இலங்கையில் இன்றிரவு முதல் கடும் ஊரடங்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு, இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.  தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், இலங்கையில்  இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. … Read more

அதிபருக்கு பெருமூளை நோய்… நாட்டு மக்கள் அதிர்ச்சி!

உலகை ஆட்டி படைத்துவரும் கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில்தான் முதன் முறையாக கண்டறியப்பட்டது. அங்கிருந்து தான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது என்பதில் பல்வேறு நாட்டு மக்களுக்கு சீனா மீது இன்றும் கோபம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீன மக்கள் அதிர்ச்சி அடையும் விதத்திலும், பிற நாட்டு மக்கள் பரிதாபப்படும் வகையிலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு இறுதியில் பெருமூளை அனுரிசம் நோயால் … Read more

இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர்- அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆதரவாளர்கள் மற்றும் … Read more

அதிகாரத்தை குறைக்க தயார் என கோத்தபய அறிவிப்பு| Dinamalar

கொழும்பு: இலங்கை., பார்லியில் பெரும்பான்மை நிருபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் எனவும், அதிபருக்கானஅதிகாரத்தை குறைக்க தயார் எனவும் அதிபர் கோத்தபயராஜபக்சே தெரிவித்து உள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கலவரம் மூண்டது. இதனையடுத்து தலைநகர் கொழும்புவில் ராணுவம் வீதி உலா வர துவங்கியது.இதனிடையே பிரதமர் பதவி வகித்து வந்த மகிந்த ராஜ பக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார் இந்நிலையில் அதிபர் பதவிவகித்து வரும் கோத்தபயராஜபக்சே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து … Read more

விமான பயணத்தில் மாஸ்க் கட்டாயமில்லை; கொரோனா விதிகளை தளர்த்தியது EU

கொரோனா பரவல் தொடங்கி கிட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் உலகம் எங்கும் படிப்படியாக குறைந்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும் விமானங்களிலும் மாஸ்க் அணிவது  இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை கூறியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்துடன் இணைந்து எடுத்த … Read more

இஸ்ரேல் படைகளால் பாலஸ்தீனப் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை.!

இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு படையினரால், சுட்டு கொலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரை சக பத்திரிக்கையாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காணொளி வெளியாகி உள்ளது. அல்ஜசீரா செய்தி நிறுவன பத்திரிக்கையாளரான ஷிரீன் அபு, இஸ்ரேல் படைகள் ஜெனின் நகர அகதிகள் முகாமில் சோதனையிட்ட போது செய்தி சேகரித்து கொண்டிருந்தார். அப்போது இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவரது தலையில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக உடையை அவர் அணிந்திருந்த போதும், இஸ்ரேல் வீரர்களால் … Read more

பாதுகாப்புக்காகவே ராஜபக்சே கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே, கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்நாட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்ளை மக்கள் தீவைத்து எரிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதால், மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினர், … Read more

ரஷ்ய தாக்குதலில் கை, கால்களை இழந்த அசோவ் படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு..!

மரியுபோல் உருக்காலையில், கை, கால்களை இழந்த நிலையில் உள்ள வீரர்களின் புகைப்படங்களை உக்ரைனின் அசோவ் படையினர் வெளியிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவக் குழுவினரால் அமைக்கப்பட்ட அசோவ் படைப்பிரிவு, கடந்த 8 ஆண்டுகளாக டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கங்களுடன் போராடி வந்தனர். மரியுபோல் உருக்காலையில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய நிலையில், அங்கு முகாமிட்டுள்ள அசோவ் படையினர் மீது ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. இதில் படுகாயமடைந்த வீரர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Source link

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்| Dinamalar

கீவ்:உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், இரண்டரை மாதங்களை கடந்து விட்ட நிலையில், ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது, ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஒலியை விட, ஐந்து மடங்கு வேகத்தில், 2,000 கி.மீ., தொலைவு சென்று, இலக்கை தாக்கி அழிக்கும், ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில், ஒடேசாவில் உள்ள ஒரு வணிக வளாகம் பலத்த சேதம் அடைந்தது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார்; நான்கு பேர் … Read more

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் மரணம்

இஸ்ரேல் படைகள் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் … Read more