அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு : செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அங்கு அண்மையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே சமயம் துப்பாக்கி வைத்திருப்பது தனி நபரின் உரிமை என்ற கருத்தும் ஒருபுறம் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து … Read more

அமெரிக்காவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், ஓடும் ரயிலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முனி ஃபாரஸ்ட் ஹில் ஸ்டேஷனில் இருந்து காஸ்ட்ரோ ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற ரயிலில் இந்நிகழ்வு நடந்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் ஒருவர் மற்றொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சான் பிரான்சிஸ்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன … Read more

இந்திய, ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து நெருக்கம் பெறவேண்டும் – ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்!

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மேலும் வலுவடைந்து நெருக்கம் பெற வேண்டும் என்று இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர் இதனை தெரிவித்துள்ளார். Source link

உலகின் மிக அழகான பெண் என்கிற பெருமையை பெற்றார் ஆம்பர் ஹெர்ட்!

லண்டனில் உள்ள மேம்பட்ட முக ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் டி சில்வா, அறிவியலின் படி உலகின் மிக அழகான பெண் ஆம்பர் ஹெர்ட் என்று அறிவித்தார்.  டாக்டர் ஜூலியன் டி சில்வா, 2016 ஆம் ஆண்டில், உலகின் மிக அழகான முகம் யாருடையது என்பதைக் கண்டறிய ‘PHI’ என்ற பழங்கால முக மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்தினார்.  மேலும் அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு, நடிகர் ஆம்பர் ஹியர்ட் ‘உலகத்திலேயே மிக … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், மிக மோசமான கால கட்டங்களில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருப்பதாகவும், தேவையான அனைத்து நிவாரணப் பொருள்களையும் விரைந்து வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். … Read more

இந்தியா, சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு – அதிபர் புதின்

இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக ரஷ்ய  அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மேற்கத்திய நாடுகள் மறுத்து விட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியும் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவின் நட்பு நாடாக நீடித்து வருகிறது.சீனாவின் தலைமையில் நடைபெறும் 14வது பிரிக்ஸ் வர்த்தக மாநாட்டை ஒட்டி காணொலியில் பேசிய புதின், பிரிக்ஸ் குழும நாடுகளிடையே பரஸ்பர வர்த்தகம் … Read more

பணப் பற்றாக்குறை: சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கியது பாகிஸ்தான்

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது. … Read more

கார்கிவில் ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல் – 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 16 பேர் … Read more

இலங்கை பொருளாதாரம் சீர்குலைவு | கச்சா எண்ணெய் வாங்க நிதி இல்லை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பையும் விக்ரமசிங்கே வகித்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு மிகப்பெரும் கடன் சுழலில் சிக்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா பாதிப்பு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக … Read more

வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை கண்டெடுப்பு.!

தென் அமெரிக்க நாடான பெருவில் வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். கல்லறையில் இருந்த உடலைச் சுற்று சில்வர் மற்றும் தாமிரம் உலோகம் கொண்டு போர்த்தப்பட்டு இருந்ததாகவும், இன்கா பேரரசை சேர்ந்த செல்வ செழிப்புடையை குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டு பராமரிப்பு பணியின் போது கல்லறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் இன்கா பேரரசின் எச்சங்கள் உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.    … Read more