காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை … Read more

அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது. அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்பு செல்ல 15 மணி நேரமாகும். பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் என்று டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே குறிப்பிட்டுள்ளார். ஆனால், … Read more

சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் திருப்பதி மோகன்தாஸ் (வயது 41) கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இந்தியரான அவர் கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். பின்னர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அந்த பெண் கூச்சலிட்டதால் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் நடந்த 2 நாள் கழித்து மோகன்தாஸ் மீண்டும் அங்கு சென்றுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் … Read more

இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பி.க்கள் கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களுக்​கிடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், தேபோரா ராஸ் மற்​றும் ரோ கண்ணா தலை​மையி​லான அமெரிக்க எம்​.பி.க்​கள் 21 பேர் அதிபர் ட்ரம்​புக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: உலகிலேயே மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தியா அமெரிக்​கா​வின் நெருங்​கிய கூட்​டாளி​யாக உள்​ளது. அமெரிக்க நிறு​வனங்​கள் செமிகண்​டக்​டர், சுகா​தா​ரம் மற்​றும் எரிசக்தி … Read more

அல்பேனியாவில் கோர்ட்டில் நீதிபதி சுட்டுக்கொலை

டிரானே, அல்பேனியா தலைநகர் டிரானேவில் குற்றவியல் மேல்முறையீட்டு கோர்ட்டு அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதியை நோக்கி சரமாரியாக சுட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகளால் துளைக்கப்பட்டு படுகாயமடைந்த நீதிபதி, சம்பவ இடத்திலேயே … Read more

ட்ரம்ப், நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: காசா அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாகவிருக்கிறது. இதுதொடர்பாக ட்ரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் … Read more

ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை-க்கு இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேரிழவு தரும் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கவரக்கூடிய படைப்புக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது. ருமேனிய எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் பிறந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை, சாட்டான்டாங்கோ என்ற தனது முதல் நாவலை 1985-ல் வெளியிட்டார். அதுமுதல் ஹங்கேரியில் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக இவர் … Read more

ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! நிறுவனத்தின் ஒற்றை தவறால்..இப்போ பல கோடிக்கு அதிபதி

Chile Man Got Salary 330 Times More : ஒரு ஊழியருக்கு, அவரது நிறுவனம் சம்பளத்தை தவறுதலாக அதிகமாக க்ரெடிட் செய்தது பெரிய ஜாக்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. இது குறித்த முழு தகவல், இதோ.

அந்தரங்க உறுப்பை காண்பித்து அத்துமீறிய ஆசிரியை…? அதிர்ந்த மாணவன் – பகீர் சம்பவம்

World Bizarre News: குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில், மாணவனிடம் வீடியோ காலில் தனது அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ்: அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே காசா அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, … Read more