சீனாவில் 10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: 10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது லெஷன் என்ற நகரம். இங்கு உணவகம் ஒன்றின் கட்டுமானத்தின்போது பல கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசர்கள் கால் தடம் கண்டறியப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “ சிச்சுவான் மாகாணத்தின் லெஷனில் உள்ள உணவகத்தின் முற்றத்தில், கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் அங்கிருந்த கற்களில் காணப்பட்டன. இந்த கால் … Read more

4வது முறை நம்பிக்கையில்லா தீர்மானம் – பிரதமர் வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பிரயுத் இன்று நடைபெற்ற நான்காவது நம்பிக்கை இல்லா தீர்மானத்திலும் வெற்றி பெற்றார். தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து நாட்டில், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. பிரதமராக பிரயுத் சான் ஓச்சா (68) பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் பிரயுத் தலைமையிலான ஆட்சியில் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை சுட்டிக்காட்டி கடந்த 4 நாட்களாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து, … Read more

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பலி

மாட்ரிட், காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியது. வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்த நாட்டு … Read more

Twitter: பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் வருமானத்தில் சரிவு

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அந்த நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவன பங்குகளை, ஒரு பங்கிற்கு  54.20 டாலர் என்ற அளவில், ஒட்டுமொத்தமாக 4400 கோடிக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை, அதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் … Read more

கருங்கடல் வர்த்தகம்: ரஷ்யா – உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்தான்புல்: உக்ரைன் – ரஷ்யா இடையே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே நடந்த இந்த ஒப்பந்தத்ததை உலக நாடுகள் வரவேற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர்க் காரணமாக கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தடைபட்டது. இதனால் கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஐரோப்பிய நாடுகளும் இது குறித்து கவலை தெரிவித்திருந்தன. இந்தச் சூழலில் இது தொடர்பாக ஐ.நா. பொதுச் … Read more

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர உலக நாடுகளுக்கு அழைப்பு!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை துணை … Read more

உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா 150-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஷியா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு … Read more

இலங்கையில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பலி

கொழும்பு, பொருளாதார பிரச்சினையில் தள்ளாடிவரும் இலங்கையில் ஆட்சி அதிகார மாற்றம் ஏற்பட்டாலும் மக்களின் அவதி மாறவில்லை. புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனேயை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியமித்த நேற்றைய தினமே, பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தின் கின்னியா நகரில் பெட்ரோல் நிலையத்தில் நெடுநேரம் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு 59 வயது நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல மேற்கு மாகாணத்தின் மத்துகம நகரில் பெட்ரோல் … Read more

ஐநாவுடன் ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தம்; உலகின் உணவு நெருக்கடிக்கு தீர்வாகுமா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன.சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா  ஐநா உடன்  செய்துள்ள ஒப்பந்தத்திற்குப் பிறகு, உணவு நெருக்கடியிலிருந்து உலகம் விடுபடக் … Read more

பஞ்சாப் முதல்-மந்திரி தேர்தலில் தோல்வி; பொதுமக்கள் போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் … Read more