சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை- பிரதமர் மோடி உறுதி

டோக்கியோ: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.    இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளார். பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இரண்டு ஜனநாயக நாடுகளும் முக்கிய தூண்களாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா, பல நாடுகளுடன் மோதல் … Read more

பிளாஸ்டிக்கை சிதைக்கும் என்சைம்கள்; விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய தொழில்நுட்பம்

பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில், பிளாஸ்டிக்கை சில மணி நேரங்களிலேயே எளிதில் அழிக்கும் வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகிற்கு பெரும் நிம்மதி அளிக்கும் விஷயம் என்றால் மிகையில்லை. நிலத்திலும் நீரிலும் ஆண்டு தோறும் கொட்டப்படும் லட்சக்கணக்கான டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், நிலம் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு எமனாக மாறுகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி, உலகில் பேரழிவை தடுக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது. பிளாஸ்டிக்குகள் … Read more

இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் – இத்தாலிய வீரர் வெற்றி

இத்தாலியில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில், 15-ஆவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த Giulio Ciccone முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். Rivarolo Canavese-ல் இருந்து Cogne வரை சுமார் 177 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயத்தில், ஏராளமான சைக்கிள் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டி தொடங்கியதும் சைக்கிளிங் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் பந்தய தூரத்தை நோக்கி விரைந்தனர்.  Source link

ரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்: அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்

கொழும்பு : இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கி அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளை பெறவும் வழி வகுத்தது. நாடாளுமன்றத்துக்கு அதிபரை விட கூடுதல் அதிகாரங்களை வழங்கிய 19-வது திருத்தமும் ரத்தானது. தற்போது இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. கடுமையான … Read more

அமெரிக்காவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று 2 வதாக வந்து வெற்றி கோட்டை தொட்ட நபர் திடீர் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற  Brooklyn Half Marathon போட்டியில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்ற நபர் வெற்றிக் கோட்டை தொட்ட நிலையில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நபர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் போட்டியில்15க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போட்டி நடைபெறும் சமயம் மோசமான காலநிலை இருக்கும் என்று அமைப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், கடும் வெப்பம்  ஏதேனும் விளைவுகளை … Read more

லாரி டிரைவர்கள் தாக்கப்பட்டால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்: இலங்கை மந்திரி எச்சரிக்கை

கொழும்பு: பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கும், சமையல் கியாசுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், சமையல் கியாஸ் நிலையங்கள் முன் நாள்கணக்கில் காத்திருத்தும் அவற்றைப் பெற முடியாத பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்நிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எரிபொருள் லாரிகளை சில குழுக்கள் தடுத்து நிறுத்துவதாகவும், தாங்கள் சொல்லும் இடத்தில் எரிபொருளை இறக்க வேண்டும், இல்லாவிட்டால் தீ வைப்போம் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் … Read more

நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் இழுத்துக் கொள்ளும் பள்ளம்.? நரகத்தின் வாசல் என வர்ணிக்கும் கிராம மக்கள்!

ரஷ்யாவின் சைபீரிய கிராமத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பாதாளத்துக்கான வாசல் என்றும் நரகத்தின் வாசல் என்றும் இதனை வர்ணிக்கின்றனர். இந்த பள்ளம் பெரிதாகி வளர்ந்துக் கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலத்தின் பெரும் பகுதியை அது உள்வாங்கிக் கொண்டு இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. உறைபனி நிலங்கள் உருகத் தொடங்கியதன் விளைவாக இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவதாகவும் உலக வெப்பமயமாதல் காரணமாக இது … Read more

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை- சவுதி அரேபியா உத்தரவு

ரியாத்: கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 … Read more

ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹொன்ஷூவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹொன்ஷூவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 17 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, ஜப்பானின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில் 5.8 ஆக பதிவான ஒரு நிலநடுக்கம் உள்ளூர் … Read more

கேன்ஸ் திரைப்படவிழா- இந்திய ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளுடன் மத்திய இணை மந்திரி கலந்துரையாடல்

கேன்ஸ்: 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற மத்திய இணை மந்திரி முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். கேன்ஸில் உள்ள மார்ச்சே டு பிலிம்ஸில், ஆடியோ விஷுவல் தொழிலில் தடம் பதிக்க உத்தேசித்துள்ள ஐந்து இந்திய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேசினார். முன்னதாக வில்லேஜ் இன்டர்நேஷனல் ரிவியராவில் உள்ள இந்திய அரங்கை மந்திரி முருகன் பார்வையிட்டார். பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் உடன் சென்றிருந்தார்.  அப்பொழுது … Read more