சீனாவில் விமான விபத்து: 133 உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி வீடியோ

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலி என தகவல் வெளியாகியுள்ளது.    pic.twitter.com/NqCFtX5EcT — ShanghaiEyeofficial (@ShanghaiEye) March 21, 2022 விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்புக்குழு விரைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

சீனாவில் 133 பயணிகளுடன் போயிங் விமானம் விபத்து: மீட்புக் குழுக்குள் விரைவு

பீஜிங்: சீனாவில் 113 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு விவரம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விபத்து சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் உஸோ நகரின் வெளியே நடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியதால் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து பகுதிக்கு மீட்புக் குழுக்கள் … Read more

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து.!

சீனாவில் விமான விபத்து 133 விமான பயணிகளும் விபத்தில் பலி? சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது டென்சியாங் என்ற பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் விபத்தில் சிக்கியது குன்மிங் நகரத்தில் இருந்து குவாங்சூ மாகாணம் நோக்கி விமானம் சென்ற போது விபத்து தெற்கு சீனாவில் உள்ள மலைப் பகுதியில் விமானம் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சி வெளியானது விபத்தில் பயணிகள் உயிரிழப்பு குறித்து இன்னும் … Read more

Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன விமானம் விழுந்து நொறுங்கியது!

133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இதனால், தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்துள்ளது; உயிரிழப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டியில் மலைத் தீயை ஏற்படுத்தியது. தென்மேற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக … Read more

உக்ரைன் – ரஷ்யா போர்: போலந்து செல்கிறார் ஜோ பைடன்!

உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து விவாதிக்க, வரும் 25 ஆம் தேதி, போலந்து நாட்டிற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சோவியத் யூனியனில் இருந்து, உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, அந்நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள மக்களின் பழக்க வழக்கம், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை ரஷ்யாவுடன் ஒத்து போவதால், அந்நாட்டை, தங்களது நாடாகவே, ரஷ்யா கருதி வருகிறது. இந்த பிரச்னை ஒரு … Read more

உக்ரைன் – ரஷ்யா போரால் இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் – ஐ.நா அகதிகள் பிரிவு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் இதுவரை ஒரு கோடி பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா அகதிகள் பிரிவு இயக்குனர்  Filippo Grandi  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த எண்ணிக்கையில் உக்ரைன் நாட்டிற்குள் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களும் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைனில் Luhansk பகுதியில் உள்ள முதியோர் இல்லம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது அங்கு மனிதாபிமான நடவடிக்கைகள் மோசமடைந்து வருவதையே காட்டுவதாக … Read more

கோழி இறைச்சி ரூ.1,000, டீ ரூ.100, முட்டை ரூ.36, உளுந்த வடை ரூ.80: மீண்டும் உயர்ந்த கேஸ் விலையால் தவிக்கும் இலங்கை மக்கள்

கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1000-ஆகவும், தேனீர் ஒரு கப் ரூ. 100 ஆகவும், ஒரு முட்டை விலை ரூ.36 ஆகவும் விற்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் … Read more

நேரு வகுத்த பாதையில் மோடி.. உக்ரைன் போரில் நடுநிலைக்கு காரணம் இதுதான்!

உக்ரைன் விவகாரத்தில், 1957ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு வகுத்த பாதையில்தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடி நடை போடுவதாக தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி இதுதொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக குவாட் அமைப்பும் கூறியுள்ளது. உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு பாராட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் … Read more

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜிலின் நகரத்தில் முழு ஊரடங்கு.!

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜிலின் நகரத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  Source link

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாருங்கள்.. இம்ரான் கான் திடீர் பாராட்டு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை திடீரென பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. பிரதமர் இம்ரான் கான் நிர்வாகத் திறமையற்றவராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்த நிலையில் தனது அரசின் சாதனைகளை விவரித்துப் பேசியுள்ளார் இம்ரான் கான். கைபர் பக்துன்வாலாவில் உள்ள மலகந்த் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசினார். அப்போது … Read more