‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்’ நெதன்யாகு ஆவேச பேட்டி

டெல் அவிவ், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்பினார். டெல் அவிவ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த நெதன்யாகு, ‘பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்’ என ஆவேசமாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்ச திட்டத்திற்கு … Read more

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசில் செலவீனங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்த நிலையில், நிதி மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் … Read more

ஒட்டோமான் ஆட்சியில் இருந்து எங்களை விடுவித்தது இந்திய வீரர்கள்தான்: இஸ்ரேலின் ஹைபா நகர மேயர் தகவல்

ஹைபா: இஸ்​ரேலின் ஹைபா நகரில் இந்​திய வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறிய​தாவது: வரலாற்று சங்​கத்தை சேர்ந்த ஒரு​வர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழு​மை​யான ஆராய்ச்சி செய்த புத்​தகம் ஒன்றை வழங்​கி​னார். அதில், இந்த நகரத்தை ஒட்​டோ​மான்​களிட​மிருந்து விடு​வித்​தது ஆங்​கிலேயர்​கள் அல்ல, இந்​தி​யர்​கள் தான் என்​பதை ஆதா​ரங்​களு​டன் விளக்​கி​யிருந்​தார். ஆனால், அது​வரை இந்த நகரம் பிரிட்​டிஷ் வீரர்​களால்​தான் விடுவிக்​கப்​பட்​டது என்​ப​தாக எங்​களுக்கு தொடர்ச்​சி​யாக … Read more

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

குவெட்டா: ​பாகிஸ்​தானில் கார் குண்டு வெடித்​துச் சிதறிய​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 32 பேர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்தானின் தென்​மேற்கு பகு​தி​யில் பலுசிஸ்​தான் மாகாணம் அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் மொத்த பரப்​பள​வில் 44 சதவீதத்தை இந்த மாகாணம் கொண்​டுள்​ளது. கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் தனி நாடு​களாக உதய​மான​போது பலுசிஸ்​தானும் தனி நாடாக உரு​வெடுத்​தது. ஆனால் கடந்த 1948-ல் பாகிஸ்​தான் ராணுவம், பலுசிஸ்​தானை ஆக்​கிரமித்​தது. அப்​போது​முதல் பாகிஸ்​தான் அரசுக்​கும் கிளர்ச்சி குழுக்​களுக்​கும் இடையே உள்​நாட்​டுப் போர் … Read more

இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி; 99 பேர் காயம்

ஜகர்த்தா, இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா நகரில் அல் கோஜினி என்ற பெயரிலான பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று (செவ்வாய் கிழமை) மதியம் கட்டுமான பணி நடந்து வந்த கட்டிடம் ஒன்றின் கீழ் தளத்தில் இருந்த மசூதியில் மாணவர்கள் இறை வணக்கத்தில் ஈடுபட்டனர். அப்போது, கட்டிடத்தின் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 13 வயது சிறுவன் உள்பட 3 மாணவர்கள் பலியாகி … Read more

கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நெதன்யாகு

காசா, கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 9-ந்தேதி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு கத்தார் மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கேட்டு உள்ளார். அமெரிக்க ஜனாதிபதியை டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் நெதன்யாகு சந்தித்து பேசியபோது, அங்கிருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது … Read more

காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான டிரம்பின் திட்டத்துக்கு சீனா வரவேற்பு

பெய்ஜிங், காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் பேச்சுவார்த்தையில் … Read more

இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு – போலீசார் விசாரணை

லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் காந்தி, மோடி இந்திய பயங்கரவாதிகள் என எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, லண்டனில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட … Read more

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

இஸ்லமபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை அவாமி … Read more

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3-4 நாட்கள் அவகாசம் வழங்கிய டிரம்ப்!

போர் நிறுத்தம் தொடர்பான 20 முக்கிய அம்சங்களுக்கான பரிந்துரைகளுக்கு பதில் அளிக்கவ் ஹமாஸ்வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசம் அளித்துள்ளார்.