உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதம்.!

உக்ரைனின் ஒடேசா நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எலும்புக் கூடுகளாக காட்சியளிக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யப் படைகளின் மும்முனைத் தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் சின்னா பின்னமாகி விட்டன. கிழக்கு உக்ரைனின் Sievierodonetsk நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், ரஷ்யப் படைகளின் … Read more

கொண்டாட்டத்தில் பங்கேற்கும் எலிசபெத் ராணி | Dinamalar

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, கடந்த 1952ல் முடிசூட்டப்பட்டார். அவரது 70 ஆண்டு ஆட்சிக் காலத்தை ‘பிளாட்டினம் ஜூப்லி’ என ஓராண்டுக்கு கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக அடுத்த மாதம் லண்டனில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வயோதிகம் காரணமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத ராணி, அடுத்த மாதம் இங்கு நடக்கும் பிளாட்டினம் ஜூப்லி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, கடந்த 1952ல் … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு தொடக்கம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ் பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது பாகிஸ்தானில் இருந்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தலைமையில் 3 பேர் குழு பங்கேற்றுள்ளது. … Read more

பாகிஸ்தானில் மதவழிபாட்டு தலம் அருகே குண்டு வெடிப்பு.. ஒரு பெண் பலி..!

பாகிஸ்தான் கராச்சி மாகாணத்தில் மதவழிபாட்டு தலம் அருகே உள்ள சந்தைப் பகுதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில், பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹரெடார் பகுதியில் சந்தை மற்றும் அதன் அருகே மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில், சந்தை பகுதியில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 12 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் … Read more

கொலை சதிக்கு ஆதாரம் எங்கே? பாக்., முன்னாள் பிரதமருக்கு கேள்வி!| Dinamalar

லாகூர் : ”பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக பாதுகாப்பு தரப்படும்,” என, ஆளும் பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவர் மர்யம் நவாஸ் சவால் விடுத்துள்ளார். கடந்த மாதம் பாக்., பார்லி.,யில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கான், தன்னை கொல்ல சதி திட்டம் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் குடியுருப்பு பகுதியில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு

17.05.2022 04.40: ரஷியப் படைகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 42 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. ஒரு பள்ளி, ஹோட்டல் மற்றும் பல தொழில்துறை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 04.10: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் நடைபெற்ற சண்டையில் சிக்கி … Read more

பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார்.  இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார். 61 வயதான போர்ன்,  பிரான்ஸ் … Read more