உக்ரைனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறினர்| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தற்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால் டொ னெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைன் புகைப்பட பத்திரிகையாளர் மாக்ஸ் லெவினும், வீரர் ஒலக்சிய் செர்னிஷோவும் போரின் ஆரம்ப காலத்தில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்திரிகை சுதந்திர குழுவான எல்லையில்லா நிருபர்கள் குழு நடத்திய விசாரணையில் அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா என்பதையும் உறுதிசெய்ய இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.