பெண்ணை தண்டாவளத்தில் தள்ளி விட்ட நபர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்செஸ்டர் & ஜாக்சன் ஏவ் ரயில் நிலையத்தின் நடைமேடையில் நடந்து வந்த 52 வயதுள்ள பெண்ணை அவரது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விரைந்து சென்று அப்பெண்ணைக் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் படிக்க | அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு … Read more

முடிவுக்கு வந்தது பொது முடக்கம்.. கிடு கிடுவென எகிறிய கச்சா எண்ணெய் விலை.!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.  ஷாங்காயில் இரண்டு மாதத்திற்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுவதுடன், துறைமுகங்களும் செயல்பட தொடங்கியுள்ளதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சவுதி அரேபியாவும், ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் உயர்த்தியுள்ளது.    Source link

அமெரிக்கா : தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன் – அதிர்ச்சி சம்பவம்..!!

புளோரிடா, அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மாதம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் … Read more

அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் எதிரொலி : நியூயார்க்கில் கடுமையாக்கப்பட்ட துப்பாக்கி உரிமை சட்டம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பஃபலோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த மாதம் கவச உடை அணிந்த வந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி தடுக்கப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்திய பெய்டன் ஜென்ட்ரான்(18) என்ற அந்த இளைஞர் … Read more

மத சகிப்புத்தன்மை அவசியம்: நூபுர் சர்மா சர்ச்சைப் பேச்சுக்கு ஐ.நா. எதிர்வினை

ஜெனீவா: “மத சகிப்புத்தன்மை அவசியம். அனைத்து மதங்களும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானே டுஜாரிக் தெரிவித்துள்ளார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். அதனையடுத்து தொழிலதிபர் நவீன் குமார் ஜிண்டாலும் அதேபோன்றதொரு சர்ச்சைக் கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு … Read more

4 நாட்கள் வேலை வாரம் திட்டம் இங்கிலாந்தில் அமல்

நான்கு நாட்கள் வேலை வாரம் திட்டத்தை சோதனை அடிப்படையில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தி உள்ளது. 70 நிறுவனங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து 300 தொழிலாளர்கள் நான்கு நாட்கள் வேலை வாரத் திட்ட சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், மன அழுத்தம், சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திருப்தி உள்ளிட்டவைகளை கூடுதல் நாள் விடுமுறை மூலம் பணியாளர்கள் கையாள்வதை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  Source link

"பதவியை விட்டு வெளியேற முடியாது" – அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி … Read more

இயற்கையால் ஈர்க்கப்பட்டு மாறிய வாழ்க்கை.. போதை மருந்து விற்றவர் பறவைகள் காப்பாளராக மாறினார்..!

அமெரிக்காவில் போதை மருந்து விற்றவர் வனவிலங்குகளை குணப்படுத்தும் நிபுணராக மாறியுள்ளார். ஸ்டாட்ஸ் என்ற பெயருடைய அந்த 51 வயது மனிதர் அனகோஸ்டியா என்ற நதியை துய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது இயற்கையின் அற்புத சக்தியின் பால் ஈர்க்கப்பட்டு பறவைகளை காக்கும் செயலில் ஈடுபட்டார். இதுவே அவர் சிறந்த பறவை காப்பாளாராக உருவெடுக்க வாய்ப்பாக அமைந்தது. போதைப் பொருள் விற்பவராக சுற்றித்திரிந்த அவர் தற்போது பருந்துகளுக்கு பாதுகாவலராக திகழ்ந்து வருகிறார். Source link

வங்கதேச தீ விபத்து; மரபணு மாதிரி சேகரிப்பு| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில், ரசாயன கிடங்கு தீ விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரி சேகரிக்கும் பணி துவங்கிஉள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிட்டகாங் துறைமுகம் அருகே உள்ள ரசாயன கிடங்கில், மூன்று தினங்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 49 பேர் உயிரிழந்தனர்; 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில், 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் … Read more

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு 53.57 கோடியாக உயர்வு; 63.21 லட்சம் பேர் உயிரிழப்பு!

நியூயார்க், கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 57 லட்சத்து 61 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக … Read more