விரைவில் இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். … Read more

இணையத்தில் கேலிக்கு உள்ளாகும் தொழிலதிபர் ஜெப் பெசோஸ் திருமண பத்திரிகை

ரோம், அமேசான் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஜெப் பெசோஸ் (வயது 61), உலகின் 3-வது பெரிய பணக்காரர் ஆவார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இவர் தனது முதல் மனைவியான மெக்கன்சி ஸ்காட்டை 2020-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். தொடர்ந்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்செஸ்(55) என்ற பெண்ணை ஜெப் பெசோஸ் காதலித்து வந்தார். இந்த நிலையில் தனது காதலியை கரம் பிடிக்க ஜெப் பெசோஸ் முடிவு செய்தார். … Read more

ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது

டோக்கியோ, ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்ற சமூகவலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவியது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகோயா மற்றும் யோகாகாமா பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் ஆசிரியர்களை கைது செய்து … Read more

சுபான்ஷு சுக்லா குழுவினருடன் விண்வெளிக்கு சென்ற வாத்து பொம்மை… காரணம் என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். … Read more

'விண்வெளி பயணம் அற்புதமாக உள்ளது; எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது' – சுபான்ஷு சுக்லா

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். … Read more

‘டிராகன்’ விண்கலம் மூலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார் ஷுபன்ஷு சுக்லா

புளோரிடா: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர். நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை … Read more

அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தது ஈரான்: அயத்துல்லா கொமேனி ஆவேசம்

துபாய்: அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் … Read more

“ஈரான் உடனான போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” – அயதுல்லா அலி கமேனி

தெஹ்ரான்: “இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “போலியான சியோனிச (இஸ்ரேல்) ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு … Read more

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் ஷேக் ரத்வான் புறநகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (ஜூன் 26) நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கான் யூனிஸின் தெற்கில் உள்ள ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள ஒரு முக்கிய பாதையில் ஐ.நாவின் நிவாரணப் பொருட்களை … Read more