ஹைதி கலவரத்தில் 50 பேர் உயிரிழப்பு| Dinamalar

போர்ட் – ஓ – பிரின்ஸ்:ஹைதி நாட்டில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததில், 50 பேர் கொல்லப்பட்டனர்.வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸின் மறைவுக்குப் பின், பல்வேறு பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.ஜனாதிபதி ஜோவெனல் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம், கடந்த 8ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து, நாட்டின் பல்வேறு … Read more

லோக்சபாவுக்கு ஒவ்வாத வார்த்தைகள் : புதிய பட்டியல் வெளியீடு| Dinamalar

புதுடில்லி :பார்லிமென்டின் இரு சபைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.பார்லிமென்டின் லோக்சபா ராஜ்யசபாவில் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம். எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் 18ம் தேதி துவங்க உள்ளது. அதில் இருந்து இது அமலுக்கு … Read more

ஆள் சேர்ப்பை குறைக்கிறது கூகுள் நிறுவனம்: சுந்தர் பிச்சை தகவல்| Dinamalar

வாஷிங்டன்: இந்தாண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் பல்வேறு சேவைகளை, அளித்து வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தைசேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை … Read more

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா

கொழும்பு: நெருக்கடியான இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என ஒருபோதும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா. அந்த நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் அதிபர் ராஜபக்ச. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ … Read more

NO Recruitment: கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை

Be More Entreprenerial: இந்த ஆண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை கூகுள் நிறுவனம் குறைத்துவிட்டது என்று ஆல்பாபெட் நிறுவன உயரதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன  ஊழியர்களுக்கு கோடிட்டு காட்டினார்.   அதிக கவனத்தும் பணிபுரிய வேண்டுமென்றும், கடினமான நாட்களில் காட்டியதை விட துரிதமாகவும், கூர்மையான கவனத்துடன், புத்திசாலித்தனத்துடன்செயல்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அதன் ஊழியர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப … Read more

மாலத்தீவில் தஞ்சம் அடைந்த ராஜபக்சே சிங்கப்பூர் செல்கிறாரா?

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரணம் என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து,  கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார்.    பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில்,  கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் … Read more

ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைக்கும் கூகுள் நிறுவனம்.. பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்பதால் நடவடிக்கை..!

பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், நடப்பு ஆண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைத்துக் கொள்வது என கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் இதை தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொறியியல், தொழில்நுட்ப பிரிவுகளில் ஆட்களை சேர்க்க கவனம் செலுத்தப்படும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார். அதேநேரத்தில் மற்றொரு தகவல்தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஆட்குறைப்பை தொடங்கியுள்ளது. நிறுவனத்தில் மொத்தமுள்ள 1.81 லட்சம் ஊழியர்களில் ஒரு சதவிகிதம் … Read more

தண்ணீர் உள்ள மற்றொரு கோளைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தில் பல்வேறு அதிசயங்களை வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி அண்டத்தில் சிதறிக் கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்த புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது.  இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு வியப்பூட்டும் புகைப்படங்களை  நாசா வெளியிட்டு வருகிறது. பூமியின் தோற்றம் குறித்து எவ்வாறு நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறதோ, அதே போல … Read more

குறுகலான இடைவெளிகளில் செல்லத்தக்க வகையில் பாம்பு வடிவ ரோபோவை உருவாக்கிய ஜப்பான் விஞ்ஞானிகள்..!

ஜப்பானில் பாம்பு வடிவ ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 5.5 அடி நீளம், 10 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, உயரமான படிகளில் ஏறி, குறுகலான இடைவெளிகளில் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மூலம் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மனிதர்களை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.  Source link

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு

மாலே: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது ராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் இருக்கும் விவரத்தை வெளியிட மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். ஆனால் அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய … Read more