பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லமபாத், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 17 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானின் கோலு, கலாட் மற்றும் பஞ்ச்கூர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த இரு தினங்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், பஞ்ச்கூர் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளும், கோலுவில் 5 பயங்கரவாதிகளும், கலாட் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் இருநாள்களில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஜப்பான்: 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து – 2 பேர் பலி

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் கன்மா மாகாணத்தில் கன், எட்சு நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மினஹமி பகுதியில் நேற்று இரவு தொடர் விபத்து ஏற்பட்டது. கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழ்நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் 2 லாரிகள் ஒன்றன்மீது ஒன்று மோதின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் பனிப்பொழிவு, இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. மொத்தம் 67 … Read more

ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு

உக்ரைன், உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான … Read more

தான்சானியா: ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

டொடோமா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்த மலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்த மலைக்கு சுற்றுலா சென்ற பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அந்த சுற்றுலா பயணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடல்நலம் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் மருத்துவமனைகு … Read more

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் – 15 பேர் காயம்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 38 வயதான ஊழியர் இன்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், … Read more

சிரியா: மத வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு – 8 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் இன்று இஸ்லாமியர்கள் மத வழிபாடு செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த மசூதியில் இன்று மதியம் திடீரென குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பில் மசூதியில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் – ஜெலன்ஸ்கி

கீவ், உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 401வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை நீண்ட இழுபறிக்குப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் போர் … Read more

கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து விளக்கம்

புதுடெல்லி, தாய்லாந்து, கம்போடிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 2 வாரங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மோதலில் எல்லை பகுதியில் இருந்த விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘தாய்லாந்து- கம்போடியா எல்லை பிரச்சினை நீடித்து வரும் பகுதியில் அமைந்துள்ள இந்து தெய்வ சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை பார்த்தோம். இந்து மற்றும் புத்த தெய்வங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி … Read more

பெத்லகேமில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

காசா, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே இஸ்ரேல்-காசா போர் காரணமாக பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இயேசு பிறந்த பெத்லகேமில் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக மேஞ்சர் சதுக்கத்தில் இடிபாடுகளுக்கும் முள்வேலிகளுக்கும் மத்தியில் குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காசாவில் போர் போர் நிறுத்தம், ஏற்பட்டதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் … Read more

புதின் அழிந்து போகட்டும்: சாபம் இட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ், ரஷியா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு அமெரிக்க டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கிடையே, அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. இதனால், ரஷியா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார். அந்த … Read more