மியான்மரில் 200 வீடுகள் எரிப்புராணுவத்தினர் அட்டூழியம்| Dinamalar

பாங்காக்:மியான்மரில், ராணுவத்தினர் மூன்று கிராமங்களில் உள்ள, 200க்கும் மேற்பட்ட வீடுகளை தீயிட்டு எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு துவக்கத்தில் ராணுவத்தினர் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் ராணுவ அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட துவங்கினர். போராட்டம்இந்த போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ராணுவ அரசு நசுக்கியது. எனினும், மியான்மரின் வடக்கில் உள்ள சகாய்ங் பிராந்தியத்தில் நடந்து வரும் போராட்டத்தை ராணுவத்தால் அடக்க முடியவில்லை. அங்குள்ள மக்கள் பாதுகாப்பு … Read more

ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – உக்ரைன் அரசு

நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் கோரியுள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதரான ஒக்சானா, தங்கள் நாட்டை பாதுகாக்க நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகள் தேவைப்படுவதாக கூறினார். அந்த ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் உக்ரைன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யப் படைகளால் நடத்தப்படும் குற்றச்செயல்கள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அந்நாட்டின் … Read more

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள், பெண்கள் கோஷம்..!

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது முறையாக எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு உயர்த்தியது. அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். லாஹூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் திரண்ட நுற்றுக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் … Read more

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள்.!

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த  பயணிகள் அந்தரத்தில் தவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள கென்னிவுட் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரோ 360 என்ற வகை ராட்டினத்தில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அந்தரத்தில் தவித்தனர். பூங்கா ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். Source link

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் குட் நியூஸ்!

பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 209.86 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 204.15 ரூபாய் ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். … Read more

கொழும்பு டு மாஸ்கோ புறப்பட இருந்த விமானம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தம்.. இறக்கி விடப்பட்ட பயணிகள்.. காரணம் என்ன.?

கொழும்பில் இருந்து மாஸ்கோவுக்குப் புறப்பட இருந்த ஏரோபுளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதிலிருந்த பயணியர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். ரஷ்யாவின் ஏரோபுளோட் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கொழும்புக்கு வந்த ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் மீண்டும் மாஸ்கோவுக்குப் புறப்படத் தயாராக இருந்த கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணியர்கள் இறக்கி விடப்பட்டனர். உக்ரைன் போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஏரோபுளோட்டுக்கு விமானங்களைக் … Read more

முதன்முறை: இந்தியாவிடம் உதவி கேட்டார்களா தலிபான்கள்? – ஆப்கனில் இந்திய குழுவினர் நடத்திய திடீர் பேச்சுவார்த்தை

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். கடந்த ஆண்டு ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் … Read more

மாஜி பிரதமர் இம்ரான் மீது தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் அரசு முடிவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில், தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி … Read more

இங்கிலாந்து ராணி அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுக்கு பெயர் மாற்றம்!

இங்கிலாந்து ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த தருணம் பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டார்.  1957-ம் ஆண்டு இங்கிலாந்து பரிசளித்த நேஷனல் கேரிலான் இசைக்கருவி குயின் எலிபெத் II தீவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

இந்திய பெருங்கடலை வளைக்கத் துடிக்கும் சீனா: சூயஸ் முதல் மலாக்கா வரை ஆதிக்கம்; இந்தியாவின் புவிசார் அரசியல் 

இந்தியாவின் புவிசார் அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் இந்தியப் பெருங்கடலை சுற்றி சீனா தனது காய்களை ஏற்கெனவே நகர்த்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் கைகோர்த்து இந்தியா பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் மேற்கு இந்திய பெருங்கடலை கபளீகரம் செய்யும் திட்டத்துடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அண்மையில் மேற்கொண்டு சுற்றுப்பயணம் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பெருங்கடல் என்பது உலகின் 3-வது மிகப்பெரிய கடலாகும். பல ஆண்டுகளாகவே இந்தியப் பெருங்கடல் முழுவதும் … Read more