ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு … Read more

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின்

தியான்ஜின்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதேநேரத்தில் அது நேட்டோவில் இணைவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவை, விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்லோவாகியா, ரஷ்யா உடன் நட்பு பாராட்டி வருகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின அணிவகுப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிலும் … Read more

அமெரிக்க – இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்

புதுடெல்லி: சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி கட்டிப்பிடித்து கைகுலுக்கியபோது, ​​அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ, இந்திய மற்றும் அமெரிக்காவின் உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “21-ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுவானதாக மாறும். அதற்கான சாத்தியக்கூறுகள் … Read more

பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் அவுரஸ் செனட் கார் – சிறப்பு அம்சங்கள் என்ன?

தியான்ஜின்: சீனா​வின் துறை​முக நகரான தியான்​ஜினில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றுள்​ளனர். ரஷ்ய அதிபரின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்​கப்​படு​கிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் பயன்​படுத்தி வரு​கிறார். இந்த கார் … Read more

சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி

பெய்ஜிங்: சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்ற நிலை​யில் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி முதலிடத்​தில் உள்​ளார். இதுகுறித்து சீன அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: சீனா​வில் கூகுள் பயன்​பாட்​டில் இல்​லை. உள்​நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடு​தளமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. இந்த தளத்​தில் … Read more

ரூ.3,201 கோடி முதலீடு, 6,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு… ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

பெர்லின், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு முன்னெடுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ப் … Read more

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு … Read more

கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க 1.25 கோடி ரூபாய் வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

பெர்லின், தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்திருப்பதாவது:- பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் … Read more

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை

தியான்ஜின்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டின்போது … Read more

பாகிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து – 5 வீரர்கள் பலி

லாகூர், பாகிஸ்தானின் கில்கித் – பல்திஸ்தான் மாகாணம் டைமர் மாவட்டத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அந்த ஹெகாப்டரில் ராணுவ வீரர்கள் 5 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முயற்சித்தார். அப்போது, ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 More update … Read more