ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு அமெரிக்கா 4,000 கோடி டாலர் நிதியுதவி| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு 4,000 கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் துவங்கிய நாள் முதலாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கி வருகி்ன்றன. இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை … Read more

நாடாளுமன்ற தேர்தல்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி!

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்று (மே 21) நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் ஆட்சியை கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மோரிசன் … Read more

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 4000 கோடி டாலர் அமெரிக்கா நிதியுதவி

ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு உதவ நாலாயிரம் கோடி டாலர் வழங்குவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே, அதை எதிர்கொண்டு முறியடிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றன. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் படை வலிமையை அதிகரிக்க நாலாயிரம் கோடி டாலர் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.  Source link

ரஷ்ய ராணுவத்திடம் வீழ்ந்தது உக்ரைனின் மரியுபோல் நகரம்| Dinamalar

போக்ரோவ்ஸ்க் : உக்ரைனை சேர்ந்த மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று மாதங்களாக நடந்து வரும் போரில், முக்கியமான மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து, ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கோனான்ஷென்கோவ் கூறியதாவது:மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விட்டது. இது ரஷ்யாவின் மிகப் பெரிய வெற்றியாகும். மரியுபோல் நகரின் பிரமாண்ட … Read more

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைப்பு.!

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, மாணவர் கூட்டமைப்பினர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைத்தியம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதனை மீறி அங்கு போராட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மாணவர்கள் கலையாததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனிடையே, கடந்த 9ஆம் தேதி நிகழ்ந்த … Read more

கொரோனாவை சமாளிக்க இஞ்சி டீ குடியுங்கள்… வட கொரிய அரசின் உத்தரவால் மக்கள் அவதி

வடகொரியாவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. நாட்டில் யாரும் தடுப்பூசி போடாததாலும், மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுவதாலும் அங்குள்ள மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.  தவறான நிர்வாகத்தின் காரணமாக, நோயாளிகள் சிகிச்சைக்காக வீட்டு வைத்தியத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மூலிகை தேநீர் குடிக்கவும், உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், வடகொரியா கொரோனா பரவல் நாட்டிற்குள் வராமல் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் … Read more

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனை தோற்கடித்து, தொழிலாளர் கட்சியின் அந்தோணி அல்பேனிஷ் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளார் என அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை வென்ற நிலையில், பெரும்பான்மைக்கு 4 இடங்கள் மட்டும் தேவை என்பதால், அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், அந்தோணி அல்பேனிஷிற்கும் அவரது … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடை – அரசு அதிரடி உத்தரவு!

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இதை அடுத்து, தாலிபான் அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் புதிய அரசும் அமைந்துள்ளது. மேலும், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர். எனினும், ஆப்கானிஸ்தான் நாட்டில் … Read more

இங்கிலாந்தில் பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வரும் எலெக்ட்ரிக் கார் நிறுவனம்.!

இங்கிலாந்தில் உள்ள எலெக்ட்ரிக் கார் நிறுவனம் ஒன்று பழமையான கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வருகிறது. லண்டன் எலெக்ட்ரிக் கார்ஸ் என்ற அந்த நிறுவனம் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக நிஸான் லீஃப் அல்லது டெஸ்லாவின் எலெக்ட்ரிக் என்ஜின்களை பொருத்துகிறது. இதன் மூலம் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படுகின்றன. தற்போது புழக்கத்தில் உள்ள கார்களை பயன்படுத்துபவர்களும் சைலன்சரில் புகை வெளியேற்றத்தை நிறுத்தவும், காரின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கிலும் அவற்றை அனுப்பி எலக்ட்ரிக் கார்களாக … Read more

பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு: தலிபான்கள் அடுத்த அதிரடி!

ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. மேலும், ஆட்சி அமைத்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு, ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் தலிபான்கள் பேசியதற்கும், … Read more