சிறிய விமானம் கரடுமுடனான நிலப்பரப்பில் விழுந்து விபத்து.. விமானத்தில் பயணித்த 4 பேர் சடலமாக மீட்பு..!

குரோஷியா நாட்டில் சிறிய விமானம், கரடுமுரடான நிலப்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ப்லிட் நகரத்தில் இருந்து ஜெர்மனி நோக்கி புறப்பட்ட செஸ்னா நிறுவனத்தின் விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தின் ரேடார் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஜாக்ரெப் பகுதிக்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 4 பேரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக இந்த … Read more

சரிவுப்பாதையில் சீன மக்கள் தொகை: குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்

பீஜிங் : மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை குறைந்தது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பிரிவின் கணக்குப்படி, சீன … Read more

அமெரிக்க துப்பாக்கிச்சூடு எதிரொலி: கனடாவில் கை துப்பாக்கிகளுக்கு வருகிறது தடை

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, கனடாவில் கை துப்பாக்கிக்கள் வைதிருப்பதற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் டியூடெர்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையில் தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது தொடர்பாக மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. கைதுப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் … Read more

தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள 27 பக்க அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் அனுப்பப்படுவதாகவும், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது போன்ற குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

ஈரானிடம் உச்ச வரம்பை விட அதிக யுரேனியம்- சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை

நியூயார்க்: கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் ஒப்பந்தத்தின்படி ஈரான் 300 கிலோ யுன்ரேனியத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஈரான் 3809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை குற்றம்சாட்டியுள்ளது. இது ஈரானுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட 13 மடங்கு அதிக யுரேனியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தி பல … Read more

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கேல், 3ல் 2 பங்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்தார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான எண்ணெய்களையும் தடை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த தீர்மானம் ஹங்கேரியின் எதிர்ப்பால் கடந்த 16-ம் … Read more

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு

காத்மாண்டு: நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் … Read more

ஈரானில் கட்டிடம் இடிந்து விழுந்தது; 32 உடல்கள் மீட்பு

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தென்மேற்கே குஜஸ்தான் மாகாணத்தில் அபடான் நகரில் 10 அடுக்கு வர்த்தக கட்டிடம் ஒன்று இருந்தது. மெட்ரோபோல் என பெயரிடப்பட்ட இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளும் ஒருபுறம் நடந்து வந்துள்ளன. பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூட கூடிய தெருவில் அமைந்த இதனை சுற்றி வர்த்தகம் மற்றும் மருத்துவ வளாகங்களும், அலுவலகங்களும் செயல்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், கட்டிடம் திடீரென கடந்த வாரம் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து, மீட்பு … Read more

கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் 19 குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து கனடாவில் நேற்று இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் புதிய நடவடிக்கைகள் தேவை என ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். துப்பாக்கி இறக்குமதி மற்றும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Source link

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய்- உலக சுகாதார அமைப்பு

லண்டன்: கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் … Read more