வங்கதேச வன்முறை: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
Sheikh Hasina Death Sentence: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Sheikh Hasina Death Sentence: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டாக்கா: வன்முறை வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொல்ல உத்தரவிட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் … Read more
Saudi Arabia Bus Accident: சவுதி அரேபியாவில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அதுகுறித்து தான் கவலை கொள்ளவில்லை என்றும் ஹசீனா கூறியுள்ளார். இந்த தீர்ப்புக்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், “அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக் கட்சி. அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி … Read more
Man Mums Hugs In China: சீனாவைச் சேர்ந்த பெண்கள், ஆறுதலுக்காக ஆண்களை கட்டிப்பிடிக்கும் சேவை ட்ரெண்டாகி வருகிறது. இதற்காக அவர்கள் ரூ.600 வழங்கி வருகின்றன.
தோஹா, இந்திய வெளியவுத்துறை ஜெய்சங்கர் கத்தார் சென்றுள்ளார். அவர் இன்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜாசிம் அல்தானியை சந்தித்தார். தோஹாவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 1 More update தினத்தந்தி Related Tags : India Qatar Jaishankar இந்தியா கத்தார் ஜெய்சங்கர்
வாஷிங்டன், அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள டோனோபா சோதனைத் தளத்தில், ஸ்டெல்த் F-35A ஜெட் விமானம் மூலம், B61-12 அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் சோதனை அமெரிக்க ராணுவம் சார்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல், அமெரிக்க எரிசக்தித் துறையின் சாண்டியா தேசிய ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அமெரிக்க ராணுவத்தின் இந்த சோதனை கடந்த ஆகஸ்ட் 19 முதல் 21-ந்தேதி வரை நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது ஆயுதம், விமானம், மற்றும் விமானிகளின் … Read more
ரோம், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ‘நற்செய்தியின் மையக்கருவாக வறுமை உள்ளது’ என்பதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதியை உலக ஏழைகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு போப் பிரான்சிஸ் அறிவித்தார். அதன்படி இன்று ‘உலக ஏழைகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் உலக ஏழைகள் தினத்திற்கான கருப்பொருள், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் வரும் “ஆண்டவரே, நீரே எனது நம்பிக்கை”(சங்கீதம் 71:5) என்ற வசனமாகும். இந்த நிலையில் … Read more
பீஜிங், ஜப்பானில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (வயது 64) தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், பிரதமராக பதவியேற்ற பிறகு தைவான் விவகாரம் குறித்து சனே தகைச்சி தெரிவித்த சில கருத்துகள் சீனா-ஜப்பான் இடையிலான உறவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7-ந்தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய சனே தகைச்சி, “தைவான் மீதான சீனா ஆயுதமேந்திய … Read more
கீவ், உக்ரைன் நாட்டுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன. ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் … Read more