கிரீஸ் கடலில் கிடந்த 23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கிரீஸ் கடலில் கொட்டிக் கிடந்த வலை, பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட 23 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, கடல் மாசு தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு  மீனவர்களின் ஒத்துழைப்புடன் கடலினுள் கிடந்த 23 புள்ளி 5 டன் வலை, மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.  Source link

உக்ரைன் ஆலையில் இருந்து உடல்கள் மீட்கும் பணி துவக்கம்| Dinamalar

கீவ் : ரஷ்ய ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்த இரும்பு ஆலையில் இருந்து, உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி துவங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யப் படைகள் போரைத் துவக்கின.பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியபோதும், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின.இந்நகரில் உள்ள அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் பதுங்கியிருந்து, உக்ரைன் வீரர்கள் கடும் எதிர் தாக்குதல் … Read more

காங்கோவில் கிளர்ச்சிப் படையினர் கொடூரத் தாக்குதல் – 36 பேர் உயிரிழப்பு

காங்கோவில் கிராமத்திற்குள் புகுந்து கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதூரி மாகாணத்தில் இரவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சிப் படை கும்பல் பொது மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. காங்கோ அரசுடனான போராட்டத்தில் அப்பாவி மக்களை கிளர்ச்சி படைகள் தொடர்ந்து கொன்று குவித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 36 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளாது.  Source link

பிரிட்டன் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்| Dinamalar

லண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அவர் சார்ந்துள்ள பழமைவாத கட்சி தாக்கல் செய்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி தன் இல்லத்தில் அடிக்கடி விருந்து கொடுத்தது சர்ச்சையானது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எனினும், எதிர்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் போரிஸ் ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்கும் வகையில் … Read more

இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை.!

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிரப்பிய கடைசிக் கப்பல் வரும் 16ம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது. இந்த சூழலில், இலங்கையில் டாலர் கையிருப்பிற்கு பற்றாக்குறை நிலவுவதால், மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக … Read more

மேற்கத்திய நாடுகளில் எகிறிய எண்ணெய் விலை.. ரஷ்யாவுக்கு ஒரு நாளைக்கு 80 கோடி டாலர் வருவாய்.!

மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளால் கச்சா எண்ணெய் விலை 50 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளதால் தங்களுக்குப் பெருமளவு இலாபம் கிடைத்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எண்ணெய் எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யாவுக்கு ஒரு நாளைக்கு 80 கோடி டாலர் வருவாய் கிடைப்பதால், இந்த ஆண்டில் விற்பனை 28 ஆயிரத்து 500 கோடி டாலர் என்னும் அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

மாறி மாறி ஏவுகணை பரிசோதனை… கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்!

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, அவ்வபோது ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வதை வடகொரியா வழக்கமாக கொண்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் 8 ஏவுகணை பரிசோதனை செய்து, தென்கொரியாவை மட்டுமன்றி, அந்நாட்டுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவுக்கும் வடகொரியா அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது. இதனையடுத்து, அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா 8 ஏவுகணைகளை சோதனை … Read more

ஜப்பான், அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கத் தைவான் நிறுவனம் திட்டம்.!

வாகனங்கள், செல்பேசிகள், மின்னணுக் கருவிகள், கணினிகள் என அனைத்துக்கும் செமிகண்டக்டர் சிப் தேவைப்படுகிறது. உலக நானோ சிப் சந்தையில் 84 விழுக்காட்டைத் தைவானும், 7 புள்ளி 6 விழுக்காட்டைச் சீனாவும் கொண்டுள்ளன. உக்ரைனை ரஷ்யா முற்றுகையிட்டதுபோல், தைவானைச் சீனா முற்றுகையிட்டால் செமிகண்டக்டர் வழங்கல் தடைபட்டு, உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இத்தகைய காரணங்களால் 860 கோடி டாலர் மதிப்பீட்டில் ஜப்பானிலும், 1200 கோடி டாலர் மதிப்பீட்டில் அமெரிக்காவிலும் செமிகண்டக்டர் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமைக்க டிஎஸ்எம்சி திட்டமிட்டுள்ளது. … Read more

போரிஸ் ஜான்சன் பதவி நீடிக்குமா?: பார்லி.யில் நம்பிக்கை வாக்கெடுப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. பிரிட்டன் பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் நடத்தினர். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். … Read more