ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் – 40க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மாட்ரிட்: பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது. ஆப்ரிக்காவில் ஏற்படும் … Read more

ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு?| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவின், ‘எஸ் – 400’ ரக ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை, அடுத்த மாதம் முதல், தன் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களால், பல ஆண்டுகளாக நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதேபோல், மற்றொரு அண்டை நாடான சீனாவால், 2020 முதல், லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.இவற்றை எதிர்கொள்ளும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி … Read more

கப்பலில் கடத்தி வரப்பட்ட 810கிலோ கிராம் கோகைன் பறிமுதல்

எல்சல்வடார் நாட்டின் La Concordia கடல் பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 810கிலோ கிராம் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு  2.25 மில்லியன் அமெரிக்க டாலராகும். கடலில் இருந்து 903 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலை எல்சல்வடார் நாட்டு கடற்படையினர் சோதனை போட்டனர். அப்போது சரக்குகள் ஏற்றிச் செல்லும் பகுதியில் கோகைன் போதைப் பொருள் மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் மெக்சிகோ நாட்டின்  Oaxaca  மாகாணத்திற்கு … Read more

பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நிதிபற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை என பல்வேறு பிரச்சினைகளை அந்தநாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. … Read more

பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலால் எஸ்-400 ஏவுகணை வாங்குகிறது இந்தியா – அமெரிக்க பாதுகாப்புத் துறை தகவல்

வாஷிங்டன்: பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் அடங்கிய ராணுவ சேவைகள் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பெரியர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்புகள் தங்கள் மீதான தாக்குதலை அதிகரிக்கும் … Read more

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் வறுமை பஞ்சம் அதிகரிக்கும்-அமெரிக்கா

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் இந்த ஆண்டு 4 கோடி பேர் கூடுதலாக வறுமைக்கும் உணவுப் பஞ்சத்துக்கும் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கியின் கணிப்பை சுட்டிக் காட்டி ஐநா.சபையில் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐநாவின் உயர் மட்டக்கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், மனிதாபிமான உதவியாக உணவுப் பாதுகாப்புக்கு அமெரிக்கா சார்பில் மேலும் 215 மில்லியன் டாலர் உதவி நிதியை அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்கா 2 புள்ளி … Read more

இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,240 கோடி உதவி: பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்

கொழும்பு: இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,241 கோடி நிதி உதவியை (16 கோடி அமெரிக்க டாலர்கள்) வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி, உணவு பொருட்கள் விலை உயர்வு, வருமான இழப்பு, எரிபொருள் பற்றாக்குறை மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம் எனப் பல பிரச்சினைகளில் இலங்கை தவித்து வருகிறது. இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து அண்மையில் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு … Read more

லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்து ரஷ்யா

ரஷ்யா வெற்றிகரமாக லேசர் ஆயுத பரிசோதனையை நடத்தியுள்ளது. இந்த ஆயுதத்தால் சாட்டிலைட்டுகளையும் டிரோன்களையும் தாக்கி அழிக்க முடியும். 1500 கிலோமீட்டர் பூமிக்கு மேல் நோக்கிப் பாய்ந்து செயற்கைக் கோள்களை இந்த லேசர் ஆயுதம் மூலம் செயலிழக்க வைக்க முடியும். 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஏவி டிரோன்களை வீழ்த்த முடியும். பெரஸ்வெட் என்று அழைக்கப்படும் இந்த ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந்நாடு அறிவித்தது. இந்த ரகசிய திட்டத்தை அந்நாட்டு துணை பிரதமர் யூரி போரிஸ்ஸோவ் தலைமையில் நிறைவேற்றியுள்ளனர். … Read more

US vs Chinia: தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி யாங் ஆகியோர் வட கொரியா மற்றும் தைவானுடன் பேசினர். பிராந்தியத்தில், தனதுநட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா இராணுவ நிலைப்பாட்டில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்தார்.  அமெரிக்கா தரப்பில் சல்லிவனும், சீனாவின் தரப்பில் சீனாவின் உயர்மட்ட அதிகாரி யாஙாகிய இருவரும்  உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் “அமெரிக்க-சீனா உறவுகளில் குறிப்பிட்ட … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: சீனாவின் பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை

பிஜிங், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை. அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில … Read more