ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபுதாபி சேக் காலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் அஞ்சலி.!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபுதாபி சேக் காலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 22 வது சர்வதேச இந்தியத்  திரைப்பட விழா நேற்று கோலாகலமாக அபுதாபியில் நடைபெற்றது.இதில் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறைந்த அபுதாபியின் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சல்மான்கான்,  டைகர் ஷெராப், சாரா அலிகான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் … Read more

பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. குல்பெர்க் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவி கடும் புகை மூட்டமானது. தொடர்ந்து, 3-வது மாடியில் உள்ள மருந்துக் கிடங்கிற்கு முழுவதுமாக தீ பரவியதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ … Read more

இம்ரான் கானை கொல்ல சதித்திட்டம் என்ற வதந்தியால் பதற்றம்.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம்  குறித்த வதந்திகள் பரவியதால் Bani Gala பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இங்கு பிரச்சாரம் செய்ய இம்ரான் கான் வரும் போது அவரைக் கொல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர் Source link

பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்.. கண்ணீர் புகை வீசி கலைத்த போலீசார்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பெரு உள்ளிட்ட பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில், தலைநகர் லிமாவில் ஒன்றிணைந்த மக்கள், அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகுமாறு பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக … Read more

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு சிக்கல்; பணமோசடி வழக்கில் கைது செய்ய புலனாய்வு அமைப்பு கோர்ட்டில் முறையீடு!

இஸ்லாமாபாத், பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகனை கைது செய்ய பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எப் ஐ ஏ) கோரியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல நூறு கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி கோரியுள்ளது. முந்தைய இம்ரான்கான் … Read more

மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்துச்சிதறல்.. 4 கி.மீ சுற்றுப்பரப்பில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்..!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்துச்சிதறி வருகிறது. பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறி வரும் நிலையில் முதல் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன் எரிமலையை சுற்றி 4 கிலோமீட்டர் சுற்றுப்பரப்பிற்குள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிலாவுக்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த எரிமலை அந்நாட்டில் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. Source link

இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்படுவதாக பரவிய தகவலால் பாகிஸ்தானில் பரபரப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியது. இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்லாமாபாத் போலீசாா் கூறுகையில், பாகிஸ்தானின் தலைநகா் இஸ்லாமாத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், பானி காலா பகுதிக்கு வருவார் என கூறப்படுவதை அடுத்து அந்த பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவா் அங்கு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான்கானுக்கு சட்டப்படி என்ன பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமோ அது … Read more

Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் விபச்சாரத்தின் பாதையை தேர்ந்தெடுப்பதாக ஊடக அறிக்கை ஒன்றன் மூலம் தெரியவந்துள்ளது. தி டெலிகிராப் நாளிதழில் வெளியான செய்தியின்படி, நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்கும் விபச்சாரத்துக்கும் தள்ளப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. பணவீக்கம் தினம் தினம் புதிய … Read more

சுவிட்சர்லாந்தில் பிறந்த ஆமைக்குஞ்சு ஒன்றுக்கு அல்பினிசம் எனப்படும் உடல் வெளிறிப்போதல் நோய்..!

சுவிட்சர்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதத்தில் பிறந்த காலபெகோஸ் ஜெயண்ட் வகை ஆமைக்குஞ்சு ஒன்று அல்ஃபினிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்த மற்ற ஆமைக்குஞ்சுகளின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் அதன் உடல் மிகவும் வெளிறிப்போயிருப்பதுடன், அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. 50 கிராம் மட்டுமே எடை கொண்ட அந்த ஆமை ஒருவரது உள்ளங்கை அளவிலேயே உள்ளது. ஆனால் அது பலவீனமாக இல்லை என்றும், 200 வருடங்கள் வரை வாழும் என்றும் பூங்கா மேலாளர் தாமஸ் … Read more

வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு-450 பேர் காயம்

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் … Read more