நூற்றாண்டில் முதன்முறை; கெடு முடிந்தது: வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ரஷ்யா, ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் … Read more

ஜப்பான் ஜவுளிச்சந்தை மீது கவனம்! மத்திய அமைச்சர் அறிவுரை| Dinamalar

கோவை: ”ஜப்பான் ஜவுளிசந்தை மீது நாம் கவனம் செலுத்துவது ஜவுளி எற்றுமதியை அதிகரிக்கும்,” என்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கூறினார். கோவையில் தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நடந்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார்.இக்கூட்டத்தில், ‘இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர் பிரபு தாமோதரன் பேசியதாவது:’ஜவுளித்துறையில் செயற்கை பஞ்சு கலந்த ஆடை தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் (பி.எல்.ஐ.) அறிமுகப்படுத்தி, பல நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.அதே போல், பருத்தி சார்ந்த ஆயத்த ஆடை தயாரிப்புக்கான இரண்டாவது சிறப்பு … Read more

தென் ஆப்ரிக்க விடுதியில்20 இளைஞர்கள் பலி| Dinamalar

ஜோஹன்னஸ்பர்க்-தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு லண்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் 18 – 20 வயதுடைய 20 இளைஞர்கள் நேற்று அதிகாலையில் இறந்து கிடந்தனர்.தகவல் அறிந்து போலீசார் சென்ற போது மேஜை, நாற்காலிகள் மற்றும் தரையில் இளைஞர்கள் இறந்து கிடந்தனர். அவர்களது உடலில் காயம் எதுவும் இல்லை. தேர்வுகள் முடிந்ததையடுத்து நேற்று முன் … Read more

இலகு ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இலகு ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமான ஓட்டி உயிரிழந்தார். வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 60 வயதான விமானி ஓட்டிக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா அல்லது வேறெதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.    Source link

சீனாவில் கொரோனா தீவிரம் குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்| Dinamalar

பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் குடியிருப்பு பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் 2019ல் கொரோனா வைரஸ் முதலில் தோன்றி, பின் உலகம் முழுதும் பரவியது. இரண்டு ஆண்டுகளாக உலகமே முடங்கிக் கிடந்தது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்உலகின் பல்வேறு நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால், கொரோனா உருவான சீனாவில் மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது.சீனாவில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்காவ் நகரில் நேற்று முன் தினம் … Read more

ஹவுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு..!

ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருட்களை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். வடமேற்கு மாகாணமான சாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களான சுமார் 29 டன் ஹாஷிஸ், 2 மில்லியன் ஆம்பெடமைன் மாத்திரைகள் மற்றும் 66 கிலோ ஹெராயின் உள்ளிட்டவற்றை  அதிகாரிகள் தீ வைத்து எரித்து அழித்தனர். Source link

பெட்ரோல் ரூ.470; டீசல் 460; இலங்கையில் இதுதான் விலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு-இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் – டீசல் விலையை அந்நாட்டு அரசு மூன்றாவது முறையாக உயர்த்தி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. பெட்ரோல் – டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை, பெட்ரோல் – டீசல் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டன. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று விலை உயர்த்தப்பட்டது. அந்நாட்டு ரூபாய் மதிப்பில் பெட்ரோல், … Read more

உக்ரைன் போர் தொடங்கிய பின் ரஷ்ய அதிபர் புதினின் முதல் வெளிநாட்டு பயணம்

உக்ரைன் போர் தொடங்கிய பின் முதல் முறையாக அதிபர் புதின் ரஷ்யாவை விட்டு வெளியேறி மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ள பதிவில் அதிபர் புதின், தஜிகிஸ்தான் மற்றும், துர்க்மெனிஸ்தான் நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் சுற்றுபயணத்தின் போது அஜர்பைஜான், கஜகஸ்தான், ஈரான், உள்ளிட்ட நாடுகளின் காஸ்பியன் மாநாட்டில் அதிபர் புதின் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஸ்கோ வரும் இந்தோனேஷியா அதிபருடன், புதின் பேச்சுவர்த்தை நடத்த … Read more

இரவு குஷி : 20 பேர் பலி| Dinamalar

ஜோஹன்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் இரவு விடுதியில், 20 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு லண்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் 18 – 20 வயது மதிக்கத்தக்க 20 இளைஞர்கள் நேற்று அதிகாலையில் இறந்து கிடந்தனர்.தகவல் அறிந்து போலீசார் சென்ற போது மேஜை, நாற்காலிகள் மற்றும் தரையில் இளைஞர்கள் இறந்து கிடந்தனர். அவர்களது உடலில் காயம் எதுவும் இல்லை. தேர்வுகள் … Read more

அனைத்து துறைகளிலும் இந்தியா சாதிக்கிறது: இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

முனிச்: ஜெர்மனியில் ஜி7 மாநாடு நேற்றுதொடங்கியது. இதில் பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிஇந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிலும் இந்தியா சாதித்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். கடந்த 1975-ம் ஆண்டில் ஜி7 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில்அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 48-வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்துகிறது. இதன்படி ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் … Read more