செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் சீனாவின் “ஜுரோங்” ரோவர்.!

செவ்வாய் கிரகத்தில், மைனஸ் 100 டிகிரி குளிரில், சீனாவின் ரோவர் விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 2020ம் ஆண்டு ஜூலை மாதம், செவ்வய் கிரகத்துக்கு முதல் முறையாக தியான்வென்-ஒன் என்ற  விண்கலத்தை சீனா தனியாக அனுப்பியது. அதனுடன் அனுப்பப்பட்ட ஜுரோங் ரோவர் விண்கலம், 350 நாட்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பயணித்து, புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது அங்கு குளிர் காலம் என்பதால் நன்பகலில் மைனஸ் 20 டிகிரி … Read more

அமெரிக்காவில் ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாடு குறைப்பு

அரிதாக இரத்த உறைதல் பாதிப்புகள் ஏற்படுவதன் காரணமாக அமெரிக்காவில் வயது வந்தோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசியை வயது வந்தோருக்கு செலுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் கிடைக்காத பட்சத்தில் அல்லது விருப்பம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு … Read more

கொரோனா பரவல் எதிரொலி : செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு..!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு மத்தியில் அங்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹாங்சூ நகரில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், போட்டி நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஹாங்சூ நகர் கொரோனா தொற்று வேகமாக பரவி … Read more

ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் – ஐரோப்பிய யூனியன் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புருசல்ஸ்: ரஷ்ய சொத்துக்களை விற்று உக்ரைனை மறுசீரமைக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மிஷல் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் தலைமை, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்டவை தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டன. இதில் சொகுசு கப்பல்கள், சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள், வங்கி கணக்குகள், … Read more

நாடாளுமன்றம் முற்றுகை.. மாணவர்கள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் போராட்டம்..!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசை அமைக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் … Read more

சீனாவில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பலி- 10 பேர் மீட்பு

மத்திய சீனா பகுதியில் உள்ள சாங்சா நகரில் குடியிருப்புகளுடன் கூடிய வணிக வளாக கட்டிடம் உள்ளது. 6 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. சீட்டு கட்டு போல சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இது பற்றி அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு பகலாக இந்த மீட்பு பணி நடந்தது. ராட்சத இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி … Read more

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைத்தது சீனா: கோவிட் காரணம்?| Dinamalar

இந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவின் ஹாங்சோவு நகரில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்தது. 2022ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஹாங்சோவு நகரில் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்காக அந்நகரில் சுமார் 56 போட்டித் தளங்களை அமைத்துள்ளனர். ஏற்கனவே பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீனா தனது தலைநகரான பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடத்தியது. … Read more

கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை…சினிமா பாணியில் நடந்த சம்பவம்!

அமெரிக்கா கலிபோர்னியா மாகணத்தில் கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் சிசிடிவி வெளியாகி உள்ளது. துப்பாகிகளுடன் கடையில் கொள்ளையடிக்க வந்த நான்கு பேர், வாக்குவாதம் செய்த ஊழியரை நோக்கி சுட்டனர். சுதாரித்து ஊழியர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு கொள்ளையன் குண்டடிபட்டு உயிரிழந்தான். மற்றொரு கொள்ளையன் பிடிப்பட்ட நிலையில், தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தின் சிசிடிவியை போலீசார் வெளியிட்டுள்ளனர். Source link

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு … Read more

உக்ரைன் மரியுபோல் நகரில் கடும் சண்டை – உருக்கு ஆலையை தகர்த்தது ரஷ்யா

கீவ்: உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று 71-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ரஷ்யா அறிவித்தது. எனினும் அந்த நகரில் உள்ள உருக்கு ஆலையில் சுமார் 2,000 உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு நகரத்துக்கு ஒப்பான இந்த ஆலையின் கீழ் பல அடுக்கு பதுங்கு குழிகள் உள்ளன. உக்ரைன் வீரர்களோடு 1,000 அப்பாவி மக்களும் சிக்கியுள்ளனர். ஐ.நா. சபையின் தீவிர முயற்சியால் … Read more