாக்குதல் நடத்தக் கூடாது: ட்ரம்ப் எச்சரிக்கையும் பின்னணியும்! 

டெஹ்ரான்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், … Read more

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழப்பு

காசா: இஸ்​ரேல் மீது கடந்த 2023 அக்​டோபரில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலை தொடர்ந்​து, காசா​வில் அந்த அமைப்​பினர் மீது இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கியது. தற்​போது ஈரானுடன் இஸ்​ரேல் போரிட்டு வரும் நிலை​யிலும் காசா​வில் தாக்​குதலை தொடர்​கிறது. இந்​நிலை​யில் மத்​திய காசா​வின் சலா அல்​-​தின் சாலை​யில் உணவுப் பொருளுக்​காக காத்​திருந்த நூற்​றுக்​கணக்​கான பாலஸ்​தீனர்​கள் மீது இஸ்​ரேலிப் படைகளும் டிரோன்​களும் நேற்று காலை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து நுசேரத் அகதி​கள் முகாமில் அமைந்​துள்ள அவ்தா மருத்​து​வ​மனை … Read more

ஈரான் வைத்திருந்த 400 கிலோ யுரேனியம் எங்கே? – சோதனை அவசியம் என்கிறது அணுசக்தி முகமை

ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கூறியுள்ளது. மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம் என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தீடீரென அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்நத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியது. ‘‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கூற முடியாது’’ என ஈரான் வெளியுறவுத்துறை இணை … Read more

‘மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள்; தண்டனை தொடரும்’ – இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான … Read more

‘ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த … Read more

‘எங்களைத் தவிர எந்த நாடும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்க துணிந்தது இல்லை’ – ஈரான் தூதர்

புதுடெல்லி: அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, “வரலாற்றில் எந்த நாடும் அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்ததில்லை. ஈரான் அதைச் செய்துள்ளது. இதை ஒரு குறியீட்டு பதிலடியாக நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள். ஆனால், அமெரிக்கா இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையை மீண்டும் செய்தால், அதற்கும் இதேபோன்ற பதில்தான் கிடைக்கும்” … Read more