அதிவேக ரயில்கள் மோதி விபத்து… 21 பேர் பலி – ஸ்பெயினில் நடந்தது என்ன?

Spain Train Accident: ஸ்பெயில் நாட்டில் அதிவேக ரயில் தடம்புரண்டு, மற்றொரு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்: ஐரோப்பிய ஆணைய தலைவர் பேச்சு

பிரஸ்ஸல்ஸ், உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகள், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவின் அதிபர் கைது, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்கள் கொள்முதல், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டி வரும் அமெரிக்கா, அடுத்து கிரீன்லாந்து மீதும் குறி வைத்துள்ளது. கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் … Read more

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி: பிப்.1-ம் தேதி முதல் அமல் – டிரம்ப் அறிவிப்பு

நூக் [கிரீன்லாந்து], அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப். அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டு வருகிறார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார். சமீபத்தில், உலக அளவில் பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார். உலக நாடுகளை அதிர செய்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை … Read more

இலங்கையில் 3-வது பெய்லி பாலம் கட்டுமான பணியை நிறைவு செய்த இந்திய ராணுவம்

கொழும்பு, இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தின் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுதவிர டிட்வா புயலும், இலங்கையை கடுமையாக தாக்கியது. இதனால் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்தது. புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.05 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.74 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 65.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. EQ of M: 4.1, … Read more

பாகிஸ்தான்: வணிக வளாகத்தில் தீ விபத்து 3 பேர் பலி; பலர் காயம்

கராச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி தெற்கு டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா கூறும்போது, தீ விபத்தில் … Read more

வெனிசுலாவிடம் இருந்து ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கிடைக்கும் – டிரம்ப்

வாஷிங்டன் டி.சி., வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது, நாடு கடத்தல் நடவடிக்கைக்கு பின்னர் அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிற வளங்கள் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளும் வேலைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி எண்ணெய் பீப்பாய்கள் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நமக்கு வழங்க வெனிசுலா முன்வந்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.47,186 ஆகும் என்றார். தொடர்ந்து அவர், வெனிசுலாவின் … Read more

ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்; 100 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை … Read more

ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி … Read more

தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசாரம் தைப் பொங்கல் விழா: அனுர குமார திசநாயகே

யாழ்ப்பாணம், பொங்கல் பண்டிகையையொட்டி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தமிழர்களின் கலாசார தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்கு தமிழர்கள் மத்தியில் அவர் பேசுகையில், தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாசார தினமான தைப் பொங்கல் விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம். இங்கே இருக்கும் பலரும் கடந்த … Read more