தென் கொரியா அதிபரை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:

சீயோல்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தென்கொரியா சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் , ஏவுகணை சோதனைகளை வடகொரியா சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் வடகொரியாவுடனான நின்றுபோன பேச்சுவார்த்தையை … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்

காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐ.நா. கூறுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், கோதுமை ஏற்றுமதியை நிறுத்துமாறு … Read more

இலங்கையில் உணவுக்காக போராடும் நிலை வரும்- பிரதமர் ரணில்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் கோபாவேசம் கொண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்ரம சிங்கே பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமர் ரணில் எச்சரிக்கை அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசினார். … Read more

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தென்கொரியா சென்றார் ஜோ பைடன்; கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா?

பேச்சுவார்த்தை முறிந்தது கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக உரசல் போக்கு நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த பலனும் கிட்டவில்லை. … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 1,183 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி, வரலாறு காணாத பாதிப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்திவிட்டது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன. இருப்பினும் சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பதிவு செய்யப்படும் பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் அங்கு 1,082 பேருக்கு கொரோனா … Read more

திவால் நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை- வட்டியை கூட கட்ட முடியாத பரிதாபம்| Dinamalar

கொழும்பு : இலங்கை அரசு, முதன் முறையாக கூடுதல் அவகாசத்திற்குப் பின்னும் அன்னிய கடன் பத்திரங்களுக்கான வட்டித் தொகையை கூட திரும்பச்செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், கொரோனா பரவலால் சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்டு அன்னியச் செலாவணி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதோடு, உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம், 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு மேலும் நிதியுதவி அளித்துவரும் அமெரிக்காவுக்கு நன்றி – ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி

21.5.2022 00.45: ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

தேவையற்ற பேச்சு: பாகிஸ்தானுக்கு இந்தியா சூடு| Dinamalar

நியூயார்க் : ஐ.நா., கூட்டத்தில் சம்பந்தமின்றி காஷ்மீர் பற்றி பாக்., பேசியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், அமெரிக்கா தலைமையில் நேற்று நடந்தது. இதில், பாக்., வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து பேசினார். இதை கண்டித்து இந்தியாவிற்கான ஐ.நா., கவுன்சிலர் ராஜேஷ் பரிஹர் பேசியதாவது:ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவுடன் … Read more

இலங்கையில் மேலும் 9 மந்திரிகள் பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்க பதவியேற்றார். அவரை தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் 4 புதிய மந்திரிகளாக ஏற்கனவே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில், இலங்கை … Read more

இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல்.!

இந்தோனேஷியாவில் கடலில் குறைவான ஆழமுள்ள பகுதியில் தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு, பயணத்தைத் தொடங்கியது. 2 நாட்களுக்கு முன்பு 784 பயணிகள், 55 பணியாளர்கள் என மொத்தம் 800 பேருடன் மவுமர் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கே.எம்.சிரிமாவ் கப்பல், ஈஸ்ட் நுசா தெங்கரா மாகாணத்தில் ஆழம் குறைவான கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. இதையடுத்து அதனை விடுவிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. அந்நாட்டு நேரப்படி, வியாழக்கிழமை பகல் … Read more